Monday, September 12, 2016
காதல் மௌனம்
சொல்லடி
சுகம்தரும் சேதியென்றேன்.
..
சொல்வதால் சுகமெனில்
சொல்லின் சுவைகூடும்
சொல் மட்டுமே சுவையாகும்
சொல் ..
வார்த்தையின் சதிராட்டம்
வளைந்து நெளிந்து
சலங்கைகட்டி ஆடும்..
சொல் வார்த்தையை
வளைத்தொடித்து
வண்ணம் தீட்டி
சொல்லவந்தை
தின்றே தீர்க்கும்.
சொல்லவா நானென்றாள்..
மௌனமாய் நகர்ந்தேன்..
இழுத்தணைத்து..
கண்களால்..
கவிதைமொழி சொன்னாள்.
..
உள்ளம்
உண்மைபேசும்
உன்னதமாய்..
உள்ளதை சொல்லும்
மனம் பேசும்
மொழிக்கெதற்கு வார்த்தை
விழிகளை உருட்டி
உள்ளத்தை குடைந்தெடுக்க
வார்த்தையெதற்கு.
எண்ணத்தில் உள்ளதை
உள்ளத்தில் வரைந்திட
எதற்கு மொழி..
எழுத்தை விட
இதமாய் .. இன்பம் சேர்த்து
மௌனமாய்..
கருவிழி சொல்லிவிடும்
மௌனமாய் ஊடுறுவி
ஆழ ..பதிந்துவிடும்..
ரணமாய். அதுவே மருந்தாய்..
..
#மௌனம்_சிறந்தகாதல்மொழி.
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment