Sunday, September 25, 2016

திணமணி.....வைத்தி..

சமூக வலைதளங்களில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்ததையெல்லாம் பதிவேற்றம் செய்வதால் சமுதாயம் குப்பையாகிறது .. வைத்தியநாதன்.. கல்வி அறிவு எழுத்து இவையெல்லாம் பார்பனர்களுக்கு மட்டுமே வேண்டுமென்ற சித்தாந்தம் மற்றவர்கள் எழுதினாலோ பேசினாலோ அதை தடுத்திட குறைகூற உடனே வருவார்கள்.. சமூக வலைதளங்கள் வந்த பிறகுதான் மக்களின் எண்ணவோட்டத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது.. அதுவரை பார்பனர்களின் செய்திகளை மட்டும் படித்துணர்ந்தோம்.. ஆரம்பகாலங்களில் ஆனந்தவிகடன் கல்கி போன்ற வார இதழ்கள் கூட பிராமணபாஷை தான் பேசியது..அவர்கள் கருத்துகள் செயல்கள் மட்டும் முன்னெடுக்கப்பட்டது /வெளியிடப்பட்டது. .. சமூகவலைதளங்களில் வேண்டாதவைகள் இல்லாமல் இல்லை அது மிகப்பெரிய தாக்குதலை கூட தரகூடும் ..நிறைய விளைவுகள் கூட தந்திருக்கிறது அது மொழி இன மத ஜாதி பிரச்சனைகளை தந்திருக்கிறது அதே வேளை அவை அனைத்திற்குமான மறுப்பக்கத்தை /உண்மைநிலையையும் மக்களிடம் விரைந்து கொண்டு சேர்த்திருக்கிறது.. .. வைத்திக்கள் ஏன் அஞ்சுகிறார்கள்.. தங்கள் சித்தாந்தத்தை கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியவில்லை உடனேயே அது மறுதலிக்கப்படுகிறது மறுவினையாற்றுகிறதென நினைக்கிறார்கள்.. முன்பு திரு.சிவராமன் ஆசிரியராக இருந்தபோது இதுபோன்ற வன்மங்களை இனத்தின் மதத்தின் மீதான அடித்தமர்தலை செய்யவில்லை சிறியளவிலேனும் ஊடகதர்மம் கடைபிடிக்கப்பட்டது.. வைத்தி போன்றவர்களின் வரவிற்கு பிறகு ஏறக்குறைய பாசிசம் சார்ந்த பத்திரிக்கையாக தெரிகிறது.. இப்போது மிகவும் குறைந்தளவே விற்பனையாவதாகவும் Indian express வாங்கினால் இலவசமாக தரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.. எக்காலத்திலும் பார்பானை நம்பமுடியாதென்றார் புரட்சிகவிஞர் எப்பாப்பானாயினும் தமிழர் தலையை தடவப்பாப்பான் என்றார் பார்ப்பனர்கள் ஏடெழுதும் பாழ்நிலைமை போகுமட்டும் சீர்த்தபெரும் நாட்டிற்கு சிறிதேனும் நன்மையில புரட்சிக் கவிஞர் பாவேந்தர் .. .. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை இவையெல்லாம் பழங்கதைகள்... #எழுதுகோல்_ஒருஇனத்திற்குமட்டும்_சொந்தமானதல்ல... .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment