பாஜக..
ஜனநாயகபாதையில் நேர்மையோடு பயணிக்கும் கட்சி அல்ல.. பாஜக என்பதே பார்பனீயர் நலன் சார்ந்துமட்டுமே இயங்கும் ஆனால் பொதுதளத்தில் தனித்து இயங்க முடியாதென்பதால் மதம் எனும் கூட்டில் மற்றவர்களையும் அடைத்து தேவைபடும் போது காவு கொடுக்கும் .. பொய், பித்தலாட்டம், பாலியன் வன்முறை, பெண்ணடிமைத்தனம், சமூக அநீதி என பயணிக்கும் இயக்கத்தில் விளிம்புநிலை மக்களும் ஒடுக்கபட்ட மக்களும் மூளைசலவை செய்யபடுவார்கள் இலவச கல்வி வேலைவாய்ப்பு என தந்திரத்தோடு காய்நகர்த்தி தேவைபடும் போது அவர்களை கொண்டே கண்ணை குத்தி மகிழ்வார்கள்..
..
இரண்டுநாட்களாக தமிழக பாஜக பேசுபொருளாகியிருக்கிறது .. கே.டி. ராகவன் என்ற நபரின் அந்தரங்க லீலைகளை படமாக்கி அதை வைத்து பேர்தேட நினைத்த மதன் .. யாருமிங்கே ஒழுக்கமில்லை.. தனிநபரின் விடயங்களை விமர்சிப்பதோ சுகம்காண்பதோ தேவையில்லாதது ..ராகவனின் அரசியல் நமக்கு ஏற்புடையதல்ல கீழ்தரமானது மதவெறியின் கொடுமுடியில் நின்றாடும் நர்த்தனம் அவருடைய அரசியல் .. விமர்சனம் நிறைய உண்டு ..
பாஜகவில் ஒழுக்ககேடானவர்கள் நிறைய உண்டு அது பாஜகவின் ஆரம்ப தகுதியாக கூட இருக்கலாம்.. அது காரியமல்ல
ஆனால் அதை வைத்து இவர்கள் நடத்தும் நாடகம் சகிக்கவில்லை
பாஜக கொள்கைக்கெதிராக இருந்ததால் மதனும் வெண்பாவும் கட்சியிலிருந்து நீக்கபடுவதாக அறிவிக்கிறார்கள் .. வெண்பா அதிமுக உறுப்பினராம்..😃
மதன் செயல் அயோக்கியதனமானதென்பதில் நமக்கு கருத்துமுரண் இல்லை ..
ஆனால் பாஜக கொள்கைப்பற்றி பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது ..
..
பொதுசமூகம். ? ராகவனுக்கும் மனைவி குழந்தைகள் உண்டே நினைத்து பார்த்தார்களா என கேள்வி எழுப்புகிறார்கள் ..நன்று இதே அளவுகோலை மற்றவர்களுக்கு பயன்படுத்தியதுண்டு வயதான, சக்கரநாற்காலியில் வலம்வந்த தலைவனை நடிகையோடு இணைத்து கட்டுரை தீட்டினார்களே அப்போது இந்த சமூகம் எங்கே போனது.. சுயமரியாதைகாரர்களை இணைத்து பேசி புகளாகிதம் அடைந்தார்களே அப்போதெல்லாம் அவர்களுக்கு குடும்பம் உண்டென்பதை மறந்து போனார்களா..?
ராகவனுக்காக யூடியூப் சேனலையே முடக்க முடிகிறதே தொடர்ந்து அவதூறை பரப்பும்
மாரிதாஸின் சேனல் முடக்கபட்டதா
பார்பனருக்காக வேகமாக செயல்படும் உள்துறை மற்றவர்களின் விடயங்களில் மவுனம் காப்பதேன் ..
..
பாஜக தலைவர்கள் மீது அந்த கட்சியின் மகளிர் அணியினரே பாலியல் புகார் அளித்திருக்கிறார்கள் கலிவரதன் மீதும் பாஜக மாணவரணி தலைவர் மீதும் புகார் உண்டு ..தொடர்ந்து பொதுவாழ்விற்கு வரும் பெண்கள் பாலியல் தொந்தரவு நடந்துக்கொண்டுதானிருக்கிறது அதிகாரத்தில் இருந்தால் எதையும் செய்யலாம் என நமக்கு பொள்ளாச்சி அதிர்ச்சியளித்தது
சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க ஜோதிமணி எம்.பி புகாரளித்திருக்கிறார் விரைந்து விசாரணை செய்யபடவேண்டும்
..
பொதுவாழ்வில் கழிவுகளையும் கழிசடைகளையும் கொண்ட கட்சியாக பாஜக இருக்கிறது
சட்டமன்றத்திலேயே ஆபாசபடம் பார்த்த வரலாறு கோவில் கருவறையில் களியாட்டம் என பாஜக என்றாலே பாலியல் கூடாரம் என பேச்சு உண்டு.. மதத்தை மட்டுமே முன்னெடுக்கும் மடையர்களும் புராண இதிகாச புரட்டுகளை நம்புகிறவர்களும் வேறெப்படி இருப்பார்கள் ..
ராகவன் வகையறாக்கள் கடவுள் முன்பு சுயம் காண்பவர்கள் தான் அவர்களுக்கு தெரியும் கடவுள் என்று எதுவுமில்லையென்று .. காமகளிட்டாத்தை கடவுள் துணைக் கொண்டே நடத்துவார்கள் .. ஜெகத் குரு எல்லாம் காமலீலைகளை நடத்தியதும், அன்றைய அனுராதாக்கள் புலம்பியும் எதுவும் நடக்கவில்லை .. பார்பனரென்றால் எல்லாம் தலைகீழாகும் .. நீதி கூட தடுமாறும்..
பார்ப்போம் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment