Saturday, September 24, 2016
மேடம் ஜெயா
சிங்கப்பூர்...
செய்திகள் பலவாறு வந்தடைகிறது எது உண்மை எது அதிகாரபூர்வ அறிவிப்பு என்று யாருக்கும் தெரியாது சசிகலாவை தவிர..
எதிரிகள் யோசனை சொல்கிறார்கள் கூட இருப்பவர்கள் சரியான தகவலை தராமல் எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள்.. சில தொலைபேசி அழைப்பில் மூன்று நாளைக்கு தேவையான அத்திவாசிய பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள் என சொன்னதாக சில சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்கள்..
மருத்துவமனை நலமாக உள்ளதாக அறிக்கை தந்துவிட்டு இன்று வீட்டுக்கு திரும்புவார் என சொன்னதில் உண்மையில்லை..ஏனெனில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் சொல்கிறது..
..
சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பின் தேதியை வரும் நாட்களில் உச்சநீீதிமன்றம் அறிவிக்க இருக்கிறது திங்கட்கிழமை தேதி குறிப்பிடலாம் என மூத்தபத்திரிக்கையாளர் சொல்கிறார்.. அதற்குள் உடல்நிலையை காரணம் காட்டி சிங்கப்பூர் சிகிச்சையென சென்றுவிட்டால் தீர்ப்பின் தேதியை மாற்றலாம் அதற்குள் சிறிய அவகாசம் கிடைக்கும்.. நீதிபதிகள் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு வேறொருவர் வரகூடும் என சொல்லப்படுகிறது..
நிறைய வதந்திகளும் கூடவே பொய்களும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த சந்தேகங்களை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது..
..
ஜெயலலிதா அரசியல் வாழ்வு நிறைய மர்மங்கள் நிறைந்த திகில் கதையைபோலதான் இருக்கிறது..யாருமே அறிந்திட கூடாதென்பதில் அதிகவனம் செலுத்தப்படுகிறது.. எப்போதுமே இவரது அரசியல் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருந்ததில்லை.. காற்றினில் வரும் செய்திகள் மட்டுமே..
..
மற்றவர்கள் உடல்நிலையை கிண்டல் செய்து ரசித்தவர் பின்னாளில் நமக்கு வருமென அறியாமல் போனார் .. கட்டவண்டி சக்கரநாற்காலி என்றெல்லாம் பேச கேட்டவர் இப்போது வரும் சேதிகளை பார்க்கும்போது உண்மையில் வருத்தமே வருகிறது..
கலைஞர் விரைந்து குணமடைய வேண்டி விழைகிறார்.. #இன்னாசெய்தாரை...
..
எல்லாவற்றையும் நம்பவைக்க இரும்புத்திரை அமைக்கப்பட்டு அதில் வாழ்வது அவ்வளவொன்றும் சுகமான செய்தி இல்லை..
யாரோ இயக்குகிறார்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment