Tuesday, August 31, 2021

ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்த்து அதிமுக வெளிநடப்பு .. 
நல்லது .. 
ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் என்பதே சகிக்கமுடியாத ஒன்று .. ஒரு குற்றவாளி மக்கள் பணத்தை கொள்ளையடித்தது நிரூபணமாகி தண்டிக்கபட்டவர் ..சட்டத்தின் நூலிழையில் தப்பிக்க நினைத்து,  நீதிமன்றம் காலதாமதபடுத்தி அதற்குள் அவர் மரணமடைய புனிதரைப்போல இங்கே கொண்டாடபடுவது மோசமான செயல்.. இங்கே யாருக்கும் வெட்கமில்லை .. A1 குற்றவாளி நான்காண்டு தண்டனையும் ₹100 கோடி தண்டமும் விதித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் சரியென்றது .. ஆனால் நூல் அவரை காத்தது என்று சொல்லலாம் .. அவரின் சொத்துகள் தண்டத்திற்காக (அபராதம்) எடுத்துக்கொள்ளபடவேண்டும்..
இந்திய நீதி அநீதிகளால் பொலிவிழந்து நிற்பது வேதனை இங்கே வல்லவன் வகுத்ததே நீதியாய் இருப்பது அவலம் 
கல்விசாலைகள் குற்றவாளிகள் பெயரில் என்பது வரும் தலைமுறைக்கு செய்யும் துரோகம் நல்ல தலைமுறையை நற்பண்பை நல்லொழுக்கத்தை விதைக்கும் கல்விசாலைகள் கொள்ளைக்காரியின் பெயரில் இருக்ககூடாது ..
..
தமிழ்நாடு சரியானவர் கையில்  அதிகாரம்  கிடைத்து பல்வேறு துறைகளில் மிளிர தொடங்கியிருக்கிறது .. சட்டென்று உணர்ச்சிபடும் விடயங்களில் கூட மிக லாவகமாக முடிவு தருகிறார் 
விநாயகர் சதூர்த்தி பொதுவெளியில் சிலைவைத்து நீர்நிலைகளை மாசுபடுத்தும் செயலை தடுத்திருக்கிறார் அருகில் கேரளாவில் ஓணம் பண்டிகை தளர்வுகள் கொரோனா தொற்று அதிகரித்து கட்டுபடுத்தமுடியாமல் திணறுவதை கண்டு பண்டிகை என்ற பெயரில் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்தும் செயலையும் தடுத்து நிறுத்தி தனிநபர்கள் கொண்டாடி நீரில் கரைப்பதை அனுமதித்து நல்லதொரு நிர்வாகியாய் திகழ்கிறார் நம் முதல்வர்..
..
பாஜக விநாயகரை வைத்து அரசியல் செய்யும் இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும், பாஜக மதத்தை தவிர வேறெந்த பிரச்சனைகளையும் மக்களின் குறைநிறைகளையோ கவனம் செலுத்துவதில்லை அந்த கட்சியே மதவெறி சாதியம் பேசி கலகமூட்டுதல் தான் பெண்களை இழிவுபடுத்துதல் அறிவுக்கொவ்வாத விடயங்களை தூக்கிபிடித்து மானுடரிடையே பிரிவினையை தூண்டி #குறிப்பிட்ட_சமூகம் மேம்பாடடைய இயங்குவதுதான்.. தமிழகத்தின் கொலை கொள்ளையென கட்சியை அடிமைபடுத்திய நாசகாரர்களின் துணையோடு 
தமிழக வளங்களை அழித்து தமிழகத்தை வடவருக்கு தாரைவார்க்க தயாராகி நிற்கும் அடிமைகளை கொண்டு காலூன்றி.
இன்று சட்டமன்றத்தில் நுழைந்திருக்கிறார்கள் .. இப்போதும் அவர்களுக்கு பயம் .. ஒன்றிய அரசின் வேளாண்மை சட்டத்திற்கெதிராக சட்டமுன்வடிவை எதிர்த்து பல்லிளிக்கிறாார்கள் ..மிகவும் ஆபத்தானவர்கள் இந்த அடிமைகள்
..
காழ்ப்புணர்வு சிறிதுமற்ற முதல்வர் கடந்த ஆட்சியில் முதல்வரின் படங்களோடு கூடிய ஸ்கூல்பேக்  அப்படியே இருக்கட்டும் என்கிறார் அதிகாலையிலேயே அமைச்சர்களை அழைத்து பணிகளை சரிசெய்கிறார் .. பத்தாண்டாய் பேசவே பயந்த முதல்வர்கள் போல் அல்லாமல் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு விளக்கமளிக்கிறார் .. கண்ணியமாக சபையை கொண்டுசெல்லும் ஆளுமை ..
எதிர்கட்சிகள் ஒன்றுக்கும் உதவாத தற்சார்பு விடயங்களை மட்டுமே குரல் உயர்த்துகிறார்களே தவிர அரசை குறைகூற வக்கற்று நிற்கிறார்கள் ..கண்ணதாசன் பாடலை சொல்லி நகர்கிறார்கள் 
எதிரிகளும் பகைவர்களும் திகைத்து நிற்கிறார்கள்.. வாக்களிக்காமல் போனவர்கள் வருந்துகிறார்கள் .. இத்தனை கம்பீரமானவரை இதுவரை ஏன் புறக்கணித்தோமென சஞ்சலபடுகிறார்கள் .. அண்டை மாநில அரசியல்வாதிகளின் புகழுரைகள்   நம் முதல்வரின் திறமைக்கு சான்று ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
பெயரல்ல 
தமிழ் சமூகம் 
தமிழ் நிலம் 
தமிழர் வாழ்வு ..
ஆம் தமிழ்நாடு..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment