Sunday, November 7, 2021

"முறை செய்து காக்கும் இறை"
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.. என்றான் வள்ளுவன் ..
முதல்வர் தானே களத்திற்கு வருகிறார் இரண்டு அமைச்சர்கள் தலைமை செயலர்  காவல்துறைத்தலைவர் மாநகராட்சி ஆணையர் என பாதிக்கபட்ட இடங்களை பார்வையிடுகிறார்..
..
15 IAS அதிகாரிகள் களபணி,கண்காணிப்பு என போர்காலம் என கருதி பணிசெய்ய உத்தரவிடுகிறார் .. பேரிடர் காலமென கருதி கரம்கோர்த்து செயல்பட உடன்பிறப்புகளுக்கு சொல்கிறார் .. மூன்றுநாட்கள் வெளியூரிலிருந்து யாரும் சென்னைக்கு வராதீர்கள் என கேட்டுகொள்கிறார் ..
..
எழுபதை நெருங்கும் வயது .. இளைஞரைப்போல மழைவெள்ளத்தை நேரில் கண்டு களத்தில் தான் உண்மை தெரியும் அதிகாரிகளை பணிசெய்ய சொல்லிவிட்டு வீட்டிலேயே முடங்கவில்லை .. வான்வழியே மக்களை காணவில்லை .. கரம் பற்றி நானிருக்கிறேன் என நம்பிக்கையூட்டுகிறார்.. முதல்வரே களத்தில் என்றவுடன் அதிகாரிகள் செயல்கள் வேகமெடுக்கும் ..
தமிழக அரசின் அதிகாரிகளுக்கும் தமது அமைச்சர் களுக்கும்  கோட்டையிலிருந்து உத்தரவிடவில்லை.. தாமே முன்னின்று களப்பணியாற்றி விரைவுபடுத்துவதெல்லாம் 
தலைசிறந்த தலைமைப்பண்பு ..
..
விளிம்புநிலை மக்களின் குரலில் நம்பிக்கையை வரவழைப்பது .. அப்பா நிலம் கொடுத்தார் மகன் பட்டா கொடுத்தார் என எளியமக்களின் மகிழ்ச்சி மன்னவனுக்கு மக்கள் தரும் நற்சான்று..  ஒரு நல்ல தலைவன் கிடைத்திருக்கிறார் .. கொண்டாடவிட்டாலும் தூற்றாதீர்கள் .. "வருணபகவான் கோபம் " என நீங்கள் நம்பும் கடவுளை கேவலபடுத்தாதீர்.  இயற்கையின் முன் யாரும் தாழ்ந்தே போகவேண்டும் கோபம் சீற்றம் சிங்காரம் என இயற்கை நம்மை மகிழ்விக்கும் காக்கும் அழிக்கும் என்பதை உணருங்கள் .. இயற்கையை மீறிய நம் செயல்கள் அத்துமீறல்கள் நீர்தேங்க வழியிடமில்லாமல் வழிந்தோட நீர்தடமில்லாமல்  ஆக்ரமித்தது நாமே அதை சரிசெய்வோம் .. கடந்த ஆட்சியில் ₹900 கோடி ஒதுக்கி நீர் வழிதடங்களை தூர்வாரவும் கால்வாய்களை சுத்தபடுத்தவும்,செய்ததாய் கணக்கு காட்டிய கயவர்களை நீதிமுன் நிறுத்தவேண்டும் ..
..
இடரும் துயரும் சூழும் நேரத்தில் நம்மோடு இருக்கிறார் நமக்கான தலைவர்..
நல்ல நம்பிக்கை தந்திருக்கிறார் .. கடந்து போவோம் மீள்வோம் ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இருக்க பயமேன்..
..
#தாயுமானவர்_ஸ்டாலின்..
..
ஆலஞ்சியார்


No comments:

Post a Comment