கேள்வி எழுப்பும் முன்
அதை கேட்க தகுதியானவன் தானா என எண்ணிபார்க்கவேண்டும் அரசியல் அடிமைகளாய் கால்பிடித்தும் நக்கியும் விழுந்து தவழ்ந்தும் வந்தவர்கள் திமுக தலைவர் மாண்பிமை தமிழக முதல்வரை பார்த்து வாக்குறுதி என்னானது என கேட்க சட்டமன்றத்தில் பதிலடி தந்துள்ளார் ..
..
அடிமை அதிமுகவினர் தெருவில் இறங்கி போராட்டமெல்லாம் செய்தார்கள் அந்த நேரத்தில் கூட கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் தளபதி அவர்கள்
கொரோனாவின் கோரதாண்டவம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தபோது அவசரஊர்திகளின் சத்தம் ஓயாமல் அலறிபோது தளபதி தன் சகாக்களோடு உழைத்துக்கொண்டிருந்தார்.. படுக்கைகள் காலி இல்லை உயிர்வளி (ஆக்ஸிஜன்) கையிருப்பில்லை என்றவுடன் விரைந்து நடவடிக்கை அமைச்சர்கள் சக்கரம்கட்டி ஓடினார்கள் .. பல்வேறு அவசர மருத்துவமனைகளை 15நாட்களில் கட்டி வரலாறுபடைத்தார்கள் சில வாரத்திலேயே 50,000 படுக்கைகள் காலியாக இருப்பதாக சொல்லும் திறன் திமுக ஆட்சிக்கு இருந்ததர இதுதான் சாதனை ..
இதுவே அடிமைகள் தொடர்ந்திருந்தால் சாவுமணி அடித்துக்கொண்டே இருந்திருக்கும்.. கொரோனா கால நிவாரணம் இரு தவணையாக ₹4000.. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் 100 நாட்கள் மக்கள் குறைதீர்க்க பெறபட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை
என ஒவ்வொரு வாக்குறுதிகள்
நிறைவேற்றபடுவது தெரிந்தும்
இந்த பொய்யர்கள் சொன்னதையே சொல்ல .. கூட வந்த பாஜக பாமக நேர்மையான அதிகாரிகளை கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பாராட்டு பத்திரம் தர அடிமை அதிமுகவிற்கோ எரிய தொடங்கியது .. ஒன்றிய அரசு செய்ய தவறியதை பெட்ரோல் வரிகுறைப்பு செய்து பிற மாநிலங்களும் வியக்க மோடி அரசிற்கு நெருக்கடியை தந்தது
முதல்வர் தளபதியின் தனி பாதையை உணர்த்தியது..
..
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு பாஜகவில் இருக்கும் பார்ப்பனர் அல்லாத தலைகள் ஆட தொடங்கியதுதான் ஹைலைட்..
நெடுங்காலமாய் எம் ஆசானின் நெஞ்சை தைத்த முள்ளை பேரன் எடுத்தெறிந்தார் .. பெண் ஓதுவார் கலைஞர் அங்கையர்கன்னியை நியமித்து துவங்கி வைக்க கடந்த பத்தாண்டாய் கண்டுக்கொள்ளாமல் இருந்தார்கள் மீண்டும் கோவிலில் பெண் ஓதுவார் கடவுள் மனம் குளிர்ந்தார்..
..
முதல்வரை நேரில் அழைக்கலாம் வரும் வழியில் மறித்து பேசலாம் உரிமையோடு முககவசத்தை அகற்ற சொல்லலாம் இவையெல்லாம் மேலைநாடுகளில் கண்டது இது நல்ல தொடக்கம் ..விரைந்து ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவேன் இது எனது அரசு அல்ல மக்களாகிய உங்கள் அரசு என ஜனநாயகத்தின் அறத்தை நமக்கு சொல்லி நேர்மை வெளிப்படைதன்மை விரயமில்லாத வீணாகாமல் மக்களுக்கு சென்று சேர்க்கும் துணிவும் நேர்மையும் கொண்டவர்களை அதிகாரிகளாயே நியமித்து படையோட்டம் நிகழ்த்துகிறார்
தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி.ஸ்டாலின்..
சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோமென
தமிழ்நாட்டின் முதல்வர் சொல்கிறார் ..செய்வார்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment