Thursday, September 15, 2016
காவிரி
காவிரி பிரச்சனையில் ஆள்பவர்களை விட ஆண்டவனிடம் கேட்பது மேல் இல.கணேசன் எனும் தஞ்சாவூர்காரன்..
..
சரியாக தான் சொல்லியிருக்கிறார் ஆண்டவனை நம்புங்கள் தமிழகத்தை ஆண்டவனை நம்பி கேளுங்கள்.. கலைஞர் பெருமகன் ஆட்சியிலிருந்தபோதெல்லாம் குறுவை கூட நடப்பட்டது.. முன்கூட்டி பேச்சுவார்த்தை, நீரை விரையம் செய்யாமல் கடைமடைக்கு செல்லும் வழிநெடுக தூர்வாரல் கடைமடைக்கு சென்ற பிறகே
முதல்மடைக்கு நீர்திறப்பு.. என திட்டமிட்டு செயலாற்றல் .. ஆற்றின் நடுவே சிறிய சிறிய தடுப்புசுவர்கள் தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்பாட்டிற்கு பெரும் உதவியது இவையெல்லாம் செயல்படும் முதல்வராலும் அமைச்சர்களாலும் செயலாற்றிய அரசாலும் முனைப்போடு செயல்பட்ட அதிகாரிகளாலும் நடந்தது..
..
தண்ணீரை கேட்க தெரிந்த நமக்கு வாய்க்கால்கள் தூர்வார படவில்லையே என கேட்க தோணவில்லை
இன்னமும் மௌனமாய் கடந்து செல்வதை கேட்க துப்பில்லை.. மொத்த தமிழகமும் உணர்வால் கோபகனலில் தகித்துக்கொண்டிருக்க உறுப்பினர்சேர்க்கையென அரசியல் செய்வதை கண்டிக்கவில்லை.. ஏன் இதுவரை அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டவில்லையென்றோ .. பிரதமரை ஏன் சந்திக்கவில்லையென்றோ கேட்கவில்லை மாறாக ஆண்டவனிடம் கேளுங்கள் என பஜனை பாட வருகிறார் இல.கணேசன்..
..
இல.கணேசன் அவர்களே .. கர்நாடக பாஜகவினர்தான் கலவரத்தை நடத்துவதாக பிரதமரிடமே மாநில முதல்வர் சித்தராமையா முறையிட்டிருக்கிறாரே.. அதை மறுத்தோ,கட்சியினரை கண்டித்தோ ஏன் அறிக்கைவிடவில்லை இதையும் ஆண்டவன் பார்த்துக்கொள்வாரோ..
..
கர்நாடக கலவரத்தின் பின்னில் கர்நாடக பாஜக என்பது யாவரும் அறிந்தவிடயம்..
காவிரி பிரச்சனையில் தலையிட முடியாதென்ற பிரதமர் .. கேவலமாக இல்லையா.. நாட்டின் இருமாநிலத்தின் பிரதான பிரச்சனையில் இருமாநில மக்களின் உணர்வில் கலந்த ஒருவிடயத்தை கண்டுக்கொள்ளாத நாட்டின் பிரதம அமைச்சர்.. தமிழக பாஜகவின் நிலையை மட்டும் சொல்லுங்கள்.. முழுஅடைப்பில் கலந்துக்கொள்வதில்லையென்ற தமிழிசையின் பாட்டுக்கு எதிர்பாட்டுபாடும் வானதி..
யார் சொல்வது உண்மை.. அதைமட்டும் சொல்லிவிட்டு ..
#வாய்மூடிஇருக்கவும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment