ஆளுநர் மாற்றம் பாண்டேக்கள் குதூகலம் .. நடைமுறையில் வந்துபோகும் மாற்றங்களைக் கண்டு கொள்கையாளர்கள் மிரளுவதில்லை .. ஒரு முதியவர் போய் மற்றொருவர் அவ்வளவுதான்.. துணைநிலை ஆளுநர் பதவியல்ல இங்கே தமிழ்நாடு யூனியன் பிரதேசமும் அல்ல.. ஆட்டம் ஆரம்பம் என சிலர் தங்களுக்குள் சிரித்துகொள்கிறார்கள் திராவிடத்தின் நிஜஆட்டத்தை கண்டால் மிரண்டுபோவீர்கள்.
ஆம் அவர்களுக்கே தெரியும்.. மிசாவைகாட்டி மிரட்டினால் தமிழ்நாட்டுக்கு வர விசா வாங்கவேண்டிவரும் என்றவர்கள்
ஆட நினைத்தால் பிராமணர்கள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாடு என அவர்களே சொல்ல நேரிடுமென அறிவார்கள் இப்போதே திமுக ஆட்சிக்கு வந்தாலே பிராமணாள் எதிர்ப்பு வலுப்பதாக அவர்களே கலவரபடுவதும் தேவையில்லாத அச்சபடுவதும் அறிந்ததுதான் அதனால் தான் மனசாந்திக்காக ஆட்டம் ஆரம்பம் என திருப்தி அடைந்துக்கொள்கிறார்கள் .. எதிர்கட்சியாக இருந்த போதே ஆளுநரை ஆய்விற்கு சென்றதை அடக்கியவர்கள் பிரதமரே சுவரை உடைத்து வந்த சுவடே தெரியமால் ஓடியதும் வரலாறு ..
..
ஆட்டுக்கு தாடி எதற்கென்பதே எமது கொள்கை ஆனாலும் ஆளுநர் பதவி இருக்கிறவரை அவருக்கான மரியாதை உண்டு அவர் ரப்பர்ஸ்டாம்பை போல என்பதை அரசியலமைப்பு நமக்கு உறுதியளித்திருக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்க அரசிற்கே அதிகாரம்
ஏற்கனவே திமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பாத்திமாபீவி ராஜீவ் கொலைவழக்கில் நளினிக்கு தூக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள்தண்டனையாக மாற்றியதை ஏற்காதபோது உயர்நீதிமன்றம் கேபினெட் முடிவை ஏற்பதுமட்டுமே ஆளுநரின் அதிகாரவரம்பு என சுட்டிகாட்டி கடைசியில் கையெழுத்திட்டது அறிவோம் ..
மக்களின் நலனுக்காக செயல்படும் அரசை மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசை புறவழியில் கலைக்க முடியாதென்ற பொம்மை வழக்கின் தீர்ப்பையும் மாநில ஆளுநர் குறிப்பிட்ட வரம்பிற்குள் நின்று செயல்பட மட்டுமே முடியும் என்றும், அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது ..
..
வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் அவரை கிழிக்க தொடங்கிவிட்டார்கள் .. நாகலாந்தில்
இரண்டு அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து, அதற்காக இருவரை மிரட்டி, அந்த இருவர் கொடுத்த புகாரின் பேரில்
கடந்த மாதம் வரை விசாரணை கமிட்டி சம்மன் அனுப்பியும், நேர்நிற்காதவர்.. அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள் அவ்வளவுதான் இங்கே தமிழ்நாட்டில் எதையும் பிரித்து மேய்ந்துவிடுவார்கள் ..
..
தமிழ்நாடு "தனி" மாநிலம் இங்கே மிரட்டல் எடுபடாது பகுத்தறிவு பேசும் .. அதிலும் இங்கே ஆள்கிறவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
எதற்கும் அஞ்சாத படைத்தலைவன்
நேர்மை நன்னெறி அரசியல் இந்தியாவிற்கே எடுத்துகாட்டான செயல்பாடுகள் இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்கள் கண்டு வியந்து "இங்கிவனை யாம் பெறாமல் போனோமே" என ஏக்கம் கொள்கிறார்கள் .. ஒன்றிய அரசிற்கே வழிகாட்டி மரமாய் உயர்ந்து நிற்கிறார் வெளிப்படையான அரசு மதவெறியர்கள் சாதிபித்தர்கள் கலங்குகிறார்கள் இங்கே மதவெறியை தூண்டினாலோ பிறமதத்தை இழிவுபடுத்தினாலோ கட்டம் கட்டபடுவார்கள் என அறிந்து அடக்கிவாசிக்கிறார்கள்
உண்மையில் நல்லதொரு மக்களாட்சி நடைபெறுகிறது இடையூறு செய்ய நினைத்தால் இங்கே வேறுமாதிரியாகும் என்பதை நாக்பூர் அறியும் ..
..
தமிழ்நாடு #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் நாடு ..
நல்லதை நினை
நாட்டுக்குமக்கள் சிறப்புற
நல்லதாய் செயல்படு ..
இதுவே திமுக தலைவரின் மந்திரம் சூழ்ச்சிகளை தந்திரத்தை வெல்லும் மௌனபுரட்சியாளர்
எங்கள் முதல்வர்
அறிவோம் .. அறிந்துகொள்ளுங்கள்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment