Friday, December 31, 2021

இப்படியொரு முதலமைச்சர் கிடைத்ததற்கு கொண்டாடி தீர்க்கவேண்டும் ..
மனிதர் என்னமாய் உழைக்கிறார் எனும் குரல் ஓங்கியொலிக்கும்போதே கூடவே கவனம் முதல்வரே எனும் கரிசனம் கூட கேட்கிறது ..
..
தஞ்சையில் திருச்சியில் மூன்றுநாள் பயணம் முடித்து சென்னை வந்தவர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்காமல் அதிகாரிகளை நள்ளிரவில் அழைத்து சென்னை மழை குறித்து விவாதிக்கிறார் .. பாழாய் போன பத்தாண்டால் தொடரும் அவலம் குறித்து கவலைக் கொள்கிறார் .. அடுத்த பருவத்தில் நீர்தேங்கா சென்னை வேண்டுமென வல்லுநர்களை அமைத்து திட்டம் தீட்டுகிறார் .. 
சாதியை வைத்து அரசியல் செய்யலாமா, மதவெறியை தூண்டி பிறமதத்தவரை வம்பிக்கிழுத்து காலூன்றலாமா, இனம் தேசியம் மொழியென திசைதிருப்பலாமா என்கிற சிந்தனையில் சில அரசியல்வாதிகள் செயல்படும்போது இவரோ எதைப்பற்றியும் கவலையில்லை மக்கள் தந்த வாய்ப்பை சரியாக செய்தானிவன் என வரலாறு பேசவேண்டும் என உழைத்துக்கொண்டிருக்கிறார் 
..
அரசியல் செய்ய எதிரிகளை பழிவாங்க பகைவர்களை இல்லாதாக்க வழிகள் கிடைத்தும் சட்டமும் நேர்மையாய்  செயல்படவேண்டும் இங்கே யாவர்க்கும் நான் முதலமைச்சர் 
என நெறியோடு அரசியல் செய்கிறார்.. பகையை அறிந்திருக்கிறார் .. ஏற்ற கொள்கையில் தெளிவும் திராவிட தந்த கொள்கையில் பிறழாமல் சமூகநீதியை நிலைநாட்டி சமத்துவம் செய்திடவே இங்கு வந்திருக்கிறேன் .. ஒற்றைநாளில் கிடைத்திடவில்லை .. தோளால் நூலால் கிடைத்திடவில்லை ஒவ்வொரு அடியும் செதுக்கியது  திராவிடப் பேராசான்கள் வழிகாட்டி வளர்த்தெடுத்தவன் பயணத்தில் தெளிவுண்டு இலக்கு அறிவேன் .. இடர்களும் விமர்சனங்களும் மேம்படுத்தவே அன்றி திமுகவே அசைத்திட முடியாது அதன் தலைவன் என்கிற திமிர் உண்டு .. மக்கள் பணியில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் சகித்து கடமையாற்றுவேன் என 
எம் முதல்வர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் செயல்படுகிறார் ..
பேரருளாளன் கலைஞர் சொன்னது தான் 
ஸ்டாலின் என்றால் 
உழைப்பு உழைப்பு உழைப்பு 
..
10 வருடமாக குட்டிசுவராக்கி வைத்திருக்கிறார்கள்
விமர்சனம் செய்ய தயாராக இல்லை  அடுத்த மழை சீசன் வருவதற்குள் சரிசெய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார்..
சொல்வதை செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்குண்டு விரைந்து செயல்படும் முதல்வர் தமிழகத்தின் விடிவெள்ளி 
இப்படியொரு முதலமைச்சர் கிடைத்ததற்கு நாம் கொண்டாடி தீர்க்கவேண்டும் ..
..
ஆலஞ்சியார்

Wednesday, December 22, 2021

 
பேச்சுரிமை பற்றி எங்களுக்கு பாடமெடுக்க வேண்டாம்..,
விமர்சனங்களும் வன்சொற்களையும் நிறைய கேட்டு பழகியவர்கள் .. விமர்சனம் என்ற பெயரில் கேடுகெட்ட தீய எண்ணங்களை கடும்சொற்களை நூற்றாண்டுகள் கடந்தும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இடது கையால் தள்ளியவர்கள் தான்..
ஆனால் .. எங்கள் கொள்கையை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு .. ஆனால் தனிநபர் தாக்குதலை கேவலமாக சித்தரிப்பதை தொடர்ந்தால் எங்களுக்கும் கம்பை கையிலெடுக்க தெரியும் என சொல்வந்ததை தான் நேற்றைய தினம் நாதக தம்பிகள் மீதான தள்ளுமுல்லு.. 
தம்பிகள் பேசியதில் சில..

தி.மு.க வுல ஒவ்வொரு மாவட்டச்செயலாளரும் கலைஞருக்குப் பிறந்தவனுகதான்..

நாப்கின் அட்டையை ராசாத்திக்கு குடுப்பியா..
ஒரு அப்பனாத்தாளுக்கு பொறந்திருந்தா.. அவர்களின் உடல்மொழி மிக கேவலமாக இருக்கும்.. இப்படி பேசியும் மௌனம் காத்தோம் .. இவர்கள் தகுதியற்றவர்கள் வீணான விந்தின் விளைச்சல்கள் என அறிவோம் .. ஆனால் செருப்பை தூக்கி காட்டியபிறகு அமைதியாக செல்ல இயலாது அவர்கள் நோக்கம் கலவரம் அதை பாஜக செய்யாது அதற்கு அடியாள்கள் தேவை அதை சரியாக செய்ய நாதக தம்பிகளால் முடியுமென நம்பி பொறுப்புதரபட்டிருக்கிறது .. ஆனால்  திமுக சரியாக அறியாததால் ஆடுகிறார்கள்..
..
ஒருவர் மீது அல்லது இயக்கத்தின் மீது விமர்சனம் என்ற பெயரில் எதைவேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்றால் அது சிறந்த நடைமுறையாகாது .. தொடர்ந்து 'நாதக' சிலவண்டுகள் அறிவிலித்தனமாக பேச தொடங்கியவர்கள் ஆபாசமாக மாறி செருப்பை கழட்டி காட்ட தொடங்கியதும் களம் மாற தொடங்கியது ..
திமுக மீது தொடர்ந்து பொய்யான பரப்புரையை செய்து புலிகள் மீது பொதுவெளியில் வெறுப்பு வர காரணமானவர்கள் இவர்கள் .. திமுகவிற்கு  ஈழ துரோக பட்டத்தை சுமத்தி பிழைப்பு நடத்தும் இந்த கும்பலுக்கு ஈழ வரலாறும் தெரியாது
பிரபாகரனைப் பற்றியும் முழுமையாக அறிந்துமில்லை..
..
திராவிட இயக்கங்கள் ஈழத்திற்கு இழந்ததெல்லாம் கணக்கிட்டால் இன்னும் பலதலைமுறைக்கு ஈழத்தமிழர்கள் நன்றிகடன் பட்டிருக்கவேண்டும்.. எதையும் எதிர்பார்க்காமல் செய்தவர்கள் திமுகவினர்.. ஈழ இறுதிபோரில் திமுகவும் கலைஞரும் துரோகம் இழைத்ததாக சொல்லி திரியும் இவர்கள் அறியமாட்டார்கள் "இவர்களே தேடிக்கொண்ட அழிவு என்று ".. ஈழ மக்கள் இந்த நாதக கும்பலை அறிவார்கள் பணத்திற்காக பொய்பேசி திரியும் கயவர்கள் என்று .. வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்கள் பிரபாகரன் வைத்திருத்த நிலை என்ன.. ஒரே ஒரு போட்டோ வைத்துக்கொண்டு கற்பனைகதைகளை (ஆமைக்கறி தோளில் சாய்வார்) 
என தொடர்ந்து புளுகும் கயவன் சீமான்..
..
பழைய திமுகவைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் 
ஒரேயொரு உதாரணம்
வை.கோபால்சாமி கட்சியிலிருந்து நீக்கபடுகிறார்.. அவரோடு ஒன்பது மாவட்ட செயலர்கள் தினகரன் கந்தசாமி போன்றவர்கள் செல்கிறார்கள் திமுகவிற்கு உரிமை கோருகிறார் வைகோ.. திமுக பொதுக்குழு தஞ்சையில் கூடுகிறது குருதயாள்சர்மா மண்டபத்தில் காலையில் பொதுக்குழு முடிந்து கலைஞர் ஓய்வெடுக்க வருகிறார் மாலையில் திலகர் திடலில் பொதுக்கூட்டம் .. நடத்தவிடமாட்டொமென  என வைகோ விசுவாசிகள் பேச கலைஞர் காதுக்கு செய்தி வருகிறது .. உடனே என்ன மணி(கோ.சி.மணி) உன்னை நம்பிதானப்பா வந்தேன் என்கிறார் .. இங்கே இரு வருகிறேன் என திடலுக்கு விரைகிறார்.. யார்றா .. அவன் இங்கே தான் கூட்டம் நடக்கும் எவனாவது கலாட்டா செஞ்சீங்க  இங்கேயே புதைச்சுருவேன் என கர்ஜித்தார் .. சத்தம் போட்டவனெல்லாம் பதுங்கிவிட்டார்கள் ..  திரும்ப வந்த மணி அண்ணன் "போய் பேசு போ" என சொன்னார் கலைஞரின் கண்களில் கண்ணீர் வந்தது .. அப்படிபட்ட
தளபதிகளும் தொண்டர்களும் உடன்பிறப்புகளை கொண்ட இயக்கம் .. அமைதியாகவே இருப்போமென கருதுவது சிறுப்பிள்ளைத்தனம் .. 
..
நாதக தம்பிகள் சீமானை நம்பி மாட்டிக்கொள்ளாதீர்கள்.. இளையாங்குடியில் எதுவும் நடக்கலாம் கலவரம் செய்ய திட்டமிடுகிறார்கள் கைது செய்து அசம்பாவிதம் நடக்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் .. 
நாதக தம்பிகள் கவனம் .. 
..
ஆலஞ்சியார்


Sunday, December 12, 2021

கருத்து சுதந்திரம் 
ஒருவர் வாய்க்குவந்தபடி பேசுவதும் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளிவீசுவதும் தனிநபர்களை கேவலபடுத்துவதும் தொடர்ந்து செயல்படும்போது அவர் கண்காணிக்கபடுகிறார் .. சரியான நேரத்தில் கைதுநடவடிக்கை என்றவுடன் பதறுகிறார்கள் ..
..
எது கருத்துசுதந்திரம் 
திமுக தேசதுரோக கட்சியென தொடர்ந்து குற்றம்சாட்டுவது தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பா..? என கேள்வி எழுப்புவது ஸ்டாலினை கடுமையாக விமர்சிப்பதென தொடர்ந்து பேசிவந்த மாரிதாஸ் 
முப்படைத்தளபதி மரணம் குறித்து சந்தேகம் என்ற பெயரில் ட்விட் செய்ய எலி பொறியில் மாட்டிக்கொண்டது ..
..
விமர்சனம் செய்வதற்குமுன் அதற்கான தகுதியை பெற்றிருக்கவேண்டும்.. "முற்போக்கு" பார்ப்பனர்கள் கூட மாரிதாஸின் வீடியோக்களை தொடர்ந்து இரண்டு நிமிடம் பார்க்க முடியாது என எழுதுகிறார்கள் .. அவரது பேச்சு செயலும் கழிசடைத்தனம் .. ஆனாலும் திமுக இதுவரை பொறுமைகாத்ததே தவறென்று நினைக்கிறேன் ..
..
கிஷோர் கல்யாணராமனுக்கு பதறாத பாஜக இப்போது பதறுவதன் நோக்கம் புரிகிறது மாரிதாஸை இயக்கியவர்கள் "குரு" உச்சத்திலிருந்தாலும் வளையத்திற்குள் வரநேரிடும் என அஞ்சுவதும் தொடர் கைதுகள் சரியான பாதையில் சென்றால் பாசிசக் கூட்டம் சிதறும், எண்ணிய எண்ணங்கள் ஈடேறாமல் போகுமென அறிவார்கள் ..அதனால் தான் பதற்றம் அதிகரிக்கிறது 
..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அரசு காத்திருந்து கொத்தும், ஆடவிட்டு அடிபலமாக  விழவேண்டுமென அமைதிகாக்கிறது .. இன்று கருத்து சுதந்திரம் என பொங்குகிறவர்கள் விமர்சனம் என்ற பெயரில் பொய்களை அள்ளிவீசும் போது எங்கே போனார்கள் .. சாக்கடைநீரை வீசும் போது நாறும் என அறியவில்லையா ..
இன்னமும் இருக்கிறது .. மதவெறி சாதிவெறியை தூண்டி, குற்றவாளிகளை ரௌடிகளை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய கலவரம் செய்யவேண்டுமென திட்டமிடுவதும் அதை திமுக இடதுகை கொண்டு கையாள்வதும் நாம் காண்கிறோம் ..
..
எங்க பொறுமையை சோதிக்கவேணாம் என்கிறார் பாஜகவின் அண்ணாமலை .. 
"எங்க சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா " எனும் வடிவேலு காமெடி நினைவிற்கு வருகிறது ..
ஆளுநரை பார்த்தாலும் வேலைக்கு ஆகாது .. அதுசரி பாஜக உறுப்பினரே அல்லாத  மாரிதாஸுக்காக பதறுகிறவர் பாஜக உறுப்பினரான கல்யாணராமனுக்கு இவ்வளவு வேகம் காட்டவில்லையே.. புரிகிறதா..
..
கடைசியாக..
பாசிசத்தை பாஜகவை எதிர்த்து பேசியதற்காக ஆனந்த டெல்டும்பே, கவுதம்,
நெல்லை கண்ணன் போன்றவர்களை சிறையில் அடைத்தும், பாஜக சித்தாந்தத்தை எதிர்த்தார்கள் என்பதற்காக கௌரிலங்கே கல்புர்கி, பன்சாரே போன்ற அறிஞர்கள் கொன்ற கூட்டம் "கருத்து சுதந்திரம்" பேசுவது தான் கொடுமை.. 
உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி அவர்கள்.. 
ஒரு முதலமைச்சரால் எவ்வளவு  அதைவிட அதிகமாக தமிழ்நாடு முதலமைச்சர் உழைக்கிறார்  அவரை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காதீர்கள்"  என்றார் ..
ஆனால் 
நாங்கள் விமர்சனம் செய்வதை கூட வரவேற்கிறோம், குறைகூறவில்லை ஆனால் அவதூறை பரப்பாதீர்கள் ..  
மீறும் போது  கைது என
கதறவேண்டிவரும் .. சரியான நடவடிக்கையை வரவேற்போம்.. 
..
ஆலஞ்சியார்

Saturday, November 27, 2021


அன்பின்,  
தமிழ்நாடு முதலமைச்சர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு 
கனிவோடு ஒரு மடல் 
..
இந்த கடிதம் சாமானியனின் எதிர்பார்ப்பும், கவலையும் அடங்கியது .. திராவிடச் சித்தாந்தத்தால் கவரபட்டு 
பெரியாரை அண்ணாவை கொண்டாடி, மானமிகு கலைஞரை கண்டும் படித்தும் வந்ததின் பலனாய், சமூக அக்கறையோடு எழுதுகிறேன் ..
..
சிறைவாசிகள் விடுதலை..
நீண்டகாலம் சிறையில் தங்கள் இளமையை தொலைத்துவிட்டு வாழ்வின் இனிமைகளை எல்லாம் சட்டென்ற உணர்ச்சி மிகுதியில் இழந்துவிட்டு குடும்பம் தன்னை நம்பியிருப்பவர்கள் என யாரையும் பொருட்படுத்தாமல் சதியில் விழுகிறோமென அறியாமல்,  நீண்ட சிறைவாசத்தை அனுபவிப்பவர்கள் .. சிறைதண்டனை என்பதே அவர்கள் தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் இனியேனும் சமுதாயத்தில் நல்லமுறையில் வாழவேண்டும் என்ற பயிற்சியாக அமைதலே அதன் நோக்கம் ..
..
பல்வேறு வழக்குகளில் சிறைதண்டனை பெற்றவர்கள் "அண்ணா" பிறந்தநாளில் விடுதலை செய்வதை நாம் வரவேற்றிருக்கிறோம்.. சிறைவாசிகள் விடுவிப்பதில் மதம் தடையாக இருப்பதும் மதகலவரங்களில் மதமோதலில்
மத வன்முறையில் ஈடுபடுபவர்களை விடுவிப்பதற்கு தடையாக இருப்பதாக சொல்வதை நாகரீக சமுகம் ஏற்காது .. குற்றம் எதுவாகினும் நீண்ட தண்டனைக்காலம் என்பது அநீதி ..
இந்திய நீதி சமத்துவதானதாக இ்ல்லை என்ற குற்றசாட்டும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்கள் சிறைதண்டனையை "தீவிரவாதம்" என்ற பெயரிலும் இறையாண்மைக்கு எதிராக சித்தரிப்பிலும் தொடர்ந்து அநீதி இழைக்கபடுவதும் .. அதற்கு சாட்சியாக பல்வேறு வழக்குகளில் நீதிபதிகளே வாய்மொழியில் உறுதிபடுத்தியதும் நாடறிந்து.. நீதிபதிகளை மிரட்டிய சம்பவங்களும் அதை மீறி நிலைநாட்ட முற்பட்டவர்கள் கொல்லபட்டதும் வரலாற்றில் கருப்பு பக்கங்களாக மாறியதல்லாம் அறிவீர்கள்
..
விசாரணை கைதியாக நீண்ட சிறைவாசம் என்பது அநீதி . ஒரு சமூகம் தொடர்ந்து "குற்றபின்னணி" யாக சித்தரிக்கபடுவதும், பொது சமூகத்தின் முன் "தீவிரவாதிகள்"
என புத்தியில் ஏற்றிவைத்திருப்பதின் பின்னின் அரசும் அரசியல்வாதிகளும்,ஊடகங்களும் சினிமாவும் 
பெரும்பங்காற்றி இஸ்லாமிய 
சமூகத்தை கூண்டில் ஏற்றி நிறுத்தியிருக்கிறது ..
தொடர்ந்து இஸ்லாமிய சமூகம் அச்சுறுத்தபடுவதும் அதை அரசியலாக்கி பாசிசம் வளர்வதும் தொடர் கதையாகிறது.. 
..
சமூக வலைதளங்களில் தொடர்விவாதங்கள் இச்சமூகம் தொடர்ந்து அதிகாரத்தால் அழுத்தபடுவதை பதிவு செய்து வந்திருக்கிறது ..
நீண்ட சிறைவாசிகள் அதிலும் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்த விழிப்புணர்வு பொது சமூகத்திலும், நீதிபரிபாலன சபையிலும் வந்திருப்பதும், சமூகஆர்வலர்கள் இஸ்லாமிய சமூகத்தினர் மீதான வன்மம் நிறைந்த செயல்திட்டங்களை கண்டிப்பதோடு ஒருதலைபட்சமாக செயல்படும் அரசஅதிகாரத்தையும் கேள்வி கேட்க தொடங்கியிருப்பது சற்று ஆசுவாசம்படுத்துகிறது ..
..
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமிய கைதிகள் விடுதலை குறித்து நிறைய பேச தொடங்கியிருப்பதே நல்லமுன்னேற்றம் .. அதிமுக ஆட்சியில் இந்தளவு சமூகம் அக்கறைகாட்டதற்கு அவர்களின் பாதையும் போக்கும் அறிந்ததும், அதிமுக மீதான அவநம்பிக்கையின்மையும்தான் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்பார்ப்பு அதிகமாகிறது ..
..
மதத்தை முன்னுறுத்தி விடுதலை கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் 20, 30 ஆண்டுகள் சிறையில் கழிப்பவனை மனிதாபிமானம் கொண்டு விடுதலை செய்திட வேண்டும் .. என்ன குற்றம் எதற்காக என்பதை தாண்டி கருணையோடு பரிசிலிக்க வேண்டும் .. தண்டனைகாலம் தாண்டி சிறைவாசம் என்பது அநீதி .. எல்லோருக்கும் நீதி சமவாய்ப்பில் சமஉரிமையோடு வழங்குவதுதான் "செங்கோன்மை"க்கு அழகு ..
நிறைய நம்பிக்கையோடு எதிர்நோக்கும் ஒரு சமூகம் .. நிறைய அழுத்தபட்டு அநீதியோடு அழுதுநிற்கும் அவர்கள் குடும்பங்கள்.. குடும்பத்தின் வருவாய் இழந்து 20 ஆண்டுகள் சட்டபோராட்டம் என வாழ்வின் சுகங்களை இழந்து கடைசி நம்பிக்கையோடு நிற்போரை கருணையோடு 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் விடுதலை செய்வாரென இஸ்லாமிய சமுதாயம் "பெரும்நம்பிக்கையோடு" காத்திருக்கிறது .. விடுதலையில் ஏற்படும் சட்டச்சிக்கலை தவிர்க்க இஸ்லாமிய சமுதாய தலைவர்களும் ஒருங்கிணைந்து ஆலோசனை செய்யலாம் .. திமுகவின் மீதும் தங்கள் மீதும் இஸ்லாமிய சமூகம் தரும் அழுத்தம் #நம்மவர் என்ற உரிமையில் ஏற்படுவதென்பதை அறிவோம் .. தொல்.திருமா சொன்னதை போல விடுதலை பெறும் தகுதிபட்டியலில் "மதம்" தடையாக இருப்பதை முதல்வர் அவர்கள் கவனத்தில் கொண்டு களைய முன்வரவேண்டும்.. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிப்பவர்களை விடுதலை செய்யபடுவார்கள் என தேர்தல் அறிக்கையில் சொன்னதை நினைவூட்டுகிறோம்.. இப்போது நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல.. கொடூர குற்றம் புரிந்தவன் கூட 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தால் எஞ்சிய காலத்தை நல்லமுறையில் வாழ தான் ஆசைபடுவான் என்பதை முதல்வர் ஸ்டாலின் கருத்தில் கொள்ளாதது கவலையளிக்கிறது என்ற  விமர்சனம் உண்டு..
இன்னமும் நம்பிக்கை இருக்கிறது முதல்வர் அவர்களே
இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கறையும் அன்பு கொண்டவர்..
அவர்கள் படும் துயரம்,சந்திக்கும் இன்னல்கள் எல்லாம் 
மற்ற ஆட்சியாளர்களை விட 
அறிவீர்கள்.. நீண்ட சட்ட போராட்டங்களும், விசாரணை கைதியென்ற பெயரில் சிறைகூட்டில் நிற்பவர்களை கருணைக்கொண்டு விடுதலை செய்யுங்கள் .. பொது சமூகம் கூட கைதட்டி வரவேற்கும்..
முஸ்லிம் கைதிகள் விடுதலையில் உள்ள சட்டசிக்கல்களை களைந்து விரைந்து நடவடிக்கை வேண்டும்
எல்லா சமூககங்களும் இந்த அரசின் மீது கொண்டுள்ள நல்லெண்ணம் கெடாதவாறு விரைந்து நடவடிக்கையை எடுங்கள்..
..
யாருக்காகவோ விடுதலையை கேள்விக்குறியாக்கினால் பாதையில் தடுமாற்றம் என வரலாறு பேசும் ..  
நிரம்ப எதிர்பார்ப்போடு இஸ்லாமிய சமூகம் நிற்கிறது  என்பதை எடுத்து சொல்லும் கடமை எமக்குண்டு ..
..
அன்புடன்
திராவிடன்
ஆலஞ்சியார்

Sunday, November 21, 2021

இனி பாமக தலைமையில் தான் கூட்டணி .. 
எந்தகட்சியுடனும் கூட்டணி சேராது..

கடைசி நேரத்துல அய்யா யார்கிட்டயாவது போயிடுவார்னு நீ நெனச்சா,  நீ இருக்க வேண்டிய இடம் கீழ்பாக்கம் மருத்துவர். ராமதாஸ்..
பாவம் பாமக தொண்டர்கள் 
பார் உள்ளளவும்  என்றெல்லாம் பழந்தமிழ் பேசி கதை பழையதானது .. இப்போது கூட அதிமுக தயவில் தானே அன்புமணி எம்பியாக இருக்கிறார்.. ஒரு தீர்க்கமான முடிவெடுத்தபிறகு அதிமுக தயவில் வந்த பதவியை ராஜினாமா செய்து ராமதாஸ் சொல்லும் மானமுள்ளவராக நமக்கு காட்சி தருவார் ..
..
பேச்சில் நேர்மையில்லை அடிக்கடி மாறிமாறி சவாரி செய்ததை தளபதி நாசுக்காக கழட்டிவிட தனியாக என கோஷம் எழுப்பி மாற்றம் முன்னேற்றமென சொல்லி கடைசியில் அங்கும் இங்கும் கடைவிரிக்க மீண்டும் தளபதி கண்டுக்கொள்ளாமல் கடைசியில் மீண்டும் தனித்து என்கிறார்கள்.. வன்னிய பெருசமூகம் இவர்களை நம்புவதை விடுத்து வெகுகாலமாகிவிட்டது .. கட்சியில் ஊரக நிர்வாகத்திற்கு கூட ஆள் கிடைக்கவில்லையென ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் ..
..
சமூகநீதி பேசுபவராக தன்னை அடையாளபடுத்தி நின்றவர் சாதிய குறியீட்டை சுமந்து சறுக்கிய வரலாறு அறிவோம் .. தன் மகனை முன்னிறுத்தி அரசியலை கையிலெடுத்ததும் ஏற்கனவே செய்த சத்தியத்தை ஊடகங்களும் வெகுஜனங்களும் ஞாபகம்படுத்த சரிவு தொடங்கியது .. சின்ன சின்ன விடயங்களுக்கு இளைஞர்களை தூண்டி வழிகேட்டில் நிறுத்தும் அரசியலை தவிர வேறெதும் ஆக்கபூர்வ செயல்பாடுகள் இல்லை .. வன்னிய இளைஞர்கள் கல்வி வேலைவாய்ப்பை உருவாக்கவோ அதற்கான கட்டமைப்பை செய்யவோ முயற்சிக்கவில்லை ..அரிவாளை தூக்கி வா நம் சாதியை குறை சொல்லிவிட்டான் என உணர்ச்சி விளிம்பில் நிறுத்தி புகழ்தேடும் கயமையை விட்டொழிக்கவேண்டும் .. 
..
ஒரு திரைப்படம் பேச வந்த கருத்தை உள்வாங்காமல் தன் சாதியை கேவலபடுத்திவிட்டான் என கம்பு சுத்துவது ..வன்னிய இளைஞர்களை தியேட்டரை கொளுத்துவோம் 5 பேர்தான் பாதுகாப்பிற்கு நாங்கள் ஆயிரம் பேர் திரண்டால் என பேசவைப்பது நீண்டகாலம் அரசியல் களத்தில் நிற்கும் ராமதாஸ் அய்யாவிற்கு அழகல்ல.. படத்தின் உள்நோக்கம் ஏதுவுமில்லை என தெளிவுபடுத்திய பிறகு அன்புமணி தேவர்படத்தை வைத்தால் சும்மா இருப்பார்களா என சாதி மோதலை உருவாக்க நினைப்பது அரசியல் அறிவிலித்தனம் .. தமிழக மக்கள் தெளிவானவர்கள் சாதி அடையாளத்தை மத அடையாளத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற நற்றறிவு உடையவர்கள் .. இயக்குநர் உள்நோக்கமில்லை வருடத்தை குறிக்கமட்டுமே பயன்படுத்தியதாகவும்
யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக சொல்கிறார்
அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்கிறார்...இதை இத்தோடு முடித்து  நல்ல அரசியலை. முன்னெடுப்போம் ..
"ஜெய்பீம் " நிறைய விவாதங்களை கருத்துருவாக்கங்களை அரசின் அலட்சியத்தை அதிகாரவர்க்கத்தின் திமிரை பேச வைத்திருக்கிறது.. இதுபோல் நிறைய படங்கள் உலகதரத்தில்  உருவாக்கபடவேண்டும்
..
தமிழ் சினிமா இப்போதுதான் சாமானியர்கள் கையில் வந்து நல்ல திரைகாவியங்கள் வருகிறது மக்கள் பிரச்சனைகள் 
மண்சார்ந்த வலிகள் பேசபடுகின்றன ..
உலக தரத்திற்கென இது என புளுகியவர்கள் கூட இப்போது உலக தரத்திற்கு தமிழர்கள் திரைபடத்தை தருகிறார்கள் என்றவுடன் எரிச்சலடைய செய்திருப்பதே தமிழனின் கலைபடைப்பின் வெற்றி .. 
ஜெய்பீம் 
..
ஆலஞ்சியார்

Friday, November 19, 2021

சர்வாதிகாரம் பணிந்தது ..
வேளாண் சட்டத்தை திரும்ப பெற 600 பேர்கள் பலி கொடுக்க வேண்டியிருந்தது.. ஆளும் அரசு மக்களின் குரல் கேட்க நீண்ட போராட்டம் தேவையிருந்தது இது இன்னுமொரு சுதந்திர போர் .. உழவனை கார் ஏற்றி கொன்று இறுமாப்பாப்போடு இருந்தவர்கள் .. உ.பி.தேர்தல் வருவதை கவனித்தில் கொண்டு திரும்ப பெற்றிருக்கிறார்கள் ..
உயிர்நீத்த உழவர்களுக்கு வீரவணக்கம்..
..
மோடி அரசு இந்திய ஒன்றியத்தின் சாபம்.. அதீத பெரும்பான்மை வன்மத்தை கையிலெடுக்க தூண்டியது.. அமைச்சர்கள் முதல் அடிபொடிகள் வரை அகங்காரத்தில் பேசினார்கள் இப்போதும் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்ற குரலின் தொனி நமக்கு நிறைய உணர்த்தும் .. ஒரே நாடு ஒரே கொள்கை என்பதெல்லாம் ஒன்றியத்தை சிதறடிக்கும்  .. ஆணவக்காரர்கள் கற்று தேர்வதில்லை என்பார் கலைஞர் காலம் நமக்கு நல்ல பாடத்தை உணர்த்தி ஒன்றுபட்டு எதிரியை வீழ்த்துங்களென சொல்கிறது .. யார் பெரியவன் அதிகார ஆசை மதமும் சாதியும் தலையில் ஏற்றி வெறித்தனத்தை வேற்றுமையை விதைத்து நம்மால் எதையும் சாதிக்க முடியாதென்பதை நாம் உணரவேண்டும்.. பதவி நல்வாய்ப்பு மக்களுக்கு பணி செய்ய என்று எண்ணி செயல்படுபவனே சிறந்த தலைவனாய் காலம் கடந்தும் வரலாற்றில் பேசபடும் 
..
தேர்தல் 
ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதம் அதனால் தான் ஆட்சியாளர்கள் பிடிவாதமாக செயல்படுத்தும் மக்கள் விரோத செயல்களை  மறுபரிசிலினை செய்கிறார்கள்.. மக்கள் தங்கள் வலிமையை உணராமல் போனால் மோடியை போன்றவர்களும் பாசிசவாதிகளும் தான் ஆட்சியாளர்களாக வருவார்கள்.. தங்களின் பலத்தை வலிமையை உணர்ந்து மதம் ,சாதி, தற்பெருமை, புகழ் பதவி பணம் என அற்பங்களுக்கு துணைபோகாமல் வழங்கிநிற்காமல், வெறிகொள்ளாமல் நல்லவர்களை நாட்டை நல்வழியில் ஆள்பவர்களை  அதிகாரத்தை சேவை செய்ய மக்கள் நமக்கு தந்திருக்கும் வாய்ப்பாக கருதுபவர்களை கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்பவர்களை மக்களின் மீது பேரன்பு கொண்டவர்களை நாடும் மக்களும் தேர்வு செய்தால் இந்திய ஒன்றியத்தை கண்டு உலகே வியக்கும்..
மக்களிடம் செல் மக்களிடம் பழகு மக்களிடமே கற்றுக்கொள் என்ற பேரறிஞர் அண்ணாவின் அரசியல் இலக்கணத்தை உணரவேண்டும்.. மக்கள் காப்பாளன் காவலன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு 
இந்திய ஒன்றியத்திற்கு எடுத்துகாட்டாய் விளங்கும் தவைவர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் .. 
அவரின் சிந்தனை செயல் எல்லாம் மக்களின் மீதான அக்கறையின் வெளிபாடாய் இருக்கிறது ஒரு உதாரணம் சாலை விபத்துகளில் 48 மணி நேர சிகிச்சையை அரசே ஏற்கும் என்பது சிறந்த எடுத்துகாட்டு மக்கள் அதிகாரம் தந்தது இதற்காகதான் .. 
இந்திய ஒன்றியம் கணக்கில் கொள்ளபடவேண்டிய தலைவர் 
ஸ்டாலின் 
..
காலம் சிறந்த ஆசான்..
..
ஆலஞ்சியார் 

Sunday, November 14, 2021

நான் ஆய்வுக்கு வருவது தெரிந்தே மழை நீர் அகற்றம் ..
எடப்பாடி.. 
தண்ணீரை இறைக்காதீர்கள் கமல் வந்து பார்த்துவிட்டு போகும் வரை தண்ணீரில் நிற்கட்டும் ..
போட்டோ ஷூட் நடத்தி மழைநீர் இன்ப சுற்றுலா .. 
மேம்பாலங்களே மழைநீர் தேங்க காரணம் ..
பாவம் எதிர்கட்சிகள் ..
..
துரித செயல்பாடு இந்திய ஒன்றியத்தில் இப்படியொரு முதல்வர் இதுவரை பார்த்ததில்லையென பெருமிதம் கொள்கிறார்கள்.. மக்கள் நம் முதல்வர் நிச்சயம் இடறுகளை களைவார் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ஆம் ஒளிப்பதிவாளர்
பி.சி ஸ்ரீராம் முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறது அரசியல் செய்யாதீர்கள் என்கிறார் ஆம் வெகுமக்களின் குரலும் அதுதான் ..
..
ஒரு ஆட்சியாளர் மக்களோடு தொடர்புடையவனாக மக்களோடு இரண்டற கலந்தவனாக கைநீட்டி அழைத்தால் கூப்பிட்ட குரலுக்கு  செவிசாய்ப்பவனாக இருக்கவேண்டும்.. முன்பெல்லாம் ஆட்சியாளர்களை சுற்றி துதிபாடிகள் இருப்பார்கள் மக்களின் குரல் மகேசன் காதுகளில் விழாதவாறு புகழோசை காதை கிழிக்கும் .. வெற்று மனிதனின் ஆதங்கம் அழுகுரல் மன்னவன் காதுகளில் விழாமலே போகும் .. ஆனால் இப்போது சன்னகுரலில் அழைத்தாலும் தனியொருவராய் கைநீட்டி  அழைத்தாலும் தலைவர் காரை நிறுத்தி காதுகொடுக்கிறார் .. 
சாமானியர்கள் குரல் கேட்டு அவர்கள் குறை தீர்க்கிறார் ..
..
எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முடியாதவாறு தலைவரின் செயல்பாடுகள் இரண்டே நாளில் இயல்புநிலை திரும்பியது மாநகராட்சி  நன்றி என பகைவர்கள் கூட வேறு வழியின்றி புகழ்கிறார்..கொரோனா தடுப்பில் முன்னிலை மாநிலமாய் நிறுத்தி நிம்மதி பெருமூச்சுவிட வைத்தார் .. அடிமைகள் உயிர்வளி (ஆக்சிஸன்) கூட கையிருப்பு இல்லாமல் வைத்த நிலையில் போர்காலமென அதிகாரிகளை தன்னார்வலர்களை துரிதபடுத்தி மெச்சும்நிலையில் நம்மை கொண்டுவந்து சேர்த்தார்..
நடிகர் பார்த்திபன் எதிர்க்கட்சிகளுக்கு வேலை தருவதே இல்லை என்கிறார் .. இரண்டுநாள் கழித்து வந்து பார்த்தால் ரோட்டில் தண்ணீரில்லை நான் வருவது தெரிந்து நீரை இறைத்துவிட்டார்களென புழுவை போல முண்டுகிறார்
..
எதிர்க்கட்சிகள் எதேதோ சொல்கிறார்கள் எதையும் காதில் வாங்குவதில்லை காழ்ப்புணர்ச்சியும் பொய்யும் எதையாவது பேசி உள்ளேன் அய்யா என பிலிம்காட்டுவதையும் கண்டுக்கொள்ளாமல் .. எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான்  ஓடிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் முதல்வர் ..
இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்தோம்
..
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்..
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்..
..
ஆம் மக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்
எங்கள் முதல்வர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்..
..
ஆலஞ்சியார்

Wednesday, November 10, 2021

ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு 9 கேள்விகளை வன்னியர் சமூக தலைவராக  தன்னை கருதிகொண்டு அன்புமணி எழுப்புகிறார் .. நாட்காட்டியில் குறியீடு இருக்கிறது குரு பெயரை பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார்.. இயக்குனர் யதேச்சையாக நடந்ததென கூறி நாட்காட்டி குறியீட்டை மாற்றிவிட்டார் .. குருமூர்த்தி பெயர் எப்படி வரலாம் என யாரோ கேட்கவேண்டியதை கேட்பதாக தோன்றவில்லையா .. அல்லது யாரோ சொல்லி செய்கிறாரா..
..
இவர் சமூகநீதி பற்றியெல்லாம் பாடமெடுத்தாலும் சாதிவெறி தவிர வேறொன்றும் இல்லை .. சாதிவெறியை தூண்டிவிடுவதும் சூர்யா படம் தியேட்டரில் வந்தால் நடப்பதே வேறு என்று மிரட்டுவதும் முன்பே கண்டதுதான் .. இம்முறையும் அதே குரல் ஒலிக்கிறது .. 
அந்த படத்தில் பேசபட்ட விடயம் குறித்து இந்த சமூகம் எப்படி நடந்துகொண்டது குறைந்தபட்ச மனிதம் கூட இல்லாத சமூகமாய் மாறிபோனதேன் வர்ணகோட்பாட்டில் நம்மை அடைத்து கீழ்சாதியென பேசவைப்பது யார் என கோபம் வராமல் சாதியை பிடித்துக்கொண்டு தொங்கினால் கீழே விழ நேரிடும் இம்முறை பலமாக அடிவிழும்..
..
அதே படத்தில் பஞ்சாயத்து தலைவர் ஓட்டுக்காக கண்ட கண்ட சாதிகாரன் காலில் விழவேண்டியிருக்கு இதுலே இவனுக காலில வேற விழணுமா என்ற கேட்பதை ஆண்ட பரம்பரையென பேசி திரியும் எவனும் கோவபடவோ கேட்கவோ இல்லை.. அதெல்லாம் கண்ணில் படாது .. கதை, கரு, சொல்லவந்த விடயம், கதையின் திரை போக்கு காட்சிபடுத்தல் என எல்லா நிலையிலும் மிக குறைவான குறைகளோடு ஒரு திரைப்படம் .. இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பாராட்டுபெற்ற படங்களின் படவரிசையில் இடம்பெறுவதை சகிக்க முடியாத சக்திகள் கதறுகின்றன 
..
பாண்டே ஐயர் பாத்திரம் தேவையில்லாமல் திணிக்கபட்டிருப்பதாக பதறுவதும் நீங்கள் சொல்றதுனாலேதான் தப்பா போறோனோ என சந்தேகம் வருது என்ற வசனம் பெரியாரை ஞாபகபடுத்தியிருக்கும்.. பெரியார் வெளியூர் சென்றிருந்தபோது விடுதலை செய்தி வெளியிடும் பொறுப்பை வீரமணியை பார்த்துகொள்ள சொன்னபோது  அதெல்லாம் சரிய்யா தலையங்கம் எப்படி எழுதறது என்றார் பெரியார் தி இந்து பத்திரிக்கை என்ன செய்தி வருதுன்னு பாரு அதற்கு எதிரா எழுது என்றார் .. பாப்பான் எது செய்றானோ அதற்கு எதிராகவே செய் என்று பொருள்  
..
ஜெய் பீம் ஏற்படுத்திய தாக்கத்தை  சகித்துக்கொள்ள முடியவில்லை.. ருத்ரதாண்டவத்தில் கஞ்சா விற்கும் சிறுவன் அம்பேத்கர் டிசர்ட் போட்டிருந்தானே அப்போது யாரும் எங்கள் சாதியை கேவலபடுத்தியதாக கூச்சல் போடவில்லை .. திரைப்படைப்பை கலைநோக்கோடும் சமூக அக்கறையோடும் சொல்லபட்ட கருத்தை மட்டுமே அலசி ஆய்ந்து அது எந்தளவு மக்கள் மனதில் தாக்கத்தை வலியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணரவேண்டும் ..
எல்லா சாதியிலும் மதத்திலும் அயோக்கியர்கள் திருடர்கள் கேடுகெட்டவர்கள் இருக்கிறார்கள் .. சமுகத்தின் இளைஞர்கள் அறம் போதித்து நல்வழியில் செல்ல அறிவுறுத்தாமல் திரையரங்குகளில் படம் வந்தால் கலவரம் செய்வோம் என மிரட்டுவதும் குடிசைகளை கொளுத்தியும் பஸ் கண்ணாடியை உடைத்தும் ரயில் மறியல் செய்தும் வழிகெடுக்கும் நீங்கள் அறிவுரை சொல்ல அருகதையற்றவர் 
..
சாதி அரசியலை தவிர வேறெதும் அப்பனுக்கும் மகனுக்கும் தெரியாதென்பது தமிழக மக்கள் அறிவார்கள்.. வன்னிய பெருமக்களே புறக்கணிக்க தொடங்கிவிட்டார்கள் இனியேனும் சமதர்ம சமூகநீதி பேசி பொதுவாழ்வில் உழைக்க வாருங்கள் ..நாடாளுமன்றத்தில் கூட இத்தனை கேள்விகள் கேட்டிருக்கமாட்டீர் ..
மதவெறியை தூண்டி இளைஞர்களை வழிகேடர்களாக மாற்றும் போக்கை இனியேனும் கைவிடுங்கள் 
..
ஆலஞ்சியார்

Sunday, November 7, 2021

"முறை செய்து காக்கும் இறை"
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.. என்றான் வள்ளுவன் ..
முதல்வர் தானே களத்திற்கு வருகிறார் இரண்டு அமைச்சர்கள் தலைமை செயலர்  காவல்துறைத்தலைவர் மாநகராட்சி ஆணையர் என பாதிக்கபட்ட இடங்களை பார்வையிடுகிறார்..
..
15 IAS அதிகாரிகள் களபணி,கண்காணிப்பு என போர்காலம் என கருதி பணிசெய்ய உத்தரவிடுகிறார் .. பேரிடர் காலமென கருதி கரம்கோர்த்து செயல்பட உடன்பிறப்புகளுக்கு சொல்கிறார் .. மூன்றுநாட்கள் வெளியூரிலிருந்து யாரும் சென்னைக்கு வராதீர்கள் என கேட்டுகொள்கிறார் ..
..
எழுபதை நெருங்கும் வயது .. இளைஞரைப்போல மழைவெள்ளத்தை நேரில் கண்டு களத்தில் தான் உண்மை தெரியும் அதிகாரிகளை பணிசெய்ய சொல்லிவிட்டு வீட்டிலேயே முடங்கவில்லை .. வான்வழியே மக்களை காணவில்லை .. கரம் பற்றி நானிருக்கிறேன் என நம்பிக்கையூட்டுகிறார்.. முதல்வரே களத்தில் என்றவுடன் அதிகாரிகள் செயல்கள் வேகமெடுக்கும் ..
தமிழக அரசின் அதிகாரிகளுக்கும் தமது அமைச்சர் களுக்கும்  கோட்டையிலிருந்து உத்தரவிடவில்லை.. தாமே முன்னின்று களப்பணியாற்றி விரைவுபடுத்துவதெல்லாம் 
தலைசிறந்த தலைமைப்பண்பு ..
..
விளிம்புநிலை மக்களின் குரலில் நம்பிக்கையை வரவழைப்பது .. அப்பா நிலம் கொடுத்தார் மகன் பட்டா கொடுத்தார் என எளியமக்களின் மகிழ்ச்சி மன்னவனுக்கு மக்கள் தரும் நற்சான்று..  ஒரு நல்ல தலைவன் கிடைத்திருக்கிறார் .. கொண்டாடவிட்டாலும் தூற்றாதீர்கள் .. "வருணபகவான் கோபம் " என நீங்கள் நம்பும் கடவுளை கேவலபடுத்தாதீர்.  இயற்கையின் முன் யாரும் தாழ்ந்தே போகவேண்டும் கோபம் சீற்றம் சிங்காரம் என இயற்கை நம்மை மகிழ்விக்கும் காக்கும் அழிக்கும் என்பதை உணருங்கள் .. இயற்கையை மீறிய நம் செயல்கள் அத்துமீறல்கள் நீர்தேங்க வழியிடமில்லாமல் வழிந்தோட நீர்தடமில்லாமல்  ஆக்ரமித்தது நாமே அதை சரிசெய்வோம் .. கடந்த ஆட்சியில் ₹900 கோடி ஒதுக்கி நீர் வழிதடங்களை தூர்வாரவும் கால்வாய்களை சுத்தபடுத்தவும்,செய்ததாய் கணக்கு காட்டிய கயவர்களை நீதிமுன் நிறுத்தவேண்டும் ..
..
இடரும் துயரும் சூழும் நேரத்தில் நம்மோடு இருக்கிறார் நமக்கான தலைவர்..
நல்ல நம்பிக்கை தந்திருக்கிறார் .. கடந்து போவோம் மீள்வோம் ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இருக்க பயமேன்..
..
#தாயுமானவர்_ஸ்டாலின்..
..
ஆலஞ்சியார்


Wednesday, November 3, 2021

ஒரு படம் ..
மனதை உலுக்கி தூங்கவிடாமல் செய்யுமா.. விளிம்புநிலை மக்கள் அதிலும் "இருளர்கள்" இருப்பிடம் கூட இல்லாத நாடோடிகள் என அறிய படும் பூர்வகுடிகள் பற்றிய படம் .. சிறிது பிசகினாலும் டாக்மன்ட்ரி வாசம் அடிக்கும் மிக நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ..
..
முதல் காட்சியே இருளர்கள் ஒட்டர்களின் வாழ்வை ..யாரும் கேட்க ஆளில்லாத சமூகம் .. மற்ற சாதிகள் பெயர் சொன்னவுடன் விடுதலை செய்வதிலிருந்தே எத்தகைய கொடூரமனபடைத்தவர்களாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் நாம் என தலைகுனிய வேண்டும் .. சாதாரண லாக்கப் மரணம் என கடந்துவிடமுடியாதவாறு நம்மை உலுக்குகிறது .. இருளர் மக்கள் பிரகாஷ்ராஜிடம் சொல்லும் காட்சிகளும் அதிலும் அந்த பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சொல்லும் போது அவரது உடல்மொழியும், பெண்கள் மீதான வன்கொடுமை என தப்பித்துக்கொள்ள முடியாமல் நம்மை கிழித்து எறிகிறது .. 
..
ஆதிக்கசாதி திமிரை இடையிடையே சொன்னாலும் சில காட்சிகளே என்றாலும் செவிட்டில் அறைந்தது .. அதிலும் நீங்க சொல்லும் போது தான் ("நூல் பிடிச்சாமாதிரி" )  சந்தேகம் வருது என்பது நூறுபக்க வசனத்திற்கு சமம் ..தெளிவான திரைக்கதை இரண்டே முக்கால்மணி நேரம் இமைமூடாமல் இருக்கையில் இறுத்தியதைபோல நகரவிடவில்லை .. படம் முடியும் போது நெஞ்சம் கனத்தது ..
..
இந்த நேரத்தில் பேராசிரியர் கல்யாணி அவர்களை நாம் போற்றவேண்டும் .. தன் வாழ்நாள் முழுவதும் இருளர்களுக்காக வாழ்ந்து வருபவர் .. 
நடிகர் சூர்யா,லிஜோமோல், மணிகண்டன் 
என இப்படத்தில் நடித்தவர்களை
இயக்குனர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் மிகையில்லாத நடிப்பு ..
தலைப்பை சிலர் விமர்சிக்கிறார்கள் இதைவிட நல்ல தலைப்பை வைக்கமுடியாது .. ஒடுக்கபட்டமக்களுக்காகவே வாழ்ந்த மனிதர் அம்பேத்கர்..
பொய் வழக்குகளில் ,விசாரணை கைதியாக வாழ்நாளை முழுவதும் சிறையில் வாழும் எளியவர்கள் .. இவர்களையெல்லாம் எப்போது விடுவிக்க போகிறோம் .. சமூக அக்கறையோடு இன்னமும் நிறைய கதவுகள் திறக்கபடவேண்டும்.. 
..
சிறந்த படைப்பு சமூக அக்கறையோடு அழுத்தமான திரையில் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்.. 
இப்போது தான் தமிழ்சினிமா வெற்றிமாறன், பா.ரஞ்சித்,மாரி செல்வராஜ்  த.செ.ஞானவேல் 
என மண்ணை நேசிக்கிறவர்கள் மண்ணை சார்ந்தவர்கள் கையில் வந்து "நல்ல படங்கள்" வர தொடங்கியிருக்கிறது .. 
இது கூட ஒருவகை "விடுதலை " தான் 
மணிகளும் சந்தர்களையும் நம்மை அறியாமலேயே கொண்டாடி வந்திருக்கிறோம் .. நம்மை பற்றிய கவலைகள் நமது வாழ்வியல் சிக்கல்கள் நம் மீது சுமத்தபடும் சுமைகள் , நம்முடைய இழப்புகள், மறுக்கபடும் உரிமைகள் இவையெல்லாம் பேச நம்மை சார்ந்தவர்கள் மட்டுமே முன்வருவார்கள் 
..
த.செ.ஞானவேல் கைகொடுங்கள் ..
..
ஆலஞ்சியார்

Monday, November 1, 2021


வன்னியருக்கான 10.5% விழுக்காடு உள்இடஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தரவுகள் பெறபடாமலேயே தந்த இடஒதுக்கீடென தெளிவுபடுத்தியிருக்கிறது ..
ராமதாஸ்  இந்த இடஒதுக்கீடு ரத்தாகும் என அறிவார்.. அவருக்கு வன்னியருக்கு இடஒதுக்கீடு முக்கியமல்ல பாமக கட்சியும் தன் மகனும் காணாமல் போவார்களோ என்ற அச்சம் தேர்தல் நெருங்க சில மணிநேரம் இருக்கும் போது சட்டமன்றத்தில் விவாதிக்கபடாமலேயே அவசரகதியில் அள்ளிதெளித்த கோலமாய் வந்தது தேர்தல் வெற்றிக்காக இருந்ததை கோட்டைவிட்ட கதையாக போனது ..
..
இஸ்லாமியர் உள்ஒதுக்கீடு இல்லையா என வினவுகிறார்.. ஆந்திரத்தில் அவசரமாக கொண்டுவரபட்ட இஸ்லாமியர் உள்இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோது .. பிற்படுத்தபட்டோர் ஆணயத்தின் பரிந்துரையில்லை என கூறியதை கவனமாக ஆய்ந்து கலைஞர் பெருமகன் .. முதலில் பிற்படுத்தபட்டோர் ஆணையத்தின் கருத்தை கேட்டு ஏழு விழுக்காடு முஸ்லிம்களுக்கு அவர்களுக்கு 3.5% விழுக்காடு தரலாம் ..சிறுபான்மையினருக்கு 7.5% விழுக்காடுக்குள் இருக்கவேண்டும் என்ற பரிந்துரையை ஏற்று ஜெயின் சமூகத்திற்கு 0.5% விழுக்காட்டை கிருஸ்துவர்களுக்கு 3.5% என பகிர்ந்தளித்தார் .. அவசரகோலத்தில் செய்யவில்லை .. அதை போலதான் அருந்ததியர் உள்ஒதுக்கீடும் அமைந்தது .. இவையெல்லாம் ராமதாஸ் அறிவார்.. ஆனால் அவருக்கு அரசியல் செய்ய நிலைநிறுப்பை உறுதிசெய்ய அவசரமாக இடஒதுக்கீடு அறிவிப்பு தேவைபட்டது ..
..
நீண்டகால கோரிக்கை இன்னும் பிற சமூகத்தை இணைத்து கலைஞர் 20% விழுக்காடு தந்தார் அதில் அதிகம் பலன்பெற்றதென்னவோ வன்னியர்கள் தான்.. வன்னிய இடஒதுக்கீட்டை அறிவித்த போது ராமதாஸ் பேசியதை நினைத்து பார்க்கவேண்டும் .. அதெல்லாம் மறந்திருப்பார் அரசியலுக்காக எதையும் செய்வார்.. அவர் பெற்றதாயை கூட கீழ்தரமாக பேசி அரசியல் செய்பவர் ..
.. 
கலைஞருக்கு தெரியும் தனியாக கேட்டால் சிக்கல் வரும் தடைகள் வரும் பிற சமூகம் பாதிக்கபடும் அவர்கள் வழக்கு தொடுப்பார்கள் .. என்பதை அறிந்து கலைஞர் தந்தார் .. 
வன்னிய இடஒதுக்கீடு தந்த கலைஞரையே தூற்றியவர் இந்த ராமதாஸ் .. தன்னால் தான் கிடைத்தது என்று கட்டமைக்கமுயன்று அப்பனும் பிள்ளையும் அழுது ஆர்பார்ட்டம் செய்ததெல்லாம் வீண்போனது .. 
..
திட்டமிடாமல் சரியான அணுகுமுறையில்லாமல் தரகுகள் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடப்பாடி செய்தது அறிவிலிகளின் கூத்தாய் போனது .. ஸ்டாலின் மீட்டுதரவேண்டும் என்கிறார் .. நிச்சயம் நடக்கும் அது #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் செய்ததாய் இருக்கும் ..
..
நல்லோர் கையில் நாடு 
நலமே பயக்கும்..
..
ஆலஞ்சியார்

Saturday, October 30, 2021

திமுக ..
தெளிவான பயணம் செய்கிறது 
ஆட்சியென்பது தமக்கு வழங்கபட்ட பொறுப்பென்பதை உணர்ந்து யாருக்கும் எவருக்கும் சிறிதுகூட தீங்கிழைக்காத ஆட்சி அதிகாரம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பது தெரிகிறது ..
உரிமை மறுக்கபட்டவரை அழைத்து அருகில் அமர்த்தி உண்ணும் அழகு தெளிவான செய்தியை சொல்கிறது .. கோவில் குறிப்பிட்ட வர்க்கத்திற்கோ சமூகத்திற்கோ சொந்தமானதல்ல ..  நம்பிக்கையுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம் கும்பிடலாம் "அன்னமிடல்" சாதி மதம் பார்க்காது எளியவர் ஏற்றபெற்றவர் என அறியாது அனைவருக்குமானதென சமூகநீதியை  சமநீதியை உரக்க சொல்வதோடு அனைவருக்கும் மௌனமாய் எச்சரிக்கை செய்திருக்கிறது ..
..
கடந்த  பத்தாண்டாய் பாழான தமிழகத்தை சீர்செய்ய சில ஆண்டுகளேனும் ஆகுமென நினைத்தோம் ஆனால் முதல்வரின் உழைப்பும்,தனி கவனமும், அமைச்சர்களின் அக்கறையோடு கூடிய உழைப்பும், உயரத்திற்கு கொண்டு செல்கிறது.. ஒவ்வொரு செயலும் இந்திய ஒன்றிய அரசியலில் இதுவரை காணாததாய் .. ஒன்றியமே உற்றுபார்த்து வியக்கிறதே .. தமிழகத்தை தலைநிமிர செய்து தமிழகத்தை பெருமைபட வைத்த தலைவர்களின் வரிசையில் தளபதி #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் பொன்னென மிளிர்கிறார்..
..
பெருந்தொற்று காலத்தில் மூடபட்ட பள்ளிகள்..  600 நாட்களுக்கு பள்ளிக்கு வரும் செல்வங்களை வாசலில் நின்று வரவேற்க வேண்டும் பூங்கொத்துகள் இனிப்பு வழங்கி வரவேற்போம் ..  தேர்ந்தெடுக்கபட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சி உறுப்பினர்கள் ஆசிரியர்கள் வாசற்வரை வந்து வரவேற்க வேண்டும் .. இருவாரங்களுக்கு  நம்பிக்கையூட்டும் கதைகள் சொல்ல பணித்திருக்கிறார் முதல்வர் ..  இவரைப்போல் ஒருவர் தமிழகத்திற்கு கிடைத்ததற்கு பெருமைபடுவோம்.. 
வீடுதேடி கல்வி  திட்டத்தை தாய்கழகம் கூட எதிர்த்த போதும் 
நம்பிக்கையோடு பாசிச சக்திகள் நுழைய முடியாதென சொல்லி ஆசிரியர், இடதுசாரி தலைவர்கள் கூட ஏற்றுக்கொள்ள வைத்த தாம் ஆளுமை நிறைந்த தலைவராய் திகழ்கிறார்..
அண்ணாமலை போன்ற அரைகுறைகள் ஊழலென கூப்பாடுபோட  அதை இடதுகையால் நகர்த்திய விதம் .. ஆவின் இனிப்பை கொள்முதல் செய்ய உத்தரவிட்டு வாயடைக்க வைத்தார்.. 
..
தமிழ்நாடு தினம் 
சர்ச்சையாகியிருக்கிறது மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்ட நாள் தான் வேண்டும் என்கிறார்கள் .. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கபட்ட பிறகு சில பகுதிகள்  பிரிந்து சில பகுதிகள்  சேர்ந்தது.. மெட்ராஸ் ஸ்டேட்  
என்றிருந்ததை #தமிழ்நாடு என  அண்ணாவால் சட்டமியற்றிய நாளே "தமிழ்நாடுநாள் " அதை தான் தமிழறிஞர்கள் கோரிக்கையாய் வைத்தார்கள் அதை ஏற்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார் 
வாழ்க! முதல்வர் 
 #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
வாழ்க!! தமிழ்நாடு 
..
ஆலஞ்சியார்

Saturday, October 23, 2021

 ஊழலற்ற இந்தியாவை நோக்கி எமது அரசு செயல்படுவதாக பிரதமர் பெருமிதம் கொள்கிறார் .. மேகாலயா ஆளுநர் தனக்கு இரண்டு கோப்புகள் வந்ததாகவும் இரண்டும் முறைகேடானதென்று தமது செயலாளர்கள் சொன்னதாகவும்
 அதில் ஒன்று பாஜக ஆர்எஸ்எஸ் தொடர்புடையவரது மற்றொன்று அம்பானியுடையது .. அம்பானிக்கு கையெழுத்திட்டால் ₹150 கோடி லஞ்சம் தருவதாக சொன்னார்கள் இதை பிரதமரிடம் சொல்லிவிட்டேன் 
வரும் போது 5 குர்தாவோடு வந்தவன் அதோடு வெளியேற எனக்கு தயக்கமில்லை என்கிறார்  ஆளுநர் சத்ய பால் மாலிக்..
..
P.M.Care என்னானது .. எவ்வளவு தொகை வந்தது எங்கே சென்றது அதில் எவ்வளவு செலவு செய்தார்கள் கேட்டால் அதற்கு பதில் இல்லை .. இவர்கள் நேர்மையானவர்களாம்.. 2ஜி வழக்கின் கற்பனைக்கொப்பாத பெருந்தொகையை சொல்லி வீண்பழி சுமத்தி திமுகவை இல்லாதாக்க நினைத்து கடைசியில் கரிபூசியக்கொண்டார்கள் .. சிஏஜி அறிக்கையை காரணம் காட்டியவர்கள் தாங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்தபிறகு நாடாளுமன்றத்திலேயே சிஏஜி அறிக்கையை காரணம்காட்டி குற்றம் சுமத்த கூடாதென  நிதியமைச்சர் அருண்ஜெட்லி சொன்னார்.. இவர்கள் தான் ஊழலை ஒழிக்கவந்தவர்களாம்..
உள்துறை அமைச்சரின் மகன் ஒரே ஆண்டில் 200% விழுக்காடு சொத்து மதிப்பு காட்டுகிறார் .. நம்ம A1 ஜெயலலிதா ஒரே மாதத்தில் வெங்காயம் ஏற்றுமதியில் ₹கோடிகள் லாபம் காட்டினாரே அதைப்போல.. வெளிப்படையாகவே அதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்து தெரிந்தும் தலைமை செயலகத்திலேயே ரெய்டு நடத்தியும்  அவர்களை ஆட்சியில் வைத்திருந்ததும் கொலை கொள்ளை வழக்குகள் என குற்றசாட்டு பலமாக வந்தும் ஆதரவுக்காக காப்பாற்றியவர்கள் ஊழலைப்பற்றி பேசுவது தான் கொடுமை..
..
திமுக அமைச்சர் மீது குற்றசாட்டு 
மாண்பிமை செந்தில் பாலாஜி ஆதாரத்தை தரவேண்டும் என கெடுவிதித்தும் Excel சீட்டை தந்து இதுதான் ஆதாரம் என்கிறார் அண்ணாமலை இவர் உண்மையிலேயே IPS படித்தாரா..
போலீஸ் அதிகாரியாக எப்படி செயல்பட்டிருப்பார் என சந்தேகம் வருகிறது இவர் காவல்துறையில் பணிபுரிந்த காலங்களில் நடந்த வழக்குகள் மறுவிசாரணைக்கு உட்படுத்தவேண்டும் .. அரைகுறைகளும் அரைவேக்காடுகளும் கட்சியின் பொறுப்பிற்கு கொண்டுவருகிறார்கள் .. குற்றம் சுமத்தியவர் தெளிவான ஆதாரங்களோடு பேசவேண்டும் ..
தமிழக முதல்வர் மிக தெளிவாக சொல்லிவிட்டார் இந்த அரசு நேர்மையாக செயல்படும் .. வீண்விரயம் தவிர்க்கபடும் (முன்னாள் முதல்வர்கள் படத்தை நீக்கவேண்டாம் வீண்செலவு தேவையில்லை என்றவர்)  என சிறப்பாக செயல்படுகிறார்கள் .. பாலியல் தொல்லைகளும் பாலர்கள் வன்கொடுமைகளும் சர்வசாதாரணமாக நடக்கும் கட்சியில் இருந்துக்கொண்டு .. குற்றபின்னணி கொண்டவர்கள் ஞானஸ்தானம் செய்து கட்சிக்கு சேர்த்துக்கொள்ளும் இவர்கள் தூய்மை நேர்மை பற்றி பேசுவது கொடுமையிலும் கொடுமை..
..
வீரசிவாஜி 1967 ல் தமிழகம் வந்ததாக அதுவும் கல்வெட்டில் இருப்பதாக பேசும் ஞானசூன்யங்கள் நமக்கு பாடமெடுக்கிறது .. அதிமுக ஆதரவில்லாமல் நோட்டாவை கூட தாண்டமுடியாதவர்கள் இன்று அடிமை அதிமுகவால் சட்டமன்றத்திற்குள் நுழைந்தவுடன் துள்ளுகிறார்கள்.. 
கோவில் சொத்துகளை ஒரு கூட்டம் மட்டுமே கொள்ளையடிப்பதும் ஏகபோக உரிமை கொண்டாடுவதும், தடுத்து நிறுத்தபட்டிருக்கிறதே .. ஆபரணங்கள் உருக்கி  தங்ககட்டிகளாக சேமிக்கபடும் என்றவுடன் பதறுகிறார்களே எங்கே மாற்றிவைக்கபட்ட போலிநகைகளை தெரிந்துவிடும் என்றா .. அல்லது போலிகளுக்கு பதில் ஒரிஜினலை வைக்கவேண்டும் என்பதாலா .. பாஜக கடவுள் பெயரில் கலவரம் செய்யும் கூட்டம் கொள்ளையடிக்கவும் ஒருசிலரே பதவி சுகம் அனுபவிக்கவேண்டுமென விரும்பும் கூட்டம் .. சிவசேனா சொல்வதைப்போல இந்துக்களால் இந்த நாடு நன்றாக தானிருக்கிறது இந்துத்துவா பேசும் கயவர்களால் தான் கேடுவருகிறது .. 
ஊழல் அநீதி, சுரண்டல் ,பொய், பித்தலாட்டம் ,பாலியல் தொல்லை, பிரிவினை சமூக அநீதி சாதி மதவெறி, 
கயமைத்தனம் இவைகளின் கூட்டுதான் பாஜக .. விரட்டபடவேண்டியது மட்டுமல்ல வேரறுக்கபடவேண்டியது..
#கத்திபேசினால்உண்மையாகிவிடாது .. #நடிப்புகாலத்திற்கும்கைகொடுக்காது 
காலம் அதை செய்யும் 
பன்முகதன்மை கொண்ட இந்திய ஒன்றியம் நிச்சயம் செய்யும்
..
ஆலஞ்சியார்

Tuesday, October 19, 2021

காலம் வலிமையானது ..
வையாபுரிக்கு பட்டாபிஷேகம்..
வரும் 20ந்தேதி நடைபெறுகிறது ..
பட்டாபிஷேகம் என்ற பதம் கூட வைகோ நமக்கு அருளியது ..
யார்வேண்டுமானாலும் வரலாம் அது அவர்களின் உரிமை .. கட்சி ஏற்றுக்கொண்டால் நமக்கு கேள்வி எழாது ..மக்கள் மன்றம் ஏற்குமா என்பதை காலம் முடிவுசெய்யுெம்..
..
மாணவரணியில் தொடங்கி கிளை மாவட்டம் என உயர்ந்து படிபடியாக வந்தவரை தன் மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்துகிறாரென கேள்வி எழுப்பியவர் .. அதில் கூட மக்கள் மன்றத்தில் தோல்வி வெற்றி இரண்டையும் சந்தித்து தொடர்ந்து உழைப்பை மட்டுமே நம்பிய .. மக்களிடத்திலே சென்று மக்களுக்காகவே உழைத்து .. கொண்ட கொள்கையில் சமரசம் செய்துக்கொள்ளாமல்  நேர்மையோடும் நன்னெறியோடும் அரசியலை பயின்று காலம் வாய்ப்பை தரும் என காத்திருந்தவர் தளபதி ..
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரென சொல்லவில்லை .. பகைவர்கள் கூட ஸ்டாலின் அரசியலுக்கு வருவதை இத்தனை அதிகம் எதிர்க்கவில்லை .. இனபகையை கொண்டிருந்த "சோ" கூட உழைப்பில் உயர்ந்தவரென சான்றிதழ் தந்தார் ..  கொள்கை ரீதியான விமர்சனம் வேறு ஆனால் பொதுவாழ்வில் தனக்கானதை தானே உழைத்து தயார் செய்கிறார் என புகழாரம் சூட்டினார்..
..
யாரையும் குறைகூறுவதற்கில்லை ஆனால் ஸ்டாலின் மீது ஏய்த்த அம்புகள் விரக்தியிலும், எரிச்சலோடும் எரியபட்டவைகள் .. அவரின் உழைப்பு நீண்ட அத்தியாயங்களை கொண்டது .. நீண்ட பயிற்சியும் தொடர்ந்து மக்கள் பணியில் ஒய்வில்லா உழைப்பும் கொண்டது .. கலைஞர் மகன் என்ற அடையாளம் தாமதபடுத்தியதே தவிர எப்போதோ அடைந்திருக்கவேண்டிய பதவிகளும் உரிமைகளும் காலதாமதமாகவே கிடைத்தது 
"ஆலமர நிழலில் வளராது " என்ற சொல் ஸ்டாலினுக்கு மிகவும் பொருந்தியது .. எல்லாவற்றையும் மக்கள் தந்தே பெற்றிருக்கிறார் .. வாய்ப்பிருந்தும் கொஞ்சம் சூழ்ச்சி செய்தால் எப்போதோ ஆட்சி பொறுப்பிற்கு வந்திருக்கமுடியும் .. கொள்கையை விட்டுகொடுத்தால் போதும் வாசல் தேடி வாய்ப்பு வரும் ஆனால் நேர்மை .. மக்கள் தந்ததாக இருக்கவேண்டும் அறியணை என்று காத்திருந்து மக்களின் பேரன்பில் பதவியை பெற்றார் .. 
..
மக்களிடம் செல் 
மக்களோடு கலந்துரையாடு 
மக்களிடமே அரசியல் பழகு ..
என்றார் பேரறிஞர் அண்ணா
மக்களுக்கானவர்கள் 
வரலாற்றில் என்றும் போற்றபடுவார்கள் 
வரலாறு போற்றும் நம்தளபதி
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
..
ஆலஞ்சியார்

Wednesday, October 13, 2021

நற்சான்று 
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் திமுக வரலாறு காணாத வெற்றிக்கண்டிருக்கிறது .. உழைப்பு உண்மை நேர்மையான ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று ..
..
தளபதி.ஸ்டாலின் 
சொல் செயல் இரண்டிற்கும் பொருளாய் விளங்குகிறார் .. சொன்னதை செய்வதும் இந்த ஆட்சி நமது ஆட்சியென பிரகடனபடுத்தி நல்லாட்சியை தந்ததற்கு மக்கள் வழங்கிய நன்றி அறிவிப்பு..  இந்திய ஒன்றியமே வியப்போடு நோக்கி நிற்கிறதே அதற்கு மக்கள் சொன்ன சந்தோஷ மொழி ..
இப்படியொரு தலைவனை இத்தனை காலம் தவிர்த்ததற்கு கண்ணீரோடு நன்றி சொல்லி நானிலம் போற்றும் பரணி பாடிய நல்பாட்டு .. தேர்தல் வெற்றி என்பதை இயக்கத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதில்லை .. மக்களின் மனம் கொண்டாடுகிற தலைவனை .. இங்கே எக்காரணம் கொண்டும் பாசிசதற்கு அனுமதியில்லை என்பதை உறுதிபடுத்தி மக்கள் தங்களின் மகத்தான தலைவன் பின்னால் அணிவகுத்திருப்பதின் அடையாளமாய் விளங்குகிறது ..
..
தமிழகத்தை சாதியைச்சொல்லி பிரித்துவிடலாம் மதத்தைச் சொல்லி மக்களை வன்முறைக்கு இட்டுசெல்லலாம் என்ற நாக்பூரின் கனவை சிதைத்து இங்கே அறிவின் அடிச்சுவட்டை பின்பற்றி சமூகநீதியை காத்து நிற்போம் என செய்தி சொல்லியிருக்கிறார்கள்.. எத்தனை திட்டங்கள் குறுக்குவழியில் அதிகாரத்தை அடைவோம் .. மெல்ல மெல்ல மக்கள் மனதில் விசத்தை விதைப்போம் என்ற பெரும்சூழ்ச்சியறிந்து மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள் ..
தெளிவாக நல்லாட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் இது ..
திராவிடத்தை வீழ்த்த மொழியை மதத்தை சாதியை தூண்டி கலவரமூட்ட வந்தால் அடிவிழும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் .. அடிமைகள் இனி எழவே முடியாதவாறு புதைக்குழியில் வீழ்ந்து கிடப்பது அந்தோ பரிதாபம்..
..
மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 140 ல் 138 வென்றிருக்கிறது .. ஜனநாயகத்தில் வன்விஜயம் கூட ஆபத்தென்ற மொழி உண்டு ..அதிமுக சரியான தலைமையை தேடவேண்டும் .. எடப்பாடி பன்னீர் இருதுரோகிகள் இனம்காட்டியிருக்கிறார்கள் மக்கள் .. சரியான தலைமையில்லாமல் போனால் அது பாசிசத்தின் வளர்ச்சிக்கு துணைபோகும் எச்சரிக்கை.. கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை என ஜெயா சொன்னார் ஆனால் உண்மையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரியே இல்லாத நிலையை தன் செயல்பாட்டால் தன் தலைமை தரும் நல்லாட்சியால் செய்துகாட்டியிருக்கிறார்..
..
திமுக புறவாசல் வழியாக வெற்றிபெற்றிருப்பதாக பழனியும் பன்னீரும் கூட்டறிக்கையில் சொல்கிறார்கள் .. பாவம் பழக்கதோசம் கூவத்தூரிலும் தவழ்ந்தும் புறவாசல் வழியே ஆட்சிக்கு வந்தவர்களுக்கு நேர்மையோடு தேர்தலில் நின்று வென்று மக்கள் ஆதரவோடு ஆட்சியமைத்திருக்கும் தளபதியாரைப் பற்றி பேச அருகதையில்லை ..
திமுக ஜனநாயக பேரியக்கம்..
அதிமுகவைபோல துரோகத்தால் வளர்ந்த இயக்கமல்ல..
..
திமுக தமிழகத்தின் நம்பிக்கை..
திமுக தமிழர் நலனுக்கானது..
தமிழர்களுக்கானது.. 
..
ஆலஞ்சியார்

Tuesday, October 5, 2021

எப்படி மனம் வந்தது.. போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மீது கார் ஏற்றி கொல்ல.. எத்தனை வன்மிருந்தால் இதை செய்வார்கள்.. பாஜக முதல்வர்கள் கொடூரமான மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் .. மனித உயிர் இவர்களுக்கு அத்தனை கேவலமா .. காந்தியையே சுட்டுக்கொன்ற பாவிகள் கூட்டம் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்திய ஒன்றியம் முகம் கருத்துநிற்கிறது ..
..
ஒன்றிய பிரதமர் அவர்களே
ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் ஏற்றும் கொல்லும் காணொளி அதிர்ச்சியை தரவில்லையா .. இன்னமும் அவர் அமைச்சராக தொடர்வது என்ன நியாயம் .. குறைந்தபட்சம் இரக்கம் கூட இல்லையே.. மதவெறியும் முட்டாள்தனமும் பாஜகவின் பலமென்று நிற்கிறீர்.. அறுதிப்பெரும்பான்மை எதையும் செய்யலாம் .. யாரும் கேட்ககூடாது என்பது சர்வாதிகாரத்தின் உச்சம் .. ஜனநாயகம் வீறுகொள்ளும் போது இருந்த சுவடே தெரியாமல் அழிக்கபடும் அபாயம் இருப்பதை உணரவில்லை.. பொய் பித்தலாட்டம் ஒலிபெருக்கி முன் வீராவேசம், கூச்சபடாமல் திரும்ப திரும்ப
பொய்யை சொல்லி மக்களை திசை திருப்பும் கைங்கரியம் நீண்டநாள் கைக்கொடுக்காது பிரதமரே..
உ.பி.விவசாயிகள் போராட்டத்தில் காரை ஏற்றிக்கொண்ட செயல்கண்டும் அமைதி காத்தால் செத்த பிணத்திற்கு சமம் என ராகுல் சொல்கிறார்.. பிணமாக இருக்க போகிறீரா..
..
நீண்ட போராட்டம்..
நாட்டின் முதுகெலும்பு என காந்தியார் சொன்ன விவசாயிகள் தெருவில் நிற்கிறார்கள்  ..நாட்டின் பிரதமர் யார் யாரையோ பார்க்க நேரம் ஒதுக்குகிறார் .. நள்ளிரவில் புதிய நாடாளுமன்ற  கட்டிடத்தை ஆய்வு செய்கிறார் விமானத்தில் பறந்து கொண்டு பைல் பார்க்கிறார் என போட்டோகிராபரை தூங்கவிடாமல் வேலை வாங்கும் பிரதமர் .. 20 மணி நேரம் உழைப்பதாக சங்கிகள் கதையளக்கிறார்கள் ஆனால் நடுத்தெருவில் நின்று போராடும் விவசாயிகளை சந்தித்து பேச நேரமில்லை 
..
நாடு கேடுகெட்டவர்களின் கையில் மதத்தை மூளையில் ஏற்றி தாண்டவமாடுகிறார்கள் பொய்களால் கட்டிய கூடு என்பதை உணருவதில்லை அதிகாரம் ஆணவம் கொள்ள செய்கிறது .. அகிம்சையை போதித்த தேசம் இன்று ஹிம்சை செய்கிறது .. அறிவுஜீவிகள் கொல்லபட்ட போதே இவர்களை விரட்டியிருக்கவேண்டும் .. கயவர்கள் கொலைகாரர்கள் மதவெறியர்கள் சாதிவெறியர்கள் கூடாராமாய் ஆட்சியாளர்கள்.. இந்திய ஒன்றியம் எதை நோக்கி செல்கிறது சகிப்புதன்மை சமநீதி எல்லாம் காணாமல் போனது .. மாட்டை காக்க காப்பகங்கள் செய்ய தயார் ஆனால் மனிதனை கொல்வோம் மதம் பெயரில் மாட்டின் பெயரில் என்றால் நீங்கள் மூளை மழுங்கியவர்கள்..
..
சர்வாதிகாரத்தை வீழ்த்த எதிரணிகள் ஒன்றிணைய வேண்டியது கட்டாயம் .. 
பாசிசத்தை வேரறுக்க வேண்டியது நமது கடமை ..
நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது .. நாட்டிற்கு பாசிச வளர்க்கும் நாடகமாடும் மோடிகள் தேவைஇல்லை ..
நாசகார சக்திகளை வீழ்த்த ஸ்டாலின்களே தேவை ..
..
ஆலஞ்சியார்

Thursday, September 30, 2021

திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்று நாண்குமாதங்கள் கடந்து.. எத்தனையோ பாராட்டுக்கள் கிடைத்தது ..
ஆனால் நம் இன பகைவர் எச்.ராசா
"STALIN is more dangerous than KARUNANIDHI" - 
கருணாநிதியை விட மிகவும் ஆபத்தானவர் மு.க ஸ்டாலின் ..
என்றது தேன்வந்து பாய்ந்ததை போல மனம் மகிழ்ந்தது.. ஆம் அண்ணாவை போல அல்ல கலைஞர் என்றநிலையிலிருந்து
சற்று முன்னேறி ஸ்டாலின் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார் என்றது பெருமை தரகூடிய விடயம் தான் ..
என்னவெல்லாம் சொன்னார்கள் 
துண்டு சீட்டு வைத்து பேசுகிறார் 
கலைஞரைப் போல் செயல்பட முடியுமா கலைஞரைப்போல அறிவு உண்டா ஆளுமை உண்டா என்றவர்கள் இன்று  கலைஞரை விட ஆபத்தானவர் என அஞ்சுகிறார்கள் 
..
திராவிடம் நல்ல விதையை தான் தேர்வு செய்து விதைக்கும்.. வீரியமுள்ள விதைகள் நிறைய காணகிடைக்கும் 
 மானமும்அறிவும்  மனிதருக்கு அழகென்று பேராசான் பெரியாரின் வழிதோன்றல்கள் சலசலப்பை கண்டு எப்போதும் அஞ்சுவதில்லை.. 
எத்தனை இன்னல்கள் வசைமொழிகள் கேலிகிண்டல்கள் எல்லாம் கொள்கைமுன் எதுவுமில்லை என காலம்தந்த தலைவன் நிரூபணம் செய்கிறார்.. ஆரம்பம் முதலே பாசிசத்திற்கெதிரான குரலை கொஞ்சமும் சுருதிபிறழாமல் ஆணியடிக்கிறார்.. 
..
ஆரம்பம் முதலே சொல்லி வருவதுதான் நீங்கள் பார்க்கபோகும் ஸ்டாலின் வேறு .. அனுபவமும் தனிதிறமையும் நிதானமும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட தலைவர் .. பாசிசத்தை வேரறுக்க திராவிடத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்தி வெற்றிகாண்பார் .. மக்கள் நலனே முக்கியம் யாரை எப்போது எப்படி கையாள்வதென அறிந்தவர் .. கட்சி அரசியல் தெளிவாக அறிந்து யாரை எப்போது களமாட வைப்பதென்ற வித்தையறிந்து செயல்படுகிறார்..
மக்கள் மனமறிந்து ஆளும் தலைவர் காலங்கடந்து பேசபடுவார் .. 
..
காலம் சமைத்த திராவிடத் தலைவன் .. இவரின் ஆளுமை வியக்கவைக்கிறது .. எளிமை  எல்லோரையும் கவர்கிறது .. அரசை நடத்தும் ஆற்றல் தலைவர் தந்தது .. ஒவ்வொரு நாளும் தன் செயலால் ஒன்றியமே திரும்பி பார்க்கிறது..
இப்படியொரு தலைவன் ஒன்றியத்திற்கு தேவையென இங்கே மொழியபடுகிறது .. இவையெல்லாம் கண்டு சங்கிகள் கதறுகிறார்கள் ..
..
கொஞ்சம் பொறுங்கள் பெரியாரே தேவலாம் என சங்கிகள் சொல்லும் காலம் வரும் ஏனெனில் இவர் பெரியாரின் பெயரன் ..
அஞ்சாமை,அளவோடு திமிர், அடங்காமை , இவையாவும் திராவிடம் தரும் .. அறிவுக்கொண்டே ஆயுதம் செய்யும் 
இனி ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  காலம்..
..
ஆலஞ்சியார்

Monday, September 27, 2021

தமிழ்நாடே..

இவர் கைகளைப் பற்றிபிடித்துக்கொள்ளுங்கள் .. விட்டுவிடாதீர்கள் ..

இன்னும் பத்தாண்டுகள்

தமிழ்நாட்டை யாருமே தொட முடியாத உயரத்திற்கு கொண்டுபோவார் ..

நேர்க்கொண்ட பார்வை நெஞ்சுரம்

மனிதாபிமானம், எளியவரின் குரல் கேட்கும் மனது .. யாருக்கும் எதற்கும் அஞ்சாமை, உறுதி,நெஞ்சில் ஈரம்,  நல்ல தலைவன் கிடைத்திருக்கிறான்

கரங்களை விட்டுவிடாதீர் ..

தமிழ்நாடு இழந்ததை பெறவும் .. இழக்காமல் இருக்கவும் நம் உரிமைகளை அடையவும் பறிபோகாமல் தடுக்கவும்,

தலைவன் கிடைத்திருக்கிறான்

விட்டுவிடாதீர்கள்

..

சொல்லொண்ணா துயரம் கண்டோம் .. ஒவ்வொன்றாய் இழந்து நின்றோம் .. கொள்ளைக்கூட்டம் அழித்த நமது கலாச்சாரத்தை பண்பாட்டை அடகுவைத்த மானத்தை மீட்டு சுயமரியாதையோடு தமிழகத்தை வழிநடத்துகிறார்.. இடையிடையே துரோகிகள் மதத்தையும் சாதியையும் கையிலெடுத்து தடைபோட நினைக்கும் போதெல்லாம் உடைத்தெறிந்து நம் பெருமையை நிலைநாட்டுகிறார் தமிழை நீசமொழியெனும் கூட்டம் நம் பெருமைகளை நாகரீகத்தை பாரத பெருமையாக பேசி திரிந்ததை தலையில் கொட்டி இது எம் இனத்தின் நாகரீகம் தமிழர்கள் நாகரிகம் என பறைச்சாற்றி இந்திய ஒன்றியத்தின் வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்தே தொடங்கவேண்டும் என எம் நாகரிகம் பழைமையானது என உலகுக்கு உணர்த்தி கீழடியை காத்தநின்ற சாமியின் கரங்களை விட்டுவிடாதீர்கள்..

..

சொன்னதை செய்துமுடிக்கும் ஆற்றல் மிகு தளபதியை அறிவும் திறமையும் கடின உழைப்பும் கொண்ட படையோடு ஆட்சி செய்கிறார் .. நீட் தேர்வை ஏன் ரத்துசெய்யவேண்டுமென நீதிபதியின் அறிக்கையை பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் இதோ இவரை பின்பற்றி மகாராஷ்டராவும் நீட் எதிர்ப்பை கையிலெடுக்கிறது .. பணமுள்ளவன் மட்டுமே இனி மருத்துவராகலாம் என்ற நிலைக்கு கொண்டுவந்த கயவர்களை இனம் கண்டு தோலுரிக்கிறார்.. அடிமைகள் தயவில் குடியுரிமைச்சட்டம், நீட்தேர்வு என நினைத்ததை சாதித்துக்கொண்டவர்கள் இப்போது விழிபிதுங்குகிறார்கள் .. சமநீதியை சமூகநீதியை இழந்துநின்றோம் இதை மீட்டெடுக்க போர்பிரகடனம் செய்து படையோட்டம் நடத்தும் மாவீரன் கைகளை பற்றிபிடித்துக்கொள்ளுங்கள் ..

..

நல்ல மனம் படைத்தவரிடம் கடும் உழைப்பாளியிடம் கொள்கையிலிருந்து சிறிதும் பிறழாதவரிடம், இந்திய ஒன்றியமே வியந்து நோக்கும் ஒப்பற்ற தலைவராய் மிளிரும் தளபதியார் .. விடாது பிடித்துக்கொள்ளுங்கள் .. பகைவர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள் .. செய்வதறியாது அடிமைகளும் அற்பர்களும் மிரளுகிறார்கள் .. தரந்தாழ்ந்தவர்களில் செயலால்  தமிழனித்தின் பெருமைகள் சீர்குலைய அதை சரிசெய்து தமிழினத்தை தலைநிமிர செய்ய ஒப்பற்ற தலைவன் கிடைத்திருக்கிறார் விட்டுவிடாதீர் கரத்தை பலமாக பற்றிக்கொள்ளுங்கள்..


ஆலஞ்சியார்

Friday, September 24, 2021

அதிமுக அமைச்சர்கள் திமுகவை விமர்சிப்பதாக எண்ணி உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்  ஜெயலலிதா 100 சதவிகிதம் வாக்குறுதியை நிறைவேற்றியவர் என எடப்பாடி கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார்.. பிடிஆர் எப்படி அண்ணாமலைக்கு மனசிதைவு  என சொல்லலாம் என ஊடகம் பொங்குகிறது பாஜகவிற்கு செம்படிக்கும் அதிமுகவை களமிறக்கி அவமானபடுகிறது .. யாரிந்த பிடிஆரென இந்தியா முழுவதும் பேசபடுவதும் இந்திய "ஒன்றிய நிதியமைச்சர் " நிர்மலா சீதாராமனின் தகுதி கேள்விக்குறியாக்கபடுவதும் சுக்கிநூறாக உடைத்தெறியபடுவதும் பாசிச கூட்டத்திற்கு பொறுக்கவில்லை ..
..
எப்படி மனசிதைவு என சொல்லலாம் என கதறுகிறார்கள் பாஜகவில் இருப்பவர்கள் பெரும்பாலோனர் அறிவுக்கொண்டு சிந்திப்பதில்லை அதோடு மூளைச்சலவை செய்யபட்டு பொய்யை கொஞ்சமும் கவலைபடாமல் திரும்ப திரும்ப சொல்பவர்கள் .. மாநிலங்கள் இல்லையேல் ஒன்றியம் இல்லையென நெற்றியில் அடித்து சொன்னதும் நிர்மலாவின் முகம் கருக தொடங்கியது அதிலிருந்தே பொருளாதாரம் குறித்த இவரின் குறியீடுகளும் தெளிவுகளும் வடநாட்டு ஊடகங்கள் செய்தியாக்க பாஜக தலைகள் திணறுவதும் தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் எங்கேவிட்டால் "எல்லாம் தெரிந்துவிடும்" என அஞ்சுகிறார்கள் ..
..
பிராமணரல்லாத ஒருவர் மூளைக்காரி வேசம் போட்ட நிர்மலாவை ஒன்றும் அறியாதவர் என அடுக்கடுக்காய் ஆதாரத்தோடு பிரித்தெறிகிறார் ..கோவம் வரதானே செய்யும் கடவுள் மறுப்பாளர் இல்லை மதுரை மீனாட்சி கோவிலின் "அறங்காவலர்" குடும்பம், எனவே அதையும் குறைகூற முடியவில்லை புள்ளிவிவரத்தோடு பேசுகிறார் பதில் சொல்லமுடியவில்லை  எல்லாபக்கமும் கேட்டை மூடுகிறார்கள் என்ற எரிச்சல் ஊடகங்களில் வலதுசாரிகளின் மொழிகளில் தெரிகிறது .. ஊடகங்களில் புள்ளிவிவரத்தோடு பேசுவதும் GST ல் உள்ள குறைபாடுகள் பெட்ரோலை ஏன் சேர்க்கவில்லை செஸ்வரி குறித்த விளக்கங்கள் ஒன்றிய அரசின் அமைச்சர்களை தூங்கவிடவில்லை வட மாநிலங்களில் பி..டிஆரின் திறமையும் அறிவும் தெளிவாக கருத்துகளும் வியக்கவைக்கிறது கண்டு எரிச்சலை தருகிறது..
..
திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை என காலுக்கடியில் பதவியை தேடிய எடப்பாடி .. இப்போதல்ல திமுக எக்காலத்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் இன்று தமிழகத்தின் கட்டமைப்பை பிறமாநிலங்கள் பெருமை பேசுகின்றன.. ஆட்சிக்கு வந்து நான்கே மாதங்களில் 500 வாக்குறுதிகளில் 202 மேற்பட்டவை நிறைவேற்றபட்டிருக்கிறது பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்,பேறுகாலவிடுமுறை, நகைகடன் தள்ளுபடி என,அடுக்கிகொண்டே போகலாம் எல்லாவற்றிலும் முறைகேடு செய்தவர்கள் போலி பெயர்களில் ஒரே ஆதார் எண்ணில் நகை கடன் என கொள்ளையடித்த கூட்டம் நிர்வாகத்தை பற்றி பேசுவது கொடுமை ஒன்றிய அரசின் அமைச்சர் கைநீட்டி மிரட்டுவதும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அடிமை பயத்தில் எழுந்துநின்றது இந்த நாடு கண்டதுதான் .. திமுகவை கருணாநிதி ஆரம்பிக்கவில்லை என முனுசாமி சொல்கிறார் அதுதெரியும் ஆனால் அதிமுகவை ஜெயலலிதா ஆரம்பிக்கவில்லை என்ற உண்மையும் எம்ஜிஆரை மறந்ததும் மக்கள் அறிவார்கள் .. புழுவைவிட கேவலமானவர்கள் திமுகவையோ தமிழ்நாட்டின் அமைச்சர்களையோ குறைகூற அருகதையற்றவர்கள் ..
கொலைவழக்கும் கொள்ளையடித்து சேர்த்ததும் கண்முன்னே வருவதும் பீதியில் உளறி வைக்கிறார்கள் ..

விரைவில் சிறையில் காலந்தள்ள நேரிடும் என அஞ்சிவது அதிமுக தலைவர்களின் பேச்சுகளில் தெரிகிறது ..  
விமர்சிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும் அது அடிமைகளுக்கில்லை திறமையை வளர்த்துக்கொள்ளவும் அவர்களால் இயலாது .. பி.டி.ஆரை அடக்கிவாசிக்க சொல்லும் ஊடகங்கள் திமிரோடு பதில் தரும் நிர்மலாவை கேள்வி எழுப்புவதில்லை .. நாக்பூரின் வளர்ப்பில் வளரும் ஊடக பொறுக்கித்தனம் .. சரி தவறென்பதை கூட சொல்ல மறுத்து 
மௌனம் காத்துநிற்பது கூட அறம்தவறிய செயல் ..  பொதுவாழ்விற்கு வந்தவர் எல்லோரையும் விமர்சனம் செய்ய உரிமை உண்டு அதில் உண்மையும் நேர்மையும் வேண்டும் .. இரண்டுமில்லாதவர்கள் மௌனம் காப்பதே மேல் 
..
திராவிடம் உண்மையை பேசும் அறிவைக் கொண்டே பேசும் .. நேர்மையோடு நெஞ்சுரத்தோடும் அஞ்சாது நிற்கும் .. அறிவே எமது ஆயுதம் ..
தெளிவோடு திறனோடு எதிர்க்கொள்ளும் ஆற்றல் உண்டு திராவிடப் பேராசான்கள் கற்றுதந்த வழியில் பயணிப்போம் 
..
ஆலஞ்சியார்

Tuesday, September 21, 2021

சமூகநீதிக்காக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை ஏற்கமுடியாதென பொய்யன் பேசுகிறான் .. இவனுக்கெல்லாம் பதில் தரவேண்டுமா என கேட்க கூடும் ..திரும்ப திரும்ப ஒன்றைச்சொல்லி அது குறிப்பிட்டகாலம் வரை நம்பவைப்பதென்பது நாக்பூர் தந்திரம் அதைதான் கூலிக்கு மாரடிக்கும் சின்னபுத்திகாரன் பேசுகிறான் ..
..
பெரியார் கஞ்சன் எனவும் கையெழுத்து போடகூட காசுகேட்பார் என்பதும் உண்மைதான் அந்த பெரியார்தான் பெரியார் கல்லூரியை நிறுவி அடிதட்டுமக்களின் குழந்தைகளின் கல்விக்கு வழிவகுத்தார் .. சமூகநீதிக்காக யாருமே போராடவில்லையா என்ற கேள்வியில் நியாயமிருக்கும் ஆனால் யாரால் நிம்மதியடைய முடிந்தது வெற்றிபெற முடிந்ததென்ற உண்மையை அறிந்தும் ஏன் நாங்களெல்லாம் படிக்கவில்லையா ..அவ்வையார் படிக்கவில்லையா என குதர்க்கம் பேசி திசைதிருப்புவார்கள் ..
உண்மையில் தமிழன் அறிவோடும் நாகரீகத்தோடும் வாழ்ந்தவனை வந்தேறிகள் மதத்தை முன்வைத்து வர்ணத்தை சொல்லி பிரித்து எதைவேண்டுமானாலும் கொடு கல்வியை கொடுக்காதே என பலதலைமுறைகள் கல்வி மறுக்கபட்டு மீண்டு வர நினைக்கும் போதெல்லாம் கல்வியை கேட்டால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று என்ற பலநூறாண்டாய் நம்மை அடிமைபடுத்தியவர்களிடமிருந்து தன்மானத்தோடு திமிரி ஏழ வைத்த பெரியாரை யார் என கேட்கிறார்கள்..
..
1892 ல் இந்து மகாஜன சபை நடத்திய கூட்டத்தில் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைப்பதற்காக கூடிய கூட்டத்தில் அயோத்திதாச பண்டிதர் கோவில் நுழைவு உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டபோது சமாதானம் பேசி ஆகமவிதிகளை சொல்லி மறுத்தவர்கள் எங்கள் வீட்டு குழந்தைகளை நான்காவது வரையாவது படிக்க அனுமதியுங்கள் என்ற போது பண்டிதரை வெளியேற்றினார்களே அதெல்லாம் இந்த சின்னபயலுக்கு தெரியுமா ..இந்திய வரலாற்றில் அரசியல் சாசனத்தை திருத்தி சாதனை படத்தவர் பெரியார் என்ற உண்மை தெரியுமா .. ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் என்றவர் பெரியார்.. ஒடுக்கபட்டவனும் தாழ்த்தபட்டவனும் சமநீதியோடு முன்னேற வேண்டுமென்பதற்காக பாடுபட்டவர் பெரியார்.. விதவை திருமணத்தை ஆதரித்தோடு, தன் நண்பர் ராஜாஜி குடும்பத்திலேயே பால்ய விதவையாக இருந்த லட்சுமிக்கு மறுமணம் செய்துவைக்க மறுத்த ராஜாஜியோடு அவள் தலைவிதி அவ்வளவு தான் என்றவரை மாற்றி புரட்சி செய்தாரே அதெல்லாம் சமூகநீதியில் வராதா ..
வடமாநிலங்களை போல அல்லாமல் இங்கே ஒடுக்கபட்டோர் கல்வியறிவில், சுயமரியாதையில்,
உயரத்தில் நிற்கிறார்களே.. இதெல்லாம் கிழவன் செய்த "காரியம்" என்பது எப்போது புரியும்
..
நிறைய பேர் சமூகநீதி வேண்டி உழைத்தார்கள்.. பாடுபட்டார்கள் அவர்களிடம் கொஞ்சமேனும் தன்சமுதாய உணர்வும்,பதவி,புகழுக்காகவும் 
"அழுக்கை தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன் " அதை போல சுயநலம் இருந்தது ஆனால் சுயநலமற்று மக்களுக்காக தொண்டாற்றிய "பழம்" பெரியார் 
இதை சிறியோர் அறியார்.. பெரியார் கலங்கரை விளக்கானார் திக்குதெரியாமல் நின்றோருக்கு திசைகாட்டினார்.. சமூகநீதி என்பது 
எவனும் எவனும் அடிமையில்லை தன்னிலும் தாழ்ந்தவனோ உயர்ந்தவனோ இல்லை பெண்களை அடிமைபடுத்தும் ஆணாதிக்கசமூகத்திற்கு எதிராக நின்று குரல்தந்து சக மனுஷியாக அவர்களையும் மதித்து இன்னும் கொஞ்சம் கூடுதலாக உயரத்தில் ஏறிட காலமெல்லாம் உழைத்த பெருமகனார் பேசுவும் அருகதைவேண்டும் ..
காசுக்காக விலைபோகும் இந்த கேடுகெட்டவன் கூச்சல்கள் கடைக்கால் மயிறுக்கு சமம் ..
..
பெரியார் என்றென்றும் பெரியார்
..
ஆலஞ்சியார்

Saturday, September 18, 2021

கோவில் ஆக்ரமிப்புகள் அகற்றபட்டும், அத்துமீறி கையகபடுத்தியவை மீட்கபட்டும் வருகின்றன ..வக்ப் நிலங்கள் பெருமளவில் சிலரின் ஆதிக்கத்தில் இருப்பது கண்டறியபட்டிருக்கிறது விரைந்து மீட்கபடும்.. கல்விச்சாலைகள் ஆக்ரமிப்புகள்  மீட்கபடுவது மகிழ்ச்சி தருகிறது ..சரியான நபரிடம் ஆட்சியை தந்திருக்கிறார்கள் மக்கள் 
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாந்து அதனை அவன்கண் விடல்" என்ற குறளுக்கொப்ப அறநெறிமாறாத அரசு அமைந்திருக்கிறது ..
..
ஜேப்பியார் ..
எம்ஜிஆரின் அடியாள் என்று அறியபட்டவர் யாரையாவது மிரட்ட வேண்டுமெனில் ஜேப்பியாரை தான் எம்ஜிஆர் அனுப்புவார்.. ஜெயலலிதா குடும்பவாழ்க்கைக்கு ஆசைபட்டு சோபன்பாபுவோடு இருந்தபோது அவரை மீடக ஜேப்பியாரைதான் அனுப்பினார்  அதை ஜேப்பியாரே சொல்லியும் இருக்கிறார் .. இடையில் அடைக்கலம் தந்த ஜெய்சங்கரிடமிருந்து மீட்டு ஒரிரவு தன்னோடு வைத்திருந்துவிட்டு எம்ஜிஆரிடம் சேர்த்ததாக அவர் எழுதியது ஞாபகம் வருகிறது ..
எம்ஜிஆர் காலத்தில் கள்ளசாராயம் வழிந்தோட காரணமானவர்.. சார்பட்டாவில் கூட இவரின் நினைவு வந்தது .. எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தவரிடமிருந்து பதவியை பிடுங்கி திருநாவுகரசுவிடம் எம்ஜிஆர் தந்தபோது  ஜேப்பியாரை சமாதானபடுத்த எம்ஜிஆர் அளித்த கொடை  இந்த புறம்போக்குநிலங்கள் அதில் கல்லூரியை எழுப்பி இன்று கல்வியாளராக நம்பவைக்கபடுகிறார்.. சாராய வியாபாரிகள் விஸ்வநாதன் போன்றோரையும் கல்வியாளராக ஆக்கியதில் குடிகாரனாக கூட நடிக்காத பொன்மனசெம்மலுக்கு பெரும்பங்குண்டு ..
..
இன்று 91, ஏக்கர் நிலங்கள் மீட்கபட்டிருக்கின்றன சந்தை மதிப்பு ₹6010 கோடி என்கிறார்கள் இப்படி நிறைய கல்வி நிறுவனங்கள் நீர்நிலைகள் மீது கட்டிடங்கள் எழுப்பியிருக்கின்றன வடிகால்கள் மூடபட்டு தண்ணீர் தேங்குகிறநிலை .. சிறுமழையை கூட தாங்கமுடியாமல் வழிந்தோட வழிதடமில்லாமல் தத்தளிக்கிறது .. நிறைய கிராமங்களில் பள்ளிகள் கூட குளங்களை ஆக்ரமித்திருக்கின்றன ஒழுக்கத்தை நேர்மையை போதிக்கவேண்டிய கல்விசாலைகள் ஆக்ரமிப்பில் ஈடுபடுவது வருங்கால தலைமுறைக்கு கேட்டை விதைப்பதை போல.. 
..
சாஸ்திரா பல்கலைகழக ஆக்ரமிப்பு நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் காலதாமதபடுத்துவதை தவிர்க்கவேண்டும் பெரும் அழுத்தம் தரபடலாம் ஆனாலும் விரைந்து அகற்றபடவேண்டும்.   எங்கெல்லாம் நீர்நிலைகளில் கல்விநிலையங்கள் வணக்க, வழிபாட்டுதளங்கள், கோவில் மசூதி தேவாலயம் எம்மதமாகினும் அகற்றிடவேண்டும்.. திடீர் கோவில்கள் அடக்கத்தலங்கள் எதுவாகினும் அகற்றி தூய்மைபடுத்திடல் அவசியம்..
..
துணிவும் நேர்மையும் அறநெறி அரசியலும் கொண்ட தமிழ்நாட்டின் முதல்வர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இதை செய்து முடிப்பார் .. மக்கள் பெரும் நம்பிக்கையோடு வாக்களித்தது பொய்த்திடவில்லை இன்னமும் நிறைய ஆக்ரமிப்புகள் உண்டு கல்விநிலையங்கள் பெயரில் மதத்தின் பெயரில் சாதியின் பெயரில் இல்லாத கடவுளின் பெயரில் வழிநெடுக உண்டு அரசியல் பின்புலத்தில் கொஞ்சமும் அச்சவுணர்வின்றி கயமைகள் அரங்கேறியிருக்கிறது எல்லாகட்சியிலும் இப்படி சிலர்  .. 
தொடர்ந்து ஆக்ரமிப்புகளும் அத்துமீறி விதிமுறைகளை மீறி கட்டபட்டவைகள் கடவுளின் பெயரின் இருந்தாலும் அகற்றபட்டு  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் ..
கொண்டுவருவார் நம் முதல்வர் தளபதியார்
..
ஆலஞ்சியார்

Friday, September 17, 2021

பெரியார்..
இரண்டு விடயங்களை மிக கடுமையாக எதிர்த்தார் .. ஒன்று சாதிய அடுக்கு மற்றொன்று ஆணாதிக்கம்..  இரண்டுமே பெண்களுக்கெதிரானது .. சாதிய கொடுமை ஆண்களை மட்டுமல்ல பெண்களை மிக கடுமையாக கையாண்டது மதமெனும் போர்வையில் உயர்ஜாதி பெண்கள் கூட வரையறைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது .. சாஸ்திரங்கள் என்ற பெயரில் பெண்களுக்கெதிரான செயல்களை நியாயபடுத்தியது .. ஜகத்குருக்கென்று தங்களை அடையாளபடுத்திக்கொண்டவர்கள் தெய்வத்தின் குரலாய் .. பெண்களின் மீதான அடக்குமுறையை சொன்னார்கள்.. வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரியென்று பேசினார்கள் மாதவிடாய் பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்று "மகாபெருசுகள்" உளறிவைத்தன.. பெண்களை போதை பொருளாகவே சமூகம் பார்த்தது .. ஆண்களை விட  எல்லாவற்றிலும் தகுதி குறைந்தவளென்றே எல்லா மதமும் சொன்னது பெண்களை ஆண்களுக்காகவே படைக்க பட்டிருப்பதாக "தெய்வ"செய்திகளை கொண்டுவந்தவர்கள்..? கூட சொன்னார்கள் ..
சமைத்து போடுவதற்கும்  தங்களின் குல வாரிசை சுமக்க.. களைத்துப்போய் வந்தால் கால் அமுக்கிவிட.. சம்பளமில்லாத வேலைக்காரியாக நினைத்தார்கள்..பெண்களை தங்களின் சுகத்திற்காக சந்தோசத்திற்காக படைக்கபட்டதாக நினைத்தார்கள்..
..
பெரியார் தான் பெண்களின் கல்வியின் அவசியத்தை சொன்னார் ..ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்கள் ஊரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. பெண்களுக்கு ஆண்களுக்கு உள்ளதுபோல சகல உரிமையும் உள்ளதென்றார் 
பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்கவேண்டுமென்றார்... (இதே கருத்தை அண்ணல் அம்பேத்கர் சட்டமாக்க முற்பட்டு மசோதா தாக்கல் செய்தபோது
உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்த்து மசோதாவை தோற்கடித்தனர்.. பின்னர் கலைஞர்தான் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகத்தில் கொண்டுவந்து சட்டமியற்றினார் )..
பெண்களுக்கு சொத்து கொடுத்தால் குடும்ப உறவுகள் சீரழிந்துபோகுமென்று "ஜகத்குருக்கள்" சொன்னார்கள்..
..
பெண்கள் எல்லாதுறையிலும் வரவேண்டும் என்று ஆசைபட்டவர் .. ஆண்கள் செய்யும் அனைத்தும் பெண்களாலும் செய்யமுடியும் என்றார்.. ஆண்களை போல உடையணியுங்கள் 
பெண்கள் கையிலிருந்த கரண்டியை பிடிங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள் ..
மாற்றம் தானாய் வரும் .. எவ்வளவு தீர்க்கதரிசன பார்வை.. இன்றைக்கு  மருத்துவர் பொறியாளர் .. வழக்கறிஞர் அரசு ஊழியர்.. அரசு அதிகாரிகள்..இந்திய அரசுப்பணி.. உயரத்தில் பறக்கும் விமானி.. என்னைப்போன்ற சாமானியனின் வீட்டுப்பெண் குழந்தைகள் நீதிபதியாய் வர முடிந்தது இவையனைத்திற்கும் தொடக்கம் குறித்தவர் 
பெரியார்.. ஆம் பிள்ளையார் சுழியெல்லாம் போடாதீர்கள் மடமை..பெரியார் கைத்தடியை போடுங்கள் அதுவே அறிவுடைமை..
..
1938ல் பெண்களெல்லாம் ஒன்று கூடி "பெரியார்" என்றழைத்தார்கள் ..ஆம் பெண்களின் நலனுக்காகவே அதிகம் உழைத்தவர் .. பெண்களால் மட்டுமே சமூதாயத்தில் மாற்றத்தை புரட்சியை நடத்திக்காட்டமுடியும்.. என நம்பியவர் .. அவரின் முயற்சி திராவிட ஆட்சியால் முடிந்தது .. இந்நாளை சமூகநீதி நாள் என அறிவித்த  தமிழக முதல்வருக்கு நன்றிகூர்வோம்..
பெண்ணடிமைத்தனத்தை 
வேரறுத்த எம் பெரியாருக்கு 
#வீரவணக்கம்..
..
#பெரியார்
கிழவனல்ல
எங்கள் கிழக்கு...
..
ஆதிக்கவெறியர்களின்
செவிட்டில் அறைந்தவன்..
சிந்தனையை  புதிதாய் 
சிந்திக்கச் சொன்னவன்
உறக்கத்திலிருந்த
தமிழினத்தை தட்டியெழுப்பி
உன்னை....
வந்தேறி ஆட்டி 
அடித்தமர்த்தியாள்கிறான்...
அடிமடாய் நடத்துகிறான்..
திமிறி எழு ..எனச்சொன்ன
தெற்காசியாவின்
#சாக்ரடீஸ்..
..
புதிய
தொலைநோக்காளான்..
தெய்வத்தொண்டென்கிறார்
சத்யமூர்த்தி  என்று 
முத்துலெட்சுமி அம்மையார்
முறையிட்டபோது
இதுவரை..
எங்கள் வீட்டு பெண்கள்
தேவதாசியாய்
தெய்வதொண்டாற்றிவிட்டோம்
இனி..
உங்கள் வீட்டு பெண்கள்
(பார்பனப் பெண்கள்)
தெய்வத்தொண்டாற்றலாம்
என்றுச் சொல்ல சொன்ன
நம்பிக்கை..
தைரியத்தை..
தன்மானத்தை..
விதைத்த..
#பெருங்கிழவன்...
..
இந்த..
கிழவன் 
மட்டுமில்லையென்றால்
வந்தேறிகளால்..
எங்கள்..
இனம்,கலாச்சாரமெல்லாம்
வேரருக்கப்பட்டிருக்கும்..
..
பிறர்க்கு
தீங்கிழைக்காமல் வாழு..
உனக்கு கடவுளோ,
மதமோ,வழிகாட்டியோ 
தேவையில்லை என்று 
எளிமையாய் வாழ்வியலை 
உணர்த்தியவர்
..
எதையும்
ஆழ்ந்தறியச்சொன்ன
ஏன் எதற்கு..
என கேட்கச்சொன்ன..
எங்களுக்கு உணர்வூட்டியவன்..
..
எங்களின் விடியல்..
ஆம்..
#கிழக்கு_திசை..
..
#HBDPeriyar143
#SocialJusticeDay 
#சமூகநீதிநாள் 
..
ஆலஞ்சியார்

Monday, September 13, 2021

நீட் தேர்விற்கெதிரான சட்டமுன்வரைவு தாக்கலாகிறது எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் மாண்பிமை முதல்வர்.. ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்து தன் எஜமானிய விசுவாசத்தை காட்டி நாங்கள் சிறந்த அடிமைகள் என சொல்லியிருக்கிறது .. பாசிச பாஜக தனக்கு கிடைத்த அடிமைகள் மிகச்சிறந்தவர்கள் சொல்லாமலேயே செய்துகாட்டுவார்கள் என மகிழ்கிறது .. எடப்பாடி மற்றமாநிலங்கள் எதிர்க்கவில்லை என சப்பைகட்டுகிறார் இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டில் தான் மருத்துவ கட்டமைப்பு மிக சிறப்பாக இருப்பதும் இங்குதான் உலகில் மிகசிறந்த மருத்துவசேவைகள் கிடைப்பதும் நீண்டநாட்களாக கண்ணை உறுத்திவந்தது .. ஜெயலலிதா உடலநலக்குறைவும் தொடர்ந்து மரணமும் ஆர்எஸ்எஸ் கைக்கூலி மாஃபா பாண்டிராஜனின் நீட்டிற்கு ஆதரவாக கையெழுத்தும் இன்றைய அவலங்களுக்கு காரணம் ..  அதிமுக முதல்வருக்கே தெரியாமல் பாண்டியராஜன் கையெழுத்திட்டது அதை தொடர்ந்து மிரட்டல் ரெய்டு என அடிமைகளை கொண்டு தமிழ்நாட்டின் நலன்களை ஒவ்வொன்றாய் இழந்ததும் இந்த பாவிகளால் தான் இன்று வாய்சவடால் பேசுவதுதான் வேதனை ..
..
நாடாளுமன்றத்தில் அதிமுகவும் பாமகவும் செய்த சதி இன்று எம் பிள்ளைகள் உயிரை குடிக்கிறது ..
அதிமுக பாமக மக்களை  வஞ்சித்தது .. சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றபட்ட அப்போது எதிர்கட்சியான திமுகவும் ஆதரித்து நீட் தேர்விற்கெதிரான தீர்மானம்  ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதை சொல்லாமல் மறைத்த நயவஞ்சகன் இந்த எடப்பாடி பழனிசாமி .. கொஞ்சமும் குற்றஉணர்வற்று இன்று திமுகவை குறைச்சொல்ல கல்நெஞ்சம் வேண்டும் .. ரெய்டுக்கே பயந்து காலில் விழுந்தி கிடந்தவர் கொடநாடு கொலை வழக்கின் துரிதம் கண்டு நடுங்குவதும் ஒன்றிய அரசு எப்படியும் காப்பாற்றும் என நம்புவதுமே இவ்வளவு நடுங்க காரணம் .. பாவம் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அரசு எதற்கும் அஞ்சாது பின்வாங்காது பயம்கொள்ளாது 
..
நீட் தேர்வு முதலில் மாநில பாடத்தின் கீழ் வரவில்லை வசமாநிலங்களில் நீட்தேர்வில் அப்பட்டமாக விதிமீறல்கள் பள்ளிக்கே வராமல் நீட்தேரேவு எழுத அனுமதிப்பது வினாதாள்கள் முன் வெளியாவது நீட் சென்டர்கள் பணம் பெற்றுக்கொண்டு வினாதாளை மாற்றுவதென அனைத்து அநியாயங்களும் நடக்கிறது தமிழகத்தில் மட்டுமே கெடுபடிகள் பணமுள்ளவர்களின் பிள்ளைகள்  மட்டுமே மருத்துவராக முடிகிறதென உயர்நீதிமன்றமே கவலை கொள்கிற நிலை இது களையபடவேண்டாமா..
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றும் வகையில், முத்தமிழறிஞர் ஆட்சியில் நடைபெற்றதை போல் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவும் நீட் விலக்கு கோரியும் வலிமையான சட்ட முன்முடிவை முன்மொழிந்த மாண்பிமை முதல்வர் .. வரவேற்றிருக்கவேண்டாமா வெளிநடப்பு செய்து மீண்டும் துரோகம் செய்திருக்கிறார் எடப்பாடி .. துரோக வரலாறு மட்டுமே அறிந்து தனக்கு முதல்வர் பதவி தந்தவரையே யாரென கேட்ட, காரியம் ஆகவேண்டுமென்றால் யார் காலையும் பிடிக்கலாம் என கூச்சமே இல்லாமல் சொன்ன மானங்கெட்டவர் .. 
உச்சநீதிமன்ற தீர்ப்பு  எதுவும் செய்யமுடியாதென்று சமாளிக்கிறார்
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுத்தான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றம் செய்ய முடியாதது அல்ல மக்கள் மன்றமே அதிகாரம் கொண்டது அரசியல்சாசனத்திற்கெதிராகவோ இறையாண்மைக்கு எதிராகவோதான் சட்ட திருத்தம் / விலக்கு கொண்டுவர முடியாதே தவிர நீட் விலக்கு நிச்சயம் சாத்தியபடும் .. தயை கூர்ந்து தமிழ்நாட்டு நலனுக்காக குரல்கொடுங்கள் பயந்து தொடைநடுங்கி கேவலமாக நடந்துக்கொள்ளாதீர்கள் ..
நீட் தேர்விற்கெதிரான தீர்மானத்திற்கு பாஜக தவிர்த்த கட்சிகள் ஆதரவு அதிமுகவும் ஆதரவு தந்திருக்கிறது நன்று! 
..
நீட் கோச்சிங் சென்டர், பணம் தீர்மானிக்கிறபோது நடுநிலையோடு தேர்வு என்பதே அயோக்கியத்தனம் .. ஏழை மாணவர்களும் மருத்துவராகலாம் என்ற கனவு மெய்பட நீட்தேர்வை ஒழித்தலே தீர்வு ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
செய்து முடிக்கும் செயல்தலைவர் 
..
ஆலஞ்சியார்

Saturday, September 11, 2021

ஆளுநர் மாற்றம் பாண்டேக்கள் குதூகலம் .. நடைமுறையில் வந்துபோகும் மாற்றங்களைக் கண்டு கொள்கையாளர்கள் மிரளுவதில்லை .. ஒரு முதியவர் போய் மற்றொருவர் அவ்வளவுதான்.. துணைநிலை ஆளுநர் பதவியல்ல இங்கே தமிழ்நாடு யூனியன் பிரதேசமும் அல்ல.. ஆட்டம் ஆரம்பம் என சிலர் தங்களுக்குள் சிரித்துகொள்கிறார்கள் திராவிடத்தின் நிஜஆட்டத்தை கண்டால் மிரண்டுபோவீர்கள்.   
ஆம் அவர்களுக்கே தெரியும்.. மிசாவைகாட்டி மிரட்டினால் தமிழ்நாட்டுக்கு வர விசா வாங்கவேண்டிவரும் என்றவர்கள் 
ஆட நினைத்தால் பிராமணர்கள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாடு என அவர்களே சொல்ல நேரிடுமென அறிவார்கள் இப்போதே திமுக ஆட்சிக்கு வந்தாலே பிராமணாள் எதிர்ப்பு வலுப்பதாக அவர்களே கலவரபடுவதும் தேவையில்லாத அச்சபடுவதும் அறிந்ததுதான் அதனால் தான் மனசாந்திக்காக ஆட்டம் ஆரம்பம் என திருப்தி அடைந்துக்கொள்கிறார்கள் .. எதிர்கட்சியாக இருந்த போதே ஆளுநரை ஆய்விற்கு சென்றதை அடக்கியவர்கள் பிரதமரே சுவரை உடைத்து வந்த சுவடே தெரியமால் ஓடியதும் வரலாறு ..
..
ஆட்டுக்கு தாடி எதற்கென்பதே எமது கொள்கை ஆனாலும் ஆளுநர் பதவி இருக்கிறவரை அவருக்கான மரியாதை உண்டு அவர் ரப்பர்ஸ்டாம்பை போல என்பதை அரசியலமைப்பு நமக்கு உறுதியளித்திருக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்க அரசிற்கே அதிகாரம்
ஏற்கனவே திமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பாத்திமாபீவி ராஜீவ் கொலைவழக்கில் நளினிக்கு தூக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள்தண்டனையாக மாற்றியதை ஏற்காதபோது உயர்நீதிமன்றம் கேபினெட் முடிவை ஏற்பதுமட்டுமே ஆளுநரின் அதிகாரவரம்பு என சுட்டிகாட்டி கடைசியில் கையெழுத்திட்டது அறிவோம் .. 
மக்களின் நலனுக்காக செயல்படும் அரசை மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசை புறவழியில் கலைக்க முடியாதென்ற பொம்மை வழக்கின் தீர்ப்பையும் மாநில ஆளுநர் குறிப்பிட்ட வரம்பிற்குள் நின்று செயல்பட மட்டுமே முடியும் என்றும், அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது ..
..
வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் அவரை கிழிக்க தொடங்கிவிட்டார்கள் .. நாகலாந்தில்
இரண்டு அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து, அதற்காக இருவரை மிரட்டி, அந்த இருவர் கொடுத்த புகாரின் பேரில்
கடந்த மாதம் வரை விசாரணை கமிட்டி சம்மன் அனுப்பியும், நேர்நிற்காதவர்.. அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள் அவ்வளவுதான்  இங்கே  தமிழ்நாட்டில் எதையும் பிரித்து மேய்ந்துவிடுவார்கள் .. 
..
தமிழ்நாடு "தனி" மாநிலம் இங்கே மிரட்டல் எடுபடாது பகுத்தறிவு பேசும் .. அதிலும் இங்கே ஆள்கிறவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
எதற்கும் அஞ்சாத படைத்தலைவன்
நேர்மை நன்னெறி அரசியல் இந்தியாவிற்கே எடுத்துகாட்டான செயல்பாடுகள் இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்கள் கண்டு வியந்து "இங்கிவனை யாம் பெறாமல் போனோமே" என ஏக்கம் கொள்கிறார்கள் .. ஒன்றிய அரசிற்கே வழிகாட்டி மரமாய் உயர்ந்து நிற்கிறார் வெளிப்படையான  அரசு மதவெறியர்கள் சாதிபித்தர்கள் கலங்குகிறார்கள்  இங்கே மதவெறியை தூண்டினாலோ பிறமதத்தை இழிவுபடுத்தினாலோ கட்டம் கட்டபடுவார்கள் என  அறிந்து அடக்கிவாசிக்கிறார்கள் 
உண்மையில் நல்லதொரு மக்களாட்சி நடைபெறுகிறது இடையூறு செய்ய நினைத்தால் இங்கே வேறுமாதிரியாகும் என்பதை நாக்பூர் அறியும் ..
.. 
தமிழ்நாடு #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் நாடு ..
நல்லதை நினை 
நாட்டுக்குமக்கள் சிறப்புற
நல்லதாய் செயல்படு ..
இதுவே திமுக தலைவரின் மந்திரம்  சூழ்ச்சிகளை தந்திரத்தை  வெல்லும் மௌனபுரட்சியாளர் 
எங்கள் முதல்வர் 
அறிவோம் .. அறிந்துகொள்ளுங்கள்
..
ஆலஞ்சியார்

Wednesday, September 8, 2021

CAA விற்கு எதிரான சட்டமன்ற தீர்மானத்தை எதிர்த்தோ ஆதரித்தோ பேசாமல் வெளிநடப்பு செய்த அதிமுகவின் செயல் அதன் இன்றைய பரிதாபநிலையை உணர்த்துகிறது .. நாடாளுமன்றத்தில் பாமக செய்த தவறை திருத்திக்கொண்டது நன்று ..
அதிமுக முழுவதுமாக தன் பலமறியாமல் எழுந்துநிற்க முடியாதவனிடம் அடங்கிநிற்கிற நிலை பாவம் .. அதிமுகவின் தோற்றமும் மறைவும் என எழுதவேண்டிவருமோ என கவலைக்கொள்ள வேண்டியிருக்கிறது .. மெல்ல மெல்ல விழுங்கபடுவது அறியாமல் அடிமைகள் பயத்தில் நடுங்கி நிற்பது தமிழகத்திற்கு ஏற்படும் அவமானம் .. ஆளுமையற்ற தலைமையோ/ ஒருங்கிணைப்போ எதையும் எதிர்க்கவோ சாதிக்கவோ இயலாதென மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ..
..
நயினார் சொறிந்தால் போதும் என கிண்டல் செய்யவில்லை அவை முன்னவர் உண்மையை சொல்கிறார் .. சட்டமன்றத்தின் அங்கீீீகரீக்கபடாத தலைவராக நயினார் செயல்படுவதும் அதை அமோதிப்பதும் இவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு செய்கிற துரோகம் .. துரோகத்தில் தோன்றிய கட்சி இன்று ஒருவருக்கொருவர் காலவாரி கடைசியில் பொம்மலாட்டத்தில் கயிறு மற்றொருவன் கையில் 
எப்படி ஆடவேண்டுமென டெல்லி தீர்மானிக்கிறது .. ஆதரிக்க தைரியமில்லை ஓடிவிட்டார்கள் என முதல்வர் சொல்வது முற்றிலும் உண்மை ..
..
வெளிநடப்பு செய்யவும் சரியான காரணம் வேண்டும்.. சிறுபான்மை சமூகத்திற்கெதிராக அதிலும் முஸ்லிம்களுக்கெதிராக இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டதும் அப்போது அதிமுகவும் பாமகவும் எதிர்த்திருந்தால் சட்டம் நிறைவேறியிருக்காது .. அன்று தங்கள் மீது வழக்குகள் பாயும் ஆட்சி கழுவும் என அஞ்சினார் அடிமைகள்.. வெளிப்படையாகவே எச்.ராசா மிரட்டினார் .. இப்போது நெஞ்சுரத்தோடு பெரியாரின் வாரிசு #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
தேர்தல் நேரத்து வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார் .. 
“குடியுரிமை திருத்தச் சட்டம் மத ரீதியாக பாகுபாடு காட்டுகிறது; அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது CAA 
..
அடுக்கடுக்காக சமூகநீதியை நிலைநாட்டி எல்லாதரப்பு மக்களுக்கு நலன்பயக்கும் அரசாய், பாதிக்கபட்டவர்களுக்கு துணைநிற்கும் செயலால் உயர்ந்துநிற்கிறார்
அவரது மகுடத்தில் மற்றுமொரு வைரம் ..
அஞ்சாமையும் நேர்மையும் நெஞ்சுரமும் கொண்ட முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகளும் முத்தங்களும் 
நன்றி முதல்வரே..
..
ஆலஞ்சியார்

Saturday, September 4, 2021

அயோத்திதாசருக்கு மணிமண்டபம்.. யாரிந்த அயோத்திதாசர் சனாதனத்தால் ஒடுக்கபட்டு தீட்டானவர்களென ஒதுக்கபட்டவர்களுக்காக குரல் கொடுத்தவர்.. ஆதிதிராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்று உறுதியோடு சொன்னவர்  பறையர்சமூக முன்னேற்றத்திற்கு முதன்முதலில் பாடுபட்டவர்..
..
ஆங்கிலேயர்களிடம் பணிசெய்ய ப்ராமணர்களே முன்னுரிமை பெறுவார்கள் சமையல் செய்வதற்கு மாட்டுக்கறியை சமைப்பதற்கு அப்போது தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தபடுவார்கள் அவ்வாறு
இவரது தாத்தா பட்லர் கந்தப்பன்
ஜார்ஜ் ஹாரிங்டனிடம் வேலைபார்த்து வந்தார் .. 
நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் 
இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.. இல்லையெனில் தமிழ்நூல்கள் ஆரிய சூழ்ச்சியில் "போகி" யில் எரிக்கபட்டிருக்கும்..
..
இந்து' அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் 'இந்து' சமூகத்தின் சாதீய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதியக்கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஆதிதிராவிட மக்கள் இந்து அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்தார்.. பறையர்கள் இந்துக்கள் அல்ல அவர்கள் பௌத்தர்கள் என சொன்னவர் ..
..
பண்டிதரால் துவக்கப்பட்ட 'சாதியற்ற திரவிட மஹா ஜன சபையின்' சார்பாக 1891 திசம்பர் 1 தேதி நிறைவேற்றப்பட்ட இலவசக் கல்வி, கோவில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அனுப்பினார். அந்த கோரிக்கைகள் இறுதிவரை நிறைவேற்றப்படவே இல்லை. 
..
சென்னை மகா ஜன சபை 1892 இல் ஏற்பாடு செய்த கூட்டத்தில்,
(அதாவது அரசுக்கு எது எது தேவை என்பதை பரிந்துரை செய்வதற்காக)
நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாய்ப் பண்டிதர் கலந்துகொண்டு, சில கோரிக்கையை சமர்ப்பித்து, விஷ்ணு, சிவன் கோவில்களில் நுழைய அனுமதி கேட்டார். அது உடனே மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார்..அதில் முக்கியமாக கோரிக்கைகள் எங்கள் குழந்தைகளை 4வது வரையாவது படிக்க அனுமதியுங்கள் ..எங்களையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்..
கோவிலுக்கு அனுமதியுங்கள் என்றவுடையே தஞ்சை சாஸ்திரிகள் எழுந்து அதுதான் உங்களுக்கென்று தனிகோவில்கள் உள்ளதே ஏன் ஆகமவிதிகளுக்கு உட்பட்ட கோவிலில் அனுமதிகிடையாதென சொல்லி இதேபோல் மற்ற கோரிக்கைகளுக்கும் நாங்கள் தரும் விளக்கத்தையும் ஏற்பீர்கள் என நம்புகிறேன் என்றார் .. எங்கள் குழந்தைகள் படிக்க என்றவுடன் அங்கே கலகம் ஏற்பட்டு விக்டோரியா ஹாலில் இருந்து வெளியேற்றபட்டார்..
..
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் திராவிடம் என்ன கிழித்தது என்போருக்கு ஏறக்குறைய இதே கோரிக்கைகளோடு 
1952ல் சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் கடைசிவரை மக்கள் ஆதரவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் அதிகாரத்திற்கு வரும் வழியறிந்த அன்றைக்கு முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி "துறைசார்நத கோரிக்கைகளை " வையுங்கள் என்றார் அதாவது சவுக்காரம் படித்துறை,துணிதுவைக்க தண்ணீர்" இப்படி கேளுங்கள் என்றார் அதாவது குழந்தைகள் 4வது வரை படிக்க கூட அனுமதி மறுக்கபட்டது  இடையில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபோது  இனி கல்விசாலைகள் நிறுவ அனுமதி வேண்டுமெனில் எல்லோரையும் சமமாக அமர்த்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பட்டது ஆனால் யாரும் புதிதாக பள்ளிகூடம் திறக்க அனுமதி கோரவில்லை என்பதும் உண்மை.. 
..
அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை, சடங்குகள் பிராமணீய ஆதிக்கம், ஆன்மீகக்கொள்கை, மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு #பகுத்தறிவுவிடுதலையே அவரது தேடலாக இருந்தது.. சாதிசமயமற்ற தமிழர்கள் என அழைக்கவேண்டும் என்றவர் .. பலமொழிகளை கற்றுணர்ந்தவர் வடமொழியில் புலமையும் சித்தவைத்திய அறிவும் கொண்டவர் .. காத்தவராயன் என்ற பெயரை தன் குருவின் மீதுள்ள அன்பால் அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டார்

திராவிட மகாஜனசபை 1891ல் தொடங்கிய, திராவிட பாண்டியன், ஒருபைசா தமிழன் ,என அச்சு ஊடகம் மூலம் திராவிட கருத்தியலை சொன்னவர் 
திராவிட இயக்கத்தின் முன்னோடியான
இவருக்கு தமிழ்நாடு அரசு நினைவு மண்டபம் அமைப்பது போற்றுதலுக்குரிய செயல் 
முதல்வர் தளபதியாருக்கு பாராட்டுகள்
..
ஆலஞ்சியார்

Tuesday, August 31, 2021

ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்த்து அதிமுக வெளிநடப்பு .. 
நல்லது .. 
ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் என்பதே சகிக்கமுடியாத ஒன்று .. ஒரு குற்றவாளி மக்கள் பணத்தை கொள்ளையடித்தது நிரூபணமாகி தண்டிக்கபட்டவர் ..சட்டத்தின் நூலிழையில் தப்பிக்க நினைத்து,  நீதிமன்றம் காலதாமதபடுத்தி அதற்குள் அவர் மரணமடைய புனிதரைப்போல இங்கே கொண்டாடபடுவது மோசமான செயல்.. இங்கே யாருக்கும் வெட்கமில்லை .. A1 குற்றவாளி நான்காண்டு தண்டனையும் ₹100 கோடி தண்டமும் விதித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் சரியென்றது .. ஆனால் நூல் அவரை காத்தது என்று சொல்லலாம் .. அவரின் சொத்துகள் தண்டத்திற்காக (அபராதம்) எடுத்துக்கொள்ளபடவேண்டும்..
இந்திய நீதி அநீதிகளால் பொலிவிழந்து நிற்பது வேதனை இங்கே வல்லவன் வகுத்ததே நீதியாய் இருப்பது அவலம் 
கல்விசாலைகள் குற்றவாளிகள் பெயரில் என்பது வரும் தலைமுறைக்கு செய்யும் துரோகம் நல்ல தலைமுறையை நற்பண்பை நல்லொழுக்கத்தை விதைக்கும் கல்விசாலைகள் கொள்ளைக்காரியின் பெயரில் இருக்ககூடாது ..
..
தமிழ்நாடு சரியானவர் கையில்  அதிகாரம்  கிடைத்து பல்வேறு துறைகளில் மிளிர தொடங்கியிருக்கிறது .. சட்டென்று உணர்ச்சிபடும் விடயங்களில் கூட மிக லாவகமாக முடிவு தருகிறார் 
விநாயகர் சதூர்த்தி பொதுவெளியில் சிலைவைத்து நீர்நிலைகளை மாசுபடுத்தும் செயலை தடுத்திருக்கிறார் அருகில் கேரளாவில் ஓணம் பண்டிகை தளர்வுகள் கொரோனா தொற்று அதிகரித்து கட்டுபடுத்தமுடியாமல் திணறுவதை கண்டு பண்டிகை என்ற பெயரில் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்தும் செயலையும் தடுத்து நிறுத்தி தனிநபர்கள் கொண்டாடி நீரில் கரைப்பதை அனுமதித்து நல்லதொரு நிர்வாகியாய் திகழ்கிறார் நம் முதல்வர்..
..
பாஜக விநாயகரை வைத்து அரசியல் செய்யும் இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும், பாஜக மதத்தை தவிர வேறெந்த பிரச்சனைகளையும் மக்களின் குறைநிறைகளையோ கவனம் செலுத்துவதில்லை அந்த கட்சியே மதவெறி சாதியம் பேசி கலகமூட்டுதல் தான் பெண்களை இழிவுபடுத்துதல் அறிவுக்கொவ்வாத விடயங்களை தூக்கிபிடித்து மானுடரிடையே பிரிவினையை தூண்டி #குறிப்பிட்ட_சமூகம் மேம்பாடடைய இயங்குவதுதான்.. தமிழகத்தின் கொலை கொள்ளையென கட்சியை அடிமைபடுத்திய நாசகாரர்களின் துணையோடு 
தமிழக வளங்களை அழித்து தமிழகத்தை வடவருக்கு தாரைவார்க்க தயாராகி நிற்கும் அடிமைகளை கொண்டு காலூன்றி.
இன்று சட்டமன்றத்தில் நுழைந்திருக்கிறார்கள் .. இப்போதும் அவர்களுக்கு பயம் .. ஒன்றிய அரசின் வேளாண்மை சட்டத்திற்கெதிராக சட்டமுன்வடிவை எதிர்த்து பல்லிளிக்கிறாார்கள் ..மிகவும் ஆபத்தானவர்கள் இந்த அடிமைகள்
..
காழ்ப்புணர்வு சிறிதுமற்ற முதல்வர் கடந்த ஆட்சியில் முதல்வரின் படங்களோடு கூடிய ஸ்கூல்பேக்  அப்படியே இருக்கட்டும் என்கிறார் அதிகாலையிலேயே அமைச்சர்களை அழைத்து பணிகளை சரிசெய்கிறார் .. பத்தாண்டாய் பேசவே பயந்த முதல்வர்கள் போல் அல்லாமல் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு விளக்கமளிக்கிறார் .. கண்ணியமாக சபையை கொண்டுசெல்லும் ஆளுமை ..
எதிர்கட்சிகள் ஒன்றுக்கும் உதவாத தற்சார்பு விடயங்களை மட்டுமே குரல் உயர்த்துகிறார்களே தவிர அரசை குறைகூற வக்கற்று நிற்கிறார்கள் ..கண்ணதாசன் பாடலை சொல்லி நகர்கிறார்கள் 
எதிரிகளும் பகைவர்களும் திகைத்து நிற்கிறார்கள்.. வாக்களிக்காமல் போனவர்கள் வருந்துகிறார்கள் .. இத்தனை கம்பீரமானவரை இதுவரை ஏன் புறக்கணித்தோமென சஞ்சலபடுகிறார்கள் .. அண்டை மாநில அரசியல்வாதிகளின் புகழுரைகள்   நம் முதல்வரின் திறமைக்கு சான்று ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
பெயரல்ல 
தமிழ் சமூகம் 
தமிழ் நிலம் 
தமிழர் வாழ்வு ..
ஆம் தமிழ்நாடு..
..
ஆலஞ்சியார்

Saturday, August 28, 2021

உடன்கட்டை ஏறுதல்
சட்டப்படி
தடைசெய்யப்பட்டிருந்தாலும் சட்டமன்றத்தில் தொடர்கிறது..
 "பாஜக  முன்னே அதிமுக" பின்னே! 
#தோழர்பாலபாரதி 
ஒன்றிய அரசின் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து சட்டசபையிலிருந்து பாஜக வெளிநடப்பை தொடர்ந்து அதிமுகவும் வெளியேறியது ..
"எமக்கு வாய்த்த அடிமைகள் " என்ற வசனம் ஞாபகம் வருகிறது ..
பாஜக சட்டமன்றத் தலைவர் நயினார் நகேந்திரன் எதிர்த்து வெளியேறிய போது அவைதலைவர் கட்சி தர்மம் போயிட்டுவாங்க என்றார் ஆனால் அதிமுகவும் வெளிநடப்பு செய்ததிலிருந்தே அவர்கள் எந்தளவிற்கு பயப்படுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிறது ..

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, நடுவில் இறைவனின் சிரிப்பு. இதுதான்  என் நிலைமை” 
என தன் இயலாமையை பன்னீர் சொல்லிவிட்டு இது அவை முன்னவருக்கு என் நிலைமை தெரியும் என்கிறார் இவர்கள் எந்தளவிற்கு ஊழல் செய்துவிட்டு மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள் என்பதற்கு இவர்களே மொழியே சாட்சியம் கூறுகிறது ..
ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர் இவ்வளவு கண்ணியமாக சபை இதற்குமுன் நடந்ததில்லை என செங்கோட்டையன் சொல்வதிலிருந்தே சபையை எந்தளவு நேர்மையோடு ஜனநாயகத்தன்மையோடும் நடத்துகிறார்கள் என புரியும் .. முன்பும் சபை கண்ணியமான விவாதங்களாலும் எதிர்ப்பு அரவணைப்பு பாராட்டு என கண்ணியம் குறையாமல் நடந்ததுண்டு .. எம்ஜிஆர் காலம் வரை கூட கண்ணிய குறைபாடு அவ்வளவாக இல்லை..
ஆனால் செல்வி ஜெயலலிதா வரவிற்கு பிறகு சட்டைகிழித்துக்கொண்டு நாடகமாடிய தொடங்கியது முதல் காழ்ப்புணர்ச்சியோடு முதியவர்கள் கண்ணியகுறைவாக எள்ளிநகையாடுவது அம்மையாரிடம் நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக கேலிகிண்டல் செய்வதென சபை நாகரீகமற்று பொலிவிழந்து கிடந்தது ஜனநாயகதன்மையற்ற செயல்கள் தனிநபர் துதிபாடல்கள் உச்சத்தில் ஒலிக்க நாடக கம்பெனியைபோல இருந்த சபையை மீட்டு மீண்டும் ஜனநாயகம் மலர்ந்திட வைத்த முதல்வருக்கு நன்றி ..
..
பாஜக வெளியேறியபோது கூட "கட்சி தர்மம் " போயிட்டு வாங்க என சபைதலைவர் சொல்கிறார் என்ன அழகு.. ஆனால் அதிமுக தொடர்ந்து சமூகநலன், சமூகநீதி தொழிலாளர் விவசாயிகளின் நலன் கல்வி உரிமை தமிழர் பண்பாடு என எல்லாவற்றிலும் துரோகத்தையே செய்கிறது கொஞ்சமும் கவலைபடாமல் .. உணர்வற்ற ஜந்துக்களாகிபோனார்கள் ..
..
மிக சிறந்த வெளிப்படையான நிர்வாகத்தை தருகிறார் மேதகு முதல்வர் அவர்கள் .. சபையில் நேரத்தின் மதிப்பை உணர்ந்து புகழபாடலை வேண்டாமென்கிறார்  முன்னாள் முதல்வரின் புகைபடத்தை அகற்ற 15 கோடி செலவாகும் அதை மாணவர்களின் நலனுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்கிறார் இலவசம்  வேண்டாமென சில அறிவிலிகள் கூச்சல் சத்தம் கேட்கிறது ஆனால் ஏழ்மையில் தினம் தினம் வாழ்வில் போராடும் மக்களுக்கு தான் அதன் அருமை தெரியும் .. அதிலும் தங்கும் விடுதியில் தங்கி வேலைக்கு செல்லும் பெண்கள் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் பணிக்கு சென்றுவர செலவழிப்பது மிச்சமாகும் அதை தங்கள் குடும்பத்திற்கு அனுப்புவார்கள்    இதையெல்லாம் உணராமல் அயல்நாடுகளிலிருந்து தமிழைச்சொல்லி வசூல்நடத்தி பிழைக்கும் கூட்டம் அறியாது.. ஈழ தமிழர் மறுவாழ்வு மையம் என 
மாற்றியது அவர்கள் அகதிகள் அல்ல உறவுகள் என உரக்க சொல்லியிருக்கிறார் ..
(Srilankan Tamil Refugee camps will hence forth be called as Srilankan Tamils Rehabilitation camps)
..
தமிழகம் விடிய தொடங்கி கதிரவனின் ஒளிகீற்று படர தொடங்கி வெளிச்சம் காண்கிறது ..
தீமைகள் நாற்றங்கள் ஒழிந்து நல்லதொரு மாற்றத்தோடு பயணம் தொடங்கியிருக்கிறது 
நல்ல தலைமை 
நல்ல படைதலைவனை கொண்டிருக்கிறோம் 
இளகிய மனம் படைத்தவர் மட்டுமல்ல இரும்புகரம் கொண்டும் அடக்கும் ஆற்றல் பெற்றவர் புகழுக்கு மயங்காத பேராண்மை கொண்ட பண்பாளர் .. 
தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி.ஸ்டாலின் அவர்கள் 
..
தமிழ்நாடு மகிழ்கிறது
..
ஆலஞ்சியார்

Wednesday, August 25, 2021

பாஜக..
ஜனநாயகபாதையில் நேர்மையோடு பயணிக்கும் கட்சி அல்ல.. பாஜக என்பதே பார்பனீயர் நலன் சார்ந்துமட்டுமே இயங்கும் ஆனால் பொதுதளத்தில் தனித்து இயங்க முடியாதென்பதால் மதம் எனும் கூட்டில் மற்றவர்களையும் அடைத்து தேவைபடும் போது காவு கொடுக்கும் .. பொய், பித்தலாட்டம், பாலியன் வன்முறை, பெண்ணடிமைத்தனம், சமூக அநீதி என பயணிக்கும் இயக்கத்தில் விளிம்புநிலை மக்களும் ஒடுக்கபட்ட மக்களும் மூளைசலவை செய்யபடுவார்கள் இலவச கல்வி வேலைவாய்ப்பு என தந்திரத்தோடு காய்நகர்த்தி தேவைபடும் போது அவர்களை கொண்டே கண்ணை குத்தி மகிழ்வார்கள்..
..
இரண்டுநாட்களாக தமிழக பாஜக பேசுபொருளாகியிருக்கிறது .. கே.டி. ராகவன் என்ற நபரின் அந்தரங்க லீலைகளை படமாக்கி அதை வைத்து பேர்தேட நினைத்த மதன் .. யாருமிங்கே ஒழுக்கமில்லை.. தனிநபரின் விடயங்களை விமர்சிப்பதோ சுகம்காண்பதோ தேவையில்லாதது ..ராகவனின் அரசியல் நமக்கு ஏற்புடையதல்ல கீழ்தரமானது மதவெறியின் கொடுமுடியில் நின்றாடும் நர்த்தனம் அவருடைய அரசியல் .. விமர்சனம் நிறைய உண்டு .. 
பாஜகவில் ஒழுக்ககேடானவர்கள் நிறைய உண்டு அது பாஜகவின் ஆரம்ப தகுதியாக கூட இருக்கலாம்.. அது காரியமல்ல
ஆனால் அதை வைத்து இவர்கள் நடத்தும்  நாடகம் சகிக்கவில்லை 
பாஜக கொள்கைக்கெதிராக இருந்ததால் மதனும் வெண்பாவும்  கட்சியிலிருந்து நீக்கபடுவதாக அறிவிக்கிறார்கள் .. வெண்பா அதிமுக உறுப்பினராம்..😃
மதன் செயல் அயோக்கியதனமானதென்பதில் நமக்கு கருத்துமுரண் இல்லை ..
ஆனால் பாஜக கொள்கைப்பற்றி பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது ..
..
பொதுசமூகம். ? ராகவனுக்கும் மனைவி குழந்தைகள் உண்டே நினைத்து பார்த்தார்களா என கேள்வி எழுப்புகிறார்கள் ..நன்று இதே அளவுகோலை மற்றவர்களுக்கு பயன்படுத்தியதுண்டு வயதான, சக்கரநாற்காலியில் வலம்வந்த தலைவனை நடிகையோடு இணைத்து கட்டுரை தீட்டினார்களே அப்போது இந்த சமூகம் எங்கே போனது.. சுயமரியாதைகாரர்களை இணைத்து பேசி புகளாகிதம் அடைந்தார்களே அப்போதெல்லாம் அவர்களுக்கு குடும்பம் உண்டென்பதை மறந்து போனார்களா..?
ராகவனுக்காக யூடியூப் சேனலையே முடக்க முடிகிறதே தொடர்ந்து அவதூறை பரப்பும் 
மாரிதாஸின் சேனல் முடக்கபட்டதா 
பார்பனருக்காக வேகமாக செயல்படும் உள்துறை மற்றவர்களின் விடயங்களில் மவுனம் காப்பதேன் ..
..
பாஜக தலைவர்கள் மீது அந்த கட்சியின் மகளிர் அணியினரே பாலியல் புகார் அளித்திருக்கிறார்கள் கலிவரதன் மீதும் பாஜக மாணவரணி தலைவர் மீதும் புகார் உண்டு ..தொடர்ந்து பொதுவாழ்விற்கு வரும் பெண்கள் பாலியல் தொந்தரவு நடந்துக்கொண்டுதானிருக்கிறது அதிகாரத்தில் இருந்தால் எதையும் செய்யலாம் என நமக்கு பொள்ளாச்சி அதிர்ச்சியளித்தது 
சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க ஜோதிமணி எம்.பி புகாரளித்திருக்கிறார் விரைந்து விசாரணை செய்யபடவேண்டும் 
..
பொதுவாழ்வில் கழிவுகளையும் கழிசடைகளையும் கொண்ட கட்சியாக  பாஜக இருக்கிறது 
சட்டமன்றத்திலேயே ஆபாசபடம் பார்த்த வரலாறு கோவில் கருவறையில் களியாட்டம் என பாஜக என்றாலே பாலியல் கூடாரம் என பேச்சு உண்டு.. மதத்தை மட்டுமே முன்னெடுக்கும் மடையர்களும் புராண இதிகாச புரட்டுகளை நம்புகிறவர்களும் வேறெப்படி இருப்பார்கள் ..
ராகவன் வகையறாக்கள் கடவுள் முன்பு சுயம் காண்பவர்கள் தான் அவர்களுக்கு தெரியும் கடவுள் என்று எதுவுமில்லையென்று .. காமகளிட்டாத்தை கடவுள் துணைக் கொண்டே நடத்துவார்கள் .. ஜெகத் குரு எல்லாம் காமலீலைகளை நடத்தியதும், அன்றைய அனுராதாக்கள் புலம்பியும் எதுவும் நடக்கவில்லை .. பார்பனரென்றால் எல்லாம் தலைகீழாகும் .. நீதி கூட தடுமாறும்..
பார்ப்போம் .. 
..
ஆலஞ்சியார்

Friday, August 20, 2021

துரை..
திமுக பொதுச் செயலாளராக உயர்ந்து நிற்கும் துரைமுருகன் ..
நாவன்மையும் பேச்சில் நளினமும் நையாண்டியோடு காய்நகர்த்தும் அழகும் கலைஞரோடு இரண்டறகலந்த தொண்டனாய் கழகத்தின் போர்வீரனாய் கலைஞரின் நடுவிரலாய் கழகம் காத்த தொண்டன் ..
..
50 ஆண்டுகள் சட்டமன்றத்தில் மெல்லிசையாய்,பேரிறைச்சலோடு கொடுங்காற்றாய்,  தீப்பொறியாய் 
ஆளும் கட்சியை நடுநடுங்கவைத்த சிம்மகுரலாய் திகழ்ந்தவர் .. இவர்கள் இருந்தால் என மூவரை கண்டு பயந்த வரலாறு எம்ஜிஆருக்கு உண்டு அந்த மூவரில் ஒருவர் .. தெளிவோடு ஆதாரத்தை எடுத்து வைத்து இவர் ஆற்றிய உரைவீச்சுகள் எம்ஜிஆரை கிடுகிடுக்க வைத்தது .. அண்ணாவை ஏற்று அரசியலை தொடங்கிய துரைமுருகன் கலைஞரின் நம்பிக்கைக்குரியவராய் கடைசிவரை இருந்தார் ..தனக்கு கல்லூரியில் படிக்க உதவிய எம்ஜிஆர் அழைத்தும் போகாதவர் .. இவர் விருப்பட்டிருந்தால் எம்ஜிஆரின் வலதாக முடியும் ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியோடு என் தலைவர் கலைஞர்தான் உங்கள் மீது மரியாதையும் நன்றியும் உண்டு அதற்காக நான் ஏற்ற கொள்கையிலிருந்து மாறி தலைவருக்கு துரோகம் செய்ய முடியாதென உறுதியோடு சொன்னவர் 
..
திரு.வைகோ ஒரு நள்ளிரவில் கன்னியாகுமரி கடற்கரையில் அமர்ந்து இவரோடும் மூத்த தலைவர் ஆற்காட்டாரோடும் பேசிக்கொண்டிருந்தபோது கலைஞருக்கு பிறகு நீர்தான் என பேச்சு வர .. அதற்கு  வைகோ பெரியார் போல 95 வயதுவரை வாழ்ந்தால் என கேட்க நிசப்தமாய் அந்த இரவு விடிந்தது.. அதறிந்த கலைஞர் ஒரு முறை அந்த இருவரில் ஒருவர் இரும்புபெட்டி இன்னொருவர் கண்ணாடி பெட்டி என கூறியதை நினைவுகூற வேண்டியிருக்கிறது .. கொள்கையில் எஃகு போன்ற உறுதி துரைக்குண்டு ..
..
நகைச்சுவை ததும்ப பேசும் ஆற்றல் உண்டு .. பாஜகவோடு சிலநேரம் கனிவு காட்ட நினைத்ததும் அது தனக்கே எதிராக வருவதை அறிந்து மாற்றிக்கொண்டதும் உண்டு எப்போதும் கரைசேர்க்கும் காட்பாடி இம்முறை தள்ளாட வைத்ததின் "பொருள்" அறிந்தவர் 
சஞ்சலமில்லாத கொள்கையே கரைசேர்க்கும் என காலம் உணர்த்தியது ..  கலைஞரின் இறுதிகாலங்களில் கரத்தை பிடித்துக்கொண்டே பயணித்தவர் இன்று கழகத்தின் உயர்பதவியில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறது ..
1971ல் முதல்முதலில் தேர்தலில் நிற்க பணமில்லை என்றவுடன் தயாளு அம்மாளின் தயாளமனம் ₹10000 தந்துதவியதும், இன்று கழகத்தின் முக்கிய தலைவராக உயர்ந்து நிற்பதை காணும் போது மனம் மகிழ்கிறது ..
..
திராவிட இயக்க வரலாற்றில் இடம்பெறும் தலைவர்களில் ஒருவர் துரைமுருகன் அய்யா அவர்கள் .. கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தால் உயரத்திற்கு வரலாம் என்பதற்கும்
துரையின் அரசியல் பயணம் உதாரணம்.  வெற்றி தோல்வியல்ல இயக்கத்தின் வலிமை தொண்டர்களின் பலத்தில் என்பதை உணர்ந்து திராவிட சித்தாந்தத்தை உயர்த்திபிடித்து திராவிட இயக்கத்தின் நான்காம் தலைவனோடு இணைந்து செயலாற்றும் துரைமுருகன் அய்யாவிற்கு வாழ்த்துகள்..
தலைவர் தளபதியார்,
நான் கலைஞர் பேராசிரியர் வரிசையில் பார்க்கிறேன் என்கிறார் இதைவிட பேறு இல்லை..

..
ஆலஞ்சியார்
ஞான தந்தையே 
போய்விட்டீரா..
இறுதி மூச்சுவரை கொள்கைமாறாமல் தன் வாழ்வில் சுயமரியாதைகாரனாய் உறுதியோடு இருந்தீர் .. மண்ணறை கிடத்தி மண்மூடும் போது ஓங்கி ஒலித்த சுயமரியாதை "ஒலி" நீர் வாழ்ந்த வாழ்வில் மகிமையை உணர்த்தியது வீரவணக்கம்..
பல்வேறு தமிழ் அமைப்புகள் உன் இறுதிபயணத்தில் கண்களில் நீர்வழிய கலங்கி நின்றது நீர் வாழ்ந்த வாழ்வை சொல்லியது 
கொஞ்சமும் கலங்காமல் சமசரமற்ற பாதையில் பயணித்தீர் 
நல்ல கொள்கையாளர் தேடி அரங்கேற்றம் செய்தீர்.. நல்ல விதைகளை விதைத்திருக்கிறீர்..
ஒவ்வொன்றும் "தரு" ஆகும்.. 
..
குவைத் பெரியாரென பெருமக்களால் போற்றபட்ட 
பெருமைக்குரிய ஆசான் 
ச.செல்லபெருமாள் 
விடைபெற்றார்..
ஞானதந்தையே போய்வாரும்
..
ஆலஞ்சியார்


Tuesday, August 17, 2021

ப்ராமணனை கண்ணீர் விட வைத்தவர்கள் அழிந்து போவார்கள் .. பார்பனர் ஒருவர் படபடக்கிறார்..
சட்டசபையில் மக்கள் பிரச்சனையை பேசினால்  நிதியமைச்சர் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்..
கொடாநாடு வழக்கு முடியும் தருவாயில் மீண்டும் விசாரணை ஏன் என பழநிசாமி பதறுகிறார்..
..
#ப்ராமணன் யார் ..
இந்துமதம் ப்ராமணனரைப்பற்றி என்ன சொல்கிறது அதை சரியாக கடைப்பிடிக்கிறார்களா.. 
ஏழ்மைவாழ்வு .. கையேந்தி வஜீபனம் கடல்தாண்ட கூடாது பெண்களை வேலைக்கு அனுப்பகூடாது விபச்சாரம் பெருகும்  .தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கெட்டுபோய்விட்டது .. பெண்கள் ஆசைநாயகிகள் இப்படி நிறைய சொல்கிறது.. ப்ராமண வாழ்வை இங்கு எவனும் வாழவில்லை ..
இந்து மதம் என்பதே ஆங்கிலேயர் வருவிற்கு முன்பு பிராமண மதமாகதான் கருதபட்டது .. எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள் .. காவிரிக்கரையில் விவசாயம் செய்தார்கள் அவர்களிடமிருந்து போனதும் தண்ணீர் பிரச்சனை வந்தது .. கல்வியில் தனி ராஜ்ஜியம் கொண்டிருந்தார்கள் படிப்பு உனக்கு வராது என்றார்கள் முடியும் என சாதித்த போது அதற்கும் வேட்டு (நீட்வடிவில்) கொண்டுவந்தார்கள் .. நீதிபரிபாலன சபை ஆதிக்கத்தை தகர்த்த போது மிரட்டபடுகிறார்கள் 
நாமெல்லாம் ஒரே மதம் என சொன்னவன் நானும் அர்ச்சகராகிறேன் என்றவுடன் கடவுளை வீட்டுக்கு கொண்டுபோய்விடுங்கள் என தன்சார்ந்தோர்க்கு அறிவுரை சொல்கிறான் .. அப்படியெனில் ப்ராமணனின் கடவுள் வேறு .. இடைசாதி கடைசாதியினரின் கடவுள் வேறு .. கலவரம் பண்ண நான் வேண்டும் ..
கும்பிட்டு மனதுறுகி பாட நான் கூடாதா .. 
கடவுள் பொதுவானவனெனில் 
எனக்கு உரிமையில்லையா .. ஆகமவிதிகள் என்பதே தங்கள் கைவிட்டு போக கூடாதென்பதற்காக உருவாக்கபட்டதே தவிர வேறொன்றுமில்லை .. ப்ராமண சாபம் பலிக்காது 
..
சட்டமன்றம் 
தமிழக சட்டமன்றம் இந்திய ஒன்றியத்திற்கு முன்னோடியாய் திகழ்ந்தது இங்கு அறிவுசார் கூட்டம் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதியாய் பங்களித்து ஆளும் அரசை கதிகலங்க வைக்கும் .. திறமையானவர்கள் அறிவாளிகள் 
என தலைசிறந்த ஆளுமைகளை கண்ட தமிழ்நாடு சட்டமன்றம் அறிவுசூன்யங்களை இப்போது காண்கிறது .. ராமாயணம் எழுதியவரை தெரியாதவன் அண்ணாவிற்கு பிறகு அதிகம் புத்தகங்கள் படித்தவன் என்றபோதே கிழித்திருக்கவேண்டும் ஞானசூன்யங்களால் தமிழ்நாடு மதிப்பிழந்து போனது தான் மிச்சம்.
பொருளாதாரம் பற்றிதான் நிதியமைச்சர் பேசுவார் அவர் பேசுவதும் மக்களுக்காக தான் மக்கள் பிரச்சனையை மைய்யபடுத்திதான் .. தடுமாறிவிழுந்தவன் யானை மாலைபோட்டதால் மன்னன் ஆனவன், அடிப்படை தகுதியற்ற, மக்களை கேலிகூத்தாக நினைத்து 
கொள்ளையடித்து .. வடநாட்டவருக்கு கைகட்டி நின்று தன்மானமிழந்த எடப்பாடி பழநிசாமி அவர்களுக்கு பேச யோக்கியதை இல்லை விமர்சனம் செய்ய, எதிர்க்கட்சி தலைவராக இருக்க கொஞ்சமும் தகுதியற்றவர் எடப்பாடி பழநிசாமி 
..
கொடாநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை கண்டு ஏன் அஞ்சுகிறது இந்த அடிமைகூட்டம் ..
காவலாளி கொலைசெய்யபடுகிறார் சிசிடிவி கேமரா செயலிழக்கிறது .. ஓட்டுனரை கேரளாவில் விபத்துள்ளாகிறார் மர்ம தொடரை போல கதை கேட்டுக்கொண்டிருந்தோம் .. ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து விசாரணை கமிஷன் முன்  நேர்நிற்காத பன்னீர் இப்போது பதறுகிறார் எங்கே  ஜெயலலிதா வழக்கு துரிதம் பிடிக்கும் என அஞ்சுவது அவரின் பேச்சில் தெரிகிறது .. மடியில் கனமில்லையெனில் வழியில் ஏன் பயம் .. இவர்கள் தான் விசாரணை விரைந்து நடத்த வேண்டுமென அரசிற்கு கோரிக்கை வைத்திருக்க வேண்டும் .. தவறு செய்தவர்கள் தண்டிக்கபடுவார்களென அரசின் தலைவர் சொன்னதும் இரண்டுநாள் சபைக்கே வரமாட்டார்களாம் .. ஓடியொளிவதால் பலனில்லை 
சட்டம் கடமையை செய்யும்..
..
சட்டபடி குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்கிறார் தமிழ்நாட்டரசின் முதல்வர் ..
நீங்கள் ஏன் பயபடுகிறீர் பழநி அவர்களே..
எப்பன் குதிருக்குள் இல்லை ..
இன்னும் பலது இருக்கு..
எங்கும் ஓட முடியாது சுடலைசாமி கணக்கு தீர்க்கும்..
எல்லாம் நியாயபடி நடக்கும் .. இப்போது யாரும் துணைக்கு வர மாட்டார்கள் கூட்டணி தலைவர்கள் மெல்ல நகர்வார்கள் ஒன்றியம் கைகழுவும் இப்படிதான் இனி..
ஜெயலலிதா சாவின் மர்மமும் வெளிவரும் போது ஒட்டுமொத்த அடிமைகள் சிறையில் இருப்பார்கள்..
..
ஆலஞ்சியார்

Monday, August 16, 2021

கேள்வி எழுப்பும் முன் 
அதை கேட்க தகுதியானவன் தானா என எண்ணிபார்க்கவேண்டும் அரசியல் அடிமைகளாய் கால்பிடித்தும் நக்கியும் விழுந்து தவழ்ந்தும் வந்தவர்கள் திமுக தலைவர் மாண்பிமை தமிழக முதல்வரை பார்த்து வாக்குறுதி என்னானது என கேட்க சட்டமன்றத்தில் பதிலடி தந்துள்ளார் ..
..
அடிமை அதிமுகவினர் தெருவில் இறங்கி போராட்டமெல்லாம் செய்தார்கள் அந்த நேரத்தில் கூட கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் தளபதி அவர்கள் 
கொரோனாவின் கோரதாண்டவம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தபோது அவசரஊர்திகளின் சத்தம் ஓயாமல் அலறிபோது தளபதி தன் சகாக்களோடு உழைத்துக்கொண்டிருந்தார்.. படுக்கைகள் காலி இல்லை உயிர்வளி (ஆக்ஸிஜன்)  கையிருப்பில்லை என்றவுடன் விரைந்து நடவடிக்கை அமைச்சர்கள் சக்கரம்கட்டி ஓடினார்கள் .. பல்வேறு அவசர மருத்துவமனைகளை 15நாட்களில் கட்டி வரலாறுபடைத்தார்கள் சில வாரத்திலேயே 50,000 படுக்கைகள் காலியாக இருப்பதாக சொல்லும் திறன் திமுக ஆட்சிக்கு இருந்ததர இதுதான் சாதனை ..
இதுவே அடிமைகள் தொடர்ந்திருந்தால் சாவுமணி அடித்துக்கொண்டே இருந்திருக்கும்.. கொரோனா கால நிவாரணம் இரு தவணையாக ₹4000.. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் 100 நாட்கள் மக்கள் குறைதீர்க்க பெறபட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை
என ஒவ்வொரு வாக்குறுதிகள் 
நிறைவேற்றபடுவது தெரிந்தும் 
இந்த பொய்யர்கள் சொன்னதையே சொல்ல .. கூட வந்த பாஜக பாமக நேர்மையான அதிகாரிகளை கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பாராட்டு பத்திரம் தர அடிமை அதிமுகவிற்கோ எரிய தொடங்கியது .. ஒன்றிய அரசு செய்ய தவறியதை பெட்ரோல் வரிகுறைப்பு செய்து பிற மாநிலங்களும் வியக்க மோடி அரசிற்கு நெருக்கடியை தந்தது 
முதல்வர் தளபதியின் தனி பாதையை உணர்த்தியது..

..
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு பாஜகவில் இருக்கும் பார்ப்பனர் அல்லாத தலைகள் ஆட தொடங்கியதுதான் ஹைலைட்.. 
நெடுங்காலமாய் எம் ஆசானின் நெஞ்சை தைத்த முள்ளை பேரன் எடுத்தெறிந்தார் .. பெண் ஓதுவார் கலைஞர் அங்கையர்கன்னியை நியமித்து துவங்கி வைக்க கடந்த பத்தாண்டாய் கண்டுக்கொள்ளாமல் இருந்தார்கள் மீண்டும் கோவிலில் பெண் ஓதுவார் கடவுள் மனம் குளிர்ந்தார்.. 
..
முதல்வரை நேரில் அழைக்கலாம் வரும் வழியில் மறித்து பேசலாம் உரிமையோடு முககவசத்தை அகற்ற சொல்லலாம் இவையெல்லாம் மேலைநாடுகளில் கண்டது இது நல்ல தொடக்கம் ..விரைந்து ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவேன் இது எனது அரசு அல்ல மக்களாகிய உங்கள் அரசு என ஜனநாயகத்தின் அறத்தை நமக்கு சொல்லி நேர்மை வெளிப்படைதன்மை விரயமில்லாத வீணாகாமல் மக்களுக்கு சென்று சேர்க்கும் துணிவும் நேர்மையும் கொண்டவர்களை அதிகாரிகளாயே நியமித்து படையோட்டம் நிகழ்த்துகிறார்
தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி.ஸ்டாலின்..
சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோமென
தமிழ்நாட்டின் முதல்வர் சொல்கிறார் ..செய்வார்
..
ஆலஞ்சியார்

Saturday, August 14, 2021

கொள்கைக் குன்று சமசரமற்ற சமூகபோராளி தன்னலமற்ற சேவை பெரியாரிடம் தந்த வாக்குறுதிக்காக வாழ்நாள் முழுவதும் புத்தங்களை சுமந்து நடமாடும் நூலகமாய் குவைத்தில் பெரும்பணியாற்றிய பேரன்பாளர் 
மானமிகு ச.செல்லபெருமாள் அய்யா
Chella Perumal Raju 
அவர்கள் மறைந்தார் 
..
ஒவ்வொரு மனிதனும் செத்துபோவது உண்மைதான்...
என்றாலும் 
அவரோட முயற்சிகளும், 
அவர் தொடங்கிய காரியங்களும்,
செத்துபோவதில்லை என்றார்
பெரியார் ஆம் அவர் தொடங்கிவைத்த சமூகப்பணியை இன்று பல அமைப்புகள் குவைத்தில் செய்துவருகின்றன .. பல்வேறு சமூகதளத்தில் பயணித்தாலும் அனைவரும் பெரியவர் அய்யா அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தனர்..  அவரின் வழிதோன்றலாய் மிக சிறப்பாக செயல்படுவதும் அவருக்கு அணிசேர்க்கும்..
..
அவரோடான சந்திப்புகளும் நிகழ்வுகளும் என் வாழ்வில் மறக்கமுடியாத பக்கங்களாய் திகழ்கின்றன .. தோழர் ஆலஞ்சி என பெயரிட்டு அழைத்து மக்கள் முன் நிறுத்தியவர் என் எழுத்தை வெகுவாக ரசிக்கிற, சிலநேரம் விவாதம் செய்கிற சரியெனபட்டதை முகத்திற்குநேரே சொல்லும் நேர்மையாளர் நல்ல விமர்சகர்.. அய்யா அவர்கள் நல்விதைகளை தேடி தேடி விதைத்தவர் .. நல்ல களம் அமைத்து தருவார் இன்றைக்கு நல்ல பேச்சாளர்கள் நல்ல கருத்தாளர்கள் என குவைத் மண்ணில் மின்னுகிறவர்கள் எல்லோருமே அய்யாவின் பட்டறையில் பயின்றவர்கள் .. பெண்களை முன்னிலை படுத்த வேண்டுமென்பதில் முனைப்போடு செயல்பட்டவர் .. கவிதாயினிகள் நாவலாசிரியர்கள் என இன்று புகழபடுகிறவர்கள் அய்யாவின் பெரியார்நூலகத்தின் வார்ப்புகள் 
கொண்ட கொள்கையின் உறுதியோடும் சமூகநலன் சார்ந்து வாழ்ந்த கொள்கை போராளி செல்லபெருமாள் அய்யா அவர்கள்
..
குவைத் தமிழ் சமூகம் இவரை மறந்து செயல்படமுடியாதவாறு இவரின் பங்களிப்பும் உழைப்பும் இருந்தது ..சோர்வில்லாத பயணம்
ஐம்பதாண்டுகளுக்கு மேலாக "#பெரியார்நூலகம்" என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு நிகழ்வுகளை நடத்தி கொள்கை பேசியவர் சிறிய கூட்டமே பெரிய அரங்கோ எங்கெனினும் தான் சொல்ல வந்ததை துணிவோடு சொல்லி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அய்யாவை குவைத் தமிழ் சமூகம் கண்ணீரோடு அஞ்சலி செலுத்துகிறது ..
..
நெஞ்சமெல்ல நிறைந்த அய்யாவிற்கு வீரவணக்கம் 
போய்வாருங்கள் அய்யா 
நீங்கள் விதைத்த விதைகள் 
விருட்சமாய் வளரும் ..
குவைத் தமிழ் சமூகத்திற்கு
நிழல் தந்த  #தரு  நீங்கள் 
..
ஆலஞ்சியார்

Friday, August 6, 2021

தகப்பன்சாமி..
இனம் காத்தவனே..
இடறுகள் ஒருபோதும் உம்மை தளர்த்தியதில்லை
சண்டை போட்டுக்கொண்டே இருந்தாய்
பகைவன் உன் ஆற்றல் கண்டு 
வாளெடுக்க மறந்ததுண்டு 
உன் 
தமிழ் எதிரியையும் மயக்கியதுண்டு..
உன்னைப் போல் ஒருவன் 
இனி வருவானா..
உன் நாதம் எழும் போதெல்லாம் 
சமூகம் நீதி கண்டது 
உன் குரல் பகையை வென்றது 
நீ
அண்ணாவிடம் இதயத்தையும் 
ஆசானிடம் (பெரியார்) துணிவையும்
காயிதெமில்லத்திடம் கண்ணியத்தையும் பெற்றவன் 
உனை வெல்ல எவனுமில்லை என்றாலும்
நிதானம் இழக்காமல் நின்றாடினாய்
..
14 வயதில் தமிழ்க்கொடியேந்திய 
நீ..
செம்மொழியாய் தமிழை உயர்த்தி
நாணயமற்ற கிறுக்கர்களின் வாயடைத்தாய் 
எண்பதாண்டுகள் பொதுவாழ்வு 
நாதியற்ற மக்களின் 
நடுவொடிந்த மனிதர்களின் 
ஒடுக்கபட்டவனின் 
தாழ்ந்துநின்றவனின் 
குரலை செவிமடுத்து 
அவனோடு களம்கண்டு
சப்தமற்றவரின் குரலாய் ஓங்கியொலித்தாய் 
வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வறியவரின் நிலை உயர்த்தி
மறுக்கபட்டவனின் உரிமையை மீட்டுதந்தாய்..
..
உன்னால் மட்டுமே முடிந்தது 
பள்ளத்தில் நிற்போரை 
படிகளில் ஏற்றிட ..
பள்ளி செல்லாத பாட்டனின் 
பேரன் பட்டதாரியானதெல்லாம் உன்னால்தான்.. 
மகளிர் கல்வி 
இலவச மின்சாரம் 
ஊர்தோறும் பள்ளி
மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி
நீ.. 
செய்து முடித்ததெல்லாம் 
ஒன்றியம் தொடரவே முப்பதாண்டானது 
நீ..
மூலம் 
உன் சிந்தனையும் செயலும் 
தொலைநோக்குகொண்டது 
..
கோவா திரைப்படவிழாவில் 
பராசக்தி திரையிட பயந்து
மலைக்கள்ளனை திரையிட்டார்கள் 
பாவம் மலைக்கள்ளனும் 
நீ தந்தெனயறியாதோர் 
உன் வசனம் 
இரத்தத்தை சூடேற்றியது 
பகைவர் பதறினார்
துரோகிகள் வாயடைத்தனர்
தமிழன்னை சிரித்தாள் 
..
தமிழர்களின் திருமந்திரமே
உன் மாயவித்தை கண்டு
மயங்கியவர்கள் உண்டு..
உன் எழுத்து வீரம் பேசியது 
கலைப் பண்பாடு மீட்டது..
பகுத்தறிவு துணைக்கொண்டு 
நீ..
தீட்டியதெல்லாம் பயன் தந்தது 
உனைவெல்ல எவனுமில்லை 
உனை தொடராமல் எவனுக்கும்  
அரசியல் வாழ்வில்லை 
உனைச் சுற்றிய இயங்கவைத்த
ஓய்வறியா சூரியன் நீ.
..
அரசு இயலே
உன் அடிச்சுவடிதான் 
அரசியலின் அரிச்சுவடி
உன்னை கற்றுதான் 
இனி எவரும்
அரசியல் செய்யமுடியும் 
உன் பாதைதான் 
தெளிவான அரசியல்பாதை
உனை இகழ்ந்தோ புகழ்ந்தோ 
பிழைத்தவன் ஆயிரம் 
நீயே.
பொதுவாழ்வின் அன்னம் ..
..
அச்சமன்றவனே..
ஆரூர் தந்த அறிவுச்சுடரே
இடறில்லா பயணத்தில் - உன்
ஈகையால் செழித்ததுதமிழர்வாழ்வு
உன்னை நம்பியவர் வீழ்ந்ததில்லை-என
ஊர்சொல்லும்
எழமுடியாமல் வீழ்ந்தவரையும் உயரத்தில்
ஏற்றிட உழைத்தாய்
ஐயமின்றி இன்று தமிழ்நாடு..
எங்கள் தகப்பன் சாமியே
ஒளிதந்தாய் 
ஓங்குக உன் புகழ்..
உன் புகழ் இறவா..
..
எம் ஞானதந்தையே..
நீ தந்ததும் தரமறுத்ததும் 
எம் வாழ்வில் பயன்தந்தது
நீ.. யின்றி அமையாது தமிழ்நாடு 
உனை மறக்காது தமிழர் நெஞ்சம்
வையம் உள்ளவரை உம் புகழ் நிலைத்திருக்கும்..
வீரவணக்கம்..
..
ஆலஞ்சியார்