Wednesday, September 7, 2016
உண்மை பொய்
இறந்தவரை உயிரோடு எழுப்ப செய்த அலப்பறை..
நித்யானந்தாவுக்கு ஒரு ஜே போடுங்கள்..
யேசுவோடு பேசுவேன்.. ஜின் களோடு பேசுவேன் என்கிற பித்தலாட்டகாரர்களை நம்புகிறவர்கள் இருக்கிறவரை இதுபோன்ற செயல்களை தடுத்திடமுடியாது
மூடநம்பிக்கையை வளர்த்தெடுக்க மக்கள் மனதில் விதைக்கிற கூட்டமிது.. இறைநம்பிக்கை என்கிற ஒற்றை விடயத்தை வைத்துக்கொண்டு கடவுள் பற்றிய மனிதனின் பயத்தை கருவியாக்கி இறைவனை லெவலுக்கு தன்னை உயர்த்திக்கொள்கிறவர்கள் இங்கே அதிகம்..
சிறியளவில் .. உங்கள் அருகாமையில் தாயத் முடிந்து தருகிறவர்கள் தொடங்கி ஆசிரமம் நடத்தி செல்வம் கொழிக்கிறவர்கள் வரை .. அவர்கள் அறிவார்கள் மக்களின் மடமையை அவர்கள் தெளிவுபெறுகிறவரை மட்டுமே பயன்படுத்த முடியுமென்று..
..
சிறியதொரு கேள்வி மாத்திரம் கேளுங்கள் ...
எப்படி இது சாத்தியமென்று கடையை அடைத்துவிட்டு வேறு கடை போட்டுவிடுவார்கள்..எல்லா மதங்களிலும் இதுபோன்ற மூடநம்பிக்கை மக்கள் மனதில் பதியவைத்து அதை சிறுதுகூட யோசிக்காதபடி மக்களை மயக்கத்தில் வைத்திருப்பதில்..மெய்ஞான குரு தொடங்கி..ஜகத்குருவரை..
இவர்கள் தங்களின் உடல் உயிர் என்று வருகிற போது இவர்கள் கைவசம் உள்ள மந்திரத்தையோ வித்தைஜாலத்தையோ நம்புவதில்லை மாறாக கைகேர்ந்த அதிகம் கற்ற பிரபலமான மருத்துவரை அதுவும் உயர்தர சிகிச்சையை நம்புவார்கள்..
சிறிய பல்வலி என்றால் கூட முதன்மை மருத்துவரைதான் நாடுவார்கள்..
..
மரணம் நிச்சயமானது அதில் மாற்றமில்லை
நீ இந்த உலகில் வாழ்ந்துக்கொண்டிருப்பது நிஜம்..
இந்த உலகின் இயற்கை உனக்களித்தவற்றை உன் அறிவு கொண்டுபார்.. எது உண்மை என்பதும் எவையெல்லாம் உன் அறிவு ஏற்கவில்லையோ அதை தவிர்..
ஏதெல்லாம் சாத்தியமில்லை என்பதை அறி..இயல்பாக இயற்கையோடு இணை..
வாழ்வு வசந்தமாகும்.. உன் போக்கிற்கு வளைத்தொடிக்கிறபோதுதான் இயற்கை எதிர்மறையான உந்துதலை உன்மீது திணிக்கிறது..
..
கடவுள் நம்பிக்கை என்பதுவேறு அதில் உன் சௌகரியத்திற்காக வேண்டாத வேலைகளை திணிக்கிற போது அதை நம்பவைக்க நீ நடத்தும் எல்லாம் மூடநம்பிக்கையென்றேபடும்..
எளிமையாக சிந்தி..
#இருக்கிறது_இல்லை #நல்லது_கெட்டது #உண்மை_பொய்..இருக்கலாமென்றால் அதில் பொய்யை கலக்க முயற்சிக்கிறாய்..
அவ்வளவுதான்..
..
#மனிதனைநினை_அதுவேமகத்தானது..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment