Wednesday, October 13, 2021

நற்சான்று 
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் திமுக வரலாறு காணாத வெற்றிக்கண்டிருக்கிறது .. உழைப்பு உண்மை நேர்மையான ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று ..
..
தளபதி.ஸ்டாலின் 
சொல் செயல் இரண்டிற்கும் பொருளாய் விளங்குகிறார் .. சொன்னதை செய்வதும் இந்த ஆட்சி நமது ஆட்சியென பிரகடனபடுத்தி நல்லாட்சியை தந்ததற்கு மக்கள் வழங்கிய நன்றி அறிவிப்பு..  இந்திய ஒன்றியமே வியப்போடு நோக்கி நிற்கிறதே அதற்கு மக்கள் சொன்ன சந்தோஷ மொழி ..
இப்படியொரு தலைவனை இத்தனை காலம் தவிர்த்ததற்கு கண்ணீரோடு நன்றி சொல்லி நானிலம் போற்றும் பரணி பாடிய நல்பாட்டு .. தேர்தல் வெற்றி என்பதை இயக்கத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதில்லை .. மக்களின் மனம் கொண்டாடுகிற தலைவனை .. இங்கே எக்காரணம் கொண்டும் பாசிசதற்கு அனுமதியில்லை என்பதை உறுதிபடுத்தி மக்கள் தங்களின் மகத்தான தலைவன் பின்னால் அணிவகுத்திருப்பதின் அடையாளமாய் விளங்குகிறது ..
..
தமிழகத்தை சாதியைச்சொல்லி பிரித்துவிடலாம் மதத்தைச் சொல்லி மக்களை வன்முறைக்கு இட்டுசெல்லலாம் என்ற நாக்பூரின் கனவை சிதைத்து இங்கே அறிவின் அடிச்சுவட்டை பின்பற்றி சமூகநீதியை காத்து நிற்போம் என செய்தி சொல்லியிருக்கிறார்கள்.. எத்தனை திட்டங்கள் குறுக்குவழியில் அதிகாரத்தை அடைவோம் .. மெல்ல மெல்ல மக்கள் மனதில் விசத்தை விதைப்போம் என்ற பெரும்சூழ்ச்சியறிந்து மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள் ..
தெளிவாக நல்லாட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் இது ..
திராவிடத்தை வீழ்த்த மொழியை மதத்தை சாதியை தூண்டி கலவரமூட்ட வந்தால் அடிவிழும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் .. அடிமைகள் இனி எழவே முடியாதவாறு புதைக்குழியில் வீழ்ந்து கிடப்பது அந்தோ பரிதாபம்..
..
மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 140 ல் 138 வென்றிருக்கிறது .. ஜனநாயகத்தில் வன்விஜயம் கூட ஆபத்தென்ற மொழி உண்டு ..அதிமுக சரியான தலைமையை தேடவேண்டும் .. எடப்பாடி பன்னீர் இருதுரோகிகள் இனம்காட்டியிருக்கிறார்கள் மக்கள் .. சரியான தலைமையில்லாமல் போனால் அது பாசிசத்தின் வளர்ச்சிக்கு துணைபோகும் எச்சரிக்கை.. கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை என ஜெயா சொன்னார் ஆனால் உண்மையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரியே இல்லாத நிலையை தன் செயல்பாட்டால் தன் தலைமை தரும் நல்லாட்சியால் செய்துகாட்டியிருக்கிறார்..
..
திமுக புறவாசல் வழியாக வெற்றிபெற்றிருப்பதாக பழனியும் பன்னீரும் கூட்டறிக்கையில் சொல்கிறார்கள் .. பாவம் பழக்கதோசம் கூவத்தூரிலும் தவழ்ந்தும் புறவாசல் வழியே ஆட்சிக்கு வந்தவர்களுக்கு நேர்மையோடு தேர்தலில் நின்று வென்று மக்கள் ஆதரவோடு ஆட்சியமைத்திருக்கும் தளபதியாரைப் பற்றி பேச அருகதையில்லை ..
திமுக ஜனநாயக பேரியக்கம்..
அதிமுகவைபோல துரோகத்தால் வளர்ந்த இயக்கமல்ல..
..
திமுக தமிழகத்தின் நம்பிக்கை..
திமுக தமிழர் நலனுக்கானது..
தமிழர்களுக்கானது.. 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment