நீட் தேர்விற்கெதிரான சட்டமுன்வரைவு தாக்கலாகிறது எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் மாண்பிமை முதல்வர்.. ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்து தன் எஜமானிய விசுவாசத்தை காட்டி நாங்கள் சிறந்த அடிமைகள் என சொல்லியிருக்கிறது .. பாசிச பாஜக தனக்கு கிடைத்த அடிமைகள் மிகச்சிறந்தவர்கள் சொல்லாமலேயே செய்துகாட்டுவார்கள் என மகிழ்கிறது .. எடப்பாடி மற்றமாநிலங்கள் எதிர்க்கவில்லை என சப்பைகட்டுகிறார் இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டில் தான் மருத்துவ கட்டமைப்பு மிக சிறப்பாக இருப்பதும் இங்குதான் உலகில் மிகசிறந்த மருத்துவசேவைகள் கிடைப்பதும் நீண்டநாட்களாக கண்ணை உறுத்திவந்தது .. ஜெயலலிதா உடலநலக்குறைவும் தொடர்ந்து மரணமும் ஆர்எஸ்எஸ் கைக்கூலி மாஃபா பாண்டிராஜனின் நீட்டிற்கு ஆதரவாக கையெழுத்தும் இன்றைய அவலங்களுக்கு காரணம் .. அதிமுக முதல்வருக்கே தெரியாமல் பாண்டியராஜன் கையெழுத்திட்டது அதை தொடர்ந்து மிரட்டல் ரெய்டு என அடிமைகளை கொண்டு தமிழ்நாட்டின் நலன்களை ஒவ்வொன்றாய் இழந்ததும் இந்த பாவிகளால் தான் இன்று வாய்சவடால் பேசுவதுதான் வேதனை ..
..
நாடாளுமன்றத்தில் அதிமுகவும் பாமகவும் செய்த சதி இன்று எம் பிள்ளைகள் உயிரை குடிக்கிறது ..
அதிமுக பாமக மக்களை வஞ்சித்தது .. சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றபட்ட அப்போது எதிர்கட்சியான திமுகவும் ஆதரித்து நீட் தேர்விற்கெதிரான தீர்மானம் ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதை சொல்லாமல் மறைத்த நயவஞ்சகன் இந்த எடப்பாடி பழனிசாமி .. கொஞ்சமும் குற்றஉணர்வற்று இன்று திமுகவை குறைச்சொல்ல கல்நெஞ்சம் வேண்டும் .. ரெய்டுக்கே பயந்து காலில் விழுந்தி கிடந்தவர் கொடநாடு கொலை வழக்கின் துரிதம் கண்டு நடுங்குவதும் ஒன்றிய அரசு எப்படியும் காப்பாற்றும் என நம்புவதுமே இவ்வளவு நடுங்க காரணம் .. பாவம் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அரசு எதற்கும் அஞ்சாது பின்வாங்காது பயம்கொள்ளாது
..
நீட் தேர்வு முதலில் மாநில பாடத்தின் கீழ் வரவில்லை வசமாநிலங்களில் நீட்தேர்வில் அப்பட்டமாக விதிமீறல்கள் பள்ளிக்கே வராமல் நீட்தேரேவு எழுத அனுமதிப்பது வினாதாள்கள் முன் வெளியாவது நீட் சென்டர்கள் பணம் பெற்றுக்கொண்டு வினாதாளை மாற்றுவதென அனைத்து அநியாயங்களும் நடக்கிறது தமிழகத்தில் மட்டுமே கெடுபடிகள் பணமுள்ளவர்களின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவராக முடிகிறதென உயர்நீதிமன்றமே கவலை கொள்கிற நிலை இது களையபடவேண்டாமா..
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றும் வகையில், முத்தமிழறிஞர் ஆட்சியில் நடைபெற்றதை போல் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவும் நீட் விலக்கு கோரியும் வலிமையான சட்ட முன்முடிவை முன்மொழிந்த மாண்பிமை முதல்வர் .. வரவேற்றிருக்கவேண்டாமா வெளிநடப்பு செய்து மீண்டும் துரோகம் செய்திருக்கிறார் எடப்பாடி .. துரோக வரலாறு மட்டுமே அறிந்து தனக்கு முதல்வர் பதவி தந்தவரையே யாரென கேட்ட, காரியம் ஆகவேண்டுமென்றால் யார் காலையும் பிடிக்கலாம் என கூச்சமே இல்லாமல் சொன்ன மானங்கெட்டவர் ..
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதுவும் செய்யமுடியாதென்று சமாளிக்கிறார்
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுத்தான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றம் செய்ய முடியாதது அல்ல மக்கள் மன்றமே அதிகாரம் கொண்டது அரசியல்சாசனத்திற்கெதிராகவோ இறையாண்மைக்கு எதிராகவோதான் சட்ட திருத்தம் / விலக்கு கொண்டுவர முடியாதே தவிர நீட் விலக்கு நிச்சயம் சாத்தியபடும் .. தயை கூர்ந்து தமிழ்நாட்டு நலனுக்காக குரல்கொடுங்கள் பயந்து தொடைநடுங்கி கேவலமாக நடந்துக்கொள்ளாதீர்கள் ..
நீட் தேர்விற்கெதிரான தீர்மானத்திற்கு பாஜக தவிர்த்த கட்சிகள் ஆதரவு அதிமுகவும் ஆதரவு தந்திருக்கிறது நன்று!
..
நீட் கோச்சிங் சென்டர், பணம் தீர்மானிக்கிறபோது நடுநிலையோடு தேர்வு என்பதே அயோக்கியத்தனம் .. ஏழை மாணவர்களும் மருத்துவராகலாம் என்ற கனவு மெய்பட நீட்தேர்வை ஒழித்தலே தீர்வு ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
செய்து முடிக்கும் செயல்தலைவர்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment