CAA விற்கு எதிரான சட்டமன்ற தீர்மானத்தை எதிர்த்தோ ஆதரித்தோ பேசாமல் வெளிநடப்பு செய்த அதிமுகவின் செயல் அதன் இன்றைய பரிதாபநிலையை உணர்த்துகிறது .. நாடாளுமன்றத்தில் பாமக செய்த தவறை திருத்திக்கொண்டது நன்று ..
அதிமுக முழுவதுமாக தன் பலமறியாமல் எழுந்துநிற்க முடியாதவனிடம் அடங்கிநிற்கிற நிலை பாவம் .. அதிமுகவின் தோற்றமும் மறைவும் என எழுதவேண்டிவருமோ என கவலைக்கொள்ள வேண்டியிருக்கிறது .. மெல்ல மெல்ல விழுங்கபடுவது அறியாமல் அடிமைகள் பயத்தில் நடுங்கி நிற்பது தமிழகத்திற்கு ஏற்படும் அவமானம் .. ஆளுமையற்ற தலைமையோ/ ஒருங்கிணைப்போ எதையும் எதிர்க்கவோ சாதிக்கவோ இயலாதென மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ..
..
நயினார் சொறிந்தால் போதும் என கிண்டல் செய்யவில்லை அவை முன்னவர் உண்மையை சொல்கிறார் .. சட்டமன்றத்தின் அங்கீீீகரீக்கபடாத தலைவராக நயினார் செயல்படுவதும் அதை அமோதிப்பதும் இவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு செய்கிற துரோகம் .. துரோகத்தில் தோன்றிய கட்சி இன்று ஒருவருக்கொருவர் காலவாரி கடைசியில் பொம்மலாட்டத்தில் கயிறு மற்றொருவன் கையில்
எப்படி ஆடவேண்டுமென டெல்லி தீர்மானிக்கிறது .. ஆதரிக்க தைரியமில்லை ஓடிவிட்டார்கள் என முதல்வர் சொல்வது முற்றிலும் உண்மை ..
..
வெளிநடப்பு செய்யவும் சரியான காரணம் வேண்டும்.. சிறுபான்மை சமூகத்திற்கெதிராக அதிலும் முஸ்லிம்களுக்கெதிராக இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டதும் அப்போது அதிமுகவும் பாமகவும் எதிர்த்திருந்தால் சட்டம் நிறைவேறியிருக்காது .. அன்று தங்கள் மீது வழக்குகள் பாயும் ஆட்சி கழுவும் என அஞ்சினார் அடிமைகள்.. வெளிப்படையாகவே எச்.ராசா மிரட்டினார் .. இப்போது நெஞ்சுரத்தோடு பெரியாரின் வாரிசு #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
தேர்தல் நேரத்து வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார் ..
“குடியுரிமை திருத்தச் சட்டம் மத ரீதியாக பாகுபாடு காட்டுகிறது; அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது CAA
..
அடுக்கடுக்காக சமூகநீதியை நிலைநாட்டி எல்லாதரப்பு மக்களுக்கு நலன்பயக்கும் அரசாய், பாதிக்கபட்டவர்களுக்கு துணைநிற்கும் செயலால் உயர்ந்துநிற்கிறார்
அவரது மகுடத்தில் மற்றுமொரு வைரம் ..
அஞ்சாமையும் நேர்மையும் நெஞ்சுரமும் கொண்ட முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகளும் முத்தங்களும்
நன்றி முதல்வரே..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment