ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு 9 கேள்விகளை வன்னியர் சமூக தலைவராக தன்னை கருதிகொண்டு அன்புமணி எழுப்புகிறார் .. நாட்காட்டியில் குறியீடு இருக்கிறது குரு பெயரை பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார்.. இயக்குனர் யதேச்சையாக நடந்ததென கூறி நாட்காட்டி குறியீட்டை மாற்றிவிட்டார் .. குருமூர்த்தி பெயர் எப்படி வரலாம் என யாரோ கேட்கவேண்டியதை கேட்பதாக தோன்றவில்லையா .. அல்லது யாரோ சொல்லி செய்கிறாரா..
..
இவர் சமூகநீதி பற்றியெல்லாம் பாடமெடுத்தாலும் சாதிவெறி தவிர வேறொன்றும் இல்லை .. சாதிவெறியை தூண்டிவிடுவதும் சூர்யா படம் தியேட்டரில் வந்தால் நடப்பதே வேறு என்று மிரட்டுவதும் முன்பே கண்டதுதான் .. இம்முறையும் அதே குரல் ஒலிக்கிறது ..
அந்த படத்தில் பேசபட்ட விடயம் குறித்து இந்த சமூகம் எப்படி நடந்துகொண்டது குறைந்தபட்ச மனிதம் கூட இல்லாத சமூகமாய் மாறிபோனதேன் வர்ணகோட்பாட்டில் நம்மை அடைத்து கீழ்சாதியென பேசவைப்பது யார் என கோபம் வராமல் சாதியை பிடித்துக்கொண்டு தொங்கினால் கீழே விழ நேரிடும் இம்முறை பலமாக அடிவிழும்..
..
அதே படத்தில் பஞ்சாயத்து தலைவர் ஓட்டுக்காக கண்ட கண்ட சாதிகாரன் காலில் விழவேண்டியிருக்கு இதுலே இவனுக காலில வேற விழணுமா என்ற கேட்பதை ஆண்ட பரம்பரையென பேசி திரியும் எவனும் கோவபடவோ கேட்கவோ இல்லை.. அதெல்லாம் கண்ணில் படாது .. கதை, கரு, சொல்லவந்த விடயம், கதையின் திரை போக்கு காட்சிபடுத்தல் என எல்லா நிலையிலும் மிக குறைவான குறைகளோடு ஒரு திரைப்படம் .. இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பாராட்டுபெற்ற படங்களின் படவரிசையில் இடம்பெறுவதை சகிக்க முடியாத சக்திகள் கதறுகின்றன
..
பாண்டே ஐயர் பாத்திரம் தேவையில்லாமல் திணிக்கபட்டிருப்பதாக பதறுவதும் நீங்கள் சொல்றதுனாலேதான் தப்பா போறோனோ என சந்தேகம் வருது என்ற வசனம் பெரியாரை ஞாபகபடுத்தியிருக்கும்.. பெரியார் வெளியூர் சென்றிருந்தபோது விடுதலை செய்தி வெளியிடும் பொறுப்பை வீரமணியை பார்த்துகொள்ள சொன்னபோது அதெல்லாம் சரிய்யா தலையங்கம் எப்படி எழுதறது என்றார் பெரியார் தி இந்து பத்திரிக்கை என்ன செய்தி வருதுன்னு பாரு அதற்கு எதிரா எழுது என்றார் .. பாப்பான் எது செய்றானோ அதற்கு எதிராகவே செய் என்று பொருள்
..
ஜெய் பீம் ஏற்படுத்திய தாக்கத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை.. ருத்ரதாண்டவத்தில் கஞ்சா விற்கும் சிறுவன் அம்பேத்கர் டிசர்ட் போட்டிருந்தானே அப்போது யாரும் எங்கள் சாதியை கேவலபடுத்தியதாக கூச்சல் போடவில்லை .. திரைப்படைப்பை கலைநோக்கோடும் சமூக அக்கறையோடும் சொல்லபட்ட கருத்தை மட்டுமே அலசி ஆய்ந்து அது எந்தளவு மக்கள் மனதில் தாக்கத்தை வலியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணரவேண்டும் ..
எல்லா சாதியிலும் மதத்திலும் அயோக்கியர்கள் திருடர்கள் கேடுகெட்டவர்கள் இருக்கிறார்கள் .. சமுகத்தின் இளைஞர்கள் அறம் போதித்து நல்வழியில் செல்ல அறிவுறுத்தாமல் திரையரங்குகளில் படம் வந்தால் கலவரம் செய்வோம் என மிரட்டுவதும் குடிசைகளை கொளுத்தியும் பஸ் கண்ணாடியை உடைத்தும் ரயில் மறியல் செய்தும் வழிகெடுக்கும் நீங்கள் அறிவுரை சொல்ல அருகதையற்றவர்
..
சாதி அரசியலை தவிர வேறெதும் அப்பனுக்கும் மகனுக்கும் தெரியாதென்பது தமிழக மக்கள் அறிவார்கள்.. வன்னிய பெருமக்களே புறக்கணிக்க தொடங்கிவிட்டார்கள் இனியேனும் சமதர்ம சமூகநீதி பேசி பொதுவாழ்வில் உழைக்க வாருங்கள் ..நாடாளுமன்றத்தில் கூட இத்தனை கேள்விகள் கேட்டிருக்கமாட்டீர் ..
மதவெறியை தூண்டி இளைஞர்களை வழிகேடர்களாக மாற்றும் போக்கை இனியேனும் கைவிடுங்கள்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment