கொள்கைக் குன்று சமசரமற்ற சமூகபோராளி தன்னலமற்ற சேவை பெரியாரிடம் தந்த வாக்குறுதிக்காக வாழ்நாள் முழுவதும் புத்தங்களை சுமந்து நடமாடும் நூலகமாய் குவைத்தில் பெரும்பணியாற்றிய பேரன்பாளர்
மானமிகு ச.செல்லபெருமாள் அய்யா
Chella Perumal Raju
அவர்கள் மறைந்தார்
..
ஒவ்வொரு மனிதனும் செத்துபோவது உண்மைதான்...
என்றாலும்
அவரோட முயற்சிகளும்,
அவர் தொடங்கிய காரியங்களும்,
செத்துபோவதில்லை என்றார்
பெரியார் ஆம் அவர் தொடங்கிவைத்த சமூகப்பணியை இன்று பல அமைப்புகள் குவைத்தில் செய்துவருகின்றன .. பல்வேறு சமூகதளத்தில் பயணித்தாலும் அனைவரும் பெரியவர் அய்யா அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தனர்.. அவரின் வழிதோன்றலாய் மிக சிறப்பாக செயல்படுவதும் அவருக்கு அணிசேர்க்கும்..
..
அவரோடான சந்திப்புகளும் நிகழ்வுகளும் என் வாழ்வில் மறக்கமுடியாத பக்கங்களாய் திகழ்கின்றன .. தோழர் ஆலஞ்சி என பெயரிட்டு அழைத்து மக்கள் முன் நிறுத்தியவர் என் எழுத்தை வெகுவாக ரசிக்கிற, சிலநேரம் விவாதம் செய்கிற சரியெனபட்டதை முகத்திற்குநேரே சொல்லும் நேர்மையாளர் நல்ல விமர்சகர்.. அய்யா அவர்கள் நல்விதைகளை தேடி தேடி விதைத்தவர் .. நல்ல களம் அமைத்து தருவார் இன்றைக்கு நல்ல பேச்சாளர்கள் நல்ல கருத்தாளர்கள் என குவைத் மண்ணில் மின்னுகிறவர்கள் எல்லோருமே அய்யாவின் பட்டறையில் பயின்றவர்கள் .. பெண்களை முன்னிலை படுத்த வேண்டுமென்பதில் முனைப்போடு செயல்பட்டவர் .. கவிதாயினிகள் நாவலாசிரியர்கள் என இன்று புகழபடுகிறவர்கள் அய்யாவின் பெரியார்நூலகத்தின் வார்ப்புகள்
கொண்ட கொள்கையின் உறுதியோடும் சமூகநலன் சார்ந்து வாழ்ந்த கொள்கை போராளி செல்லபெருமாள் அய்யா அவர்கள்
..
குவைத் தமிழ் சமூகம் இவரை மறந்து செயல்படமுடியாதவாறு இவரின் பங்களிப்பும் உழைப்பும் இருந்தது ..சோர்வில்லாத பயணம்
ஐம்பதாண்டுகளுக்கு மேலாக "#பெரியார்நூலகம்" என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு நிகழ்வுகளை நடத்தி கொள்கை பேசியவர் சிறிய கூட்டமே பெரிய அரங்கோ எங்கெனினும் தான் சொல்ல வந்ததை துணிவோடு சொல்லி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அய்யாவை குவைத் தமிழ் சமூகம் கண்ணீரோடு அஞ்சலி செலுத்துகிறது ..
..
நெஞ்சமெல்ல நிறைந்த அய்யாவிற்கு வீரவணக்கம்
போய்வாருங்கள் அய்யா
நீங்கள் விதைத்த விதைகள்
விருட்சமாய் வளரும் ..
குவைத் தமிழ் சமூகத்திற்கு
நிழல் தந்த #தரு நீங்கள்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment