ப்ராமணனை கண்ணீர் விட வைத்தவர்கள் அழிந்து போவார்கள் .. பார்பனர் ஒருவர் படபடக்கிறார்..
சட்டசபையில் மக்கள் பிரச்சனையை பேசினால் நிதியமைச்சர் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்..
கொடாநாடு வழக்கு முடியும் தருவாயில் மீண்டும் விசாரணை ஏன் என பழநிசாமி பதறுகிறார்..
..
#ப்ராமணன் யார் ..
இந்துமதம் ப்ராமணனரைப்பற்றி என்ன சொல்கிறது அதை சரியாக கடைப்பிடிக்கிறார்களா..
ஏழ்மைவாழ்வு .. கையேந்தி வஜீபனம் கடல்தாண்ட கூடாது பெண்களை வேலைக்கு அனுப்பகூடாது விபச்சாரம் பெருகும் .தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கெட்டுபோய்விட்டது .. பெண்கள் ஆசைநாயகிகள் இப்படி நிறைய சொல்கிறது.. ப்ராமண வாழ்வை இங்கு எவனும் வாழவில்லை ..
இந்து மதம் என்பதே ஆங்கிலேயர் வருவிற்கு முன்பு பிராமண மதமாகதான் கருதபட்டது .. எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள் .. காவிரிக்கரையில் விவசாயம் செய்தார்கள் அவர்களிடமிருந்து போனதும் தண்ணீர் பிரச்சனை வந்தது .. கல்வியில் தனி ராஜ்ஜியம் கொண்டிருந்தார்கள் படிப்பு உனக்கு வராது என்றார்கள் முடியும் என சாதித்த போது அதற்கும் வேட்டு (நீட்வடிவில்) கொண்டுவந்தார்கள் .. நீதிபரிபாலன சபை ஆதிக்கத்தை தகர்த்த போது மிரட்டபடுகிறார்கள்
நாமெல்லாம் ஒரே மதம் என சொன்னவன் நானும் அர்ச்சகராகிறேன் என்றவுடன் கடவுளை வீட்டுக்கு கொண்டுபோய்விடுங்கள் என தன்சார்ந்தோர்க்கு அறிவுரை சொல்கிறான் .. அப்படியெனில் ப்ராமணனின் கடவுள் வேறு .. இடைசாதி கடைசாதியினரின் கடவுள் வேறு .. கலவரம் பண்ண நான் வேண்டும் ..
கும்பிட்டு மனதுறுகி பாட நான் கூடாதா ..
கடவுள் பொதுவானவனெனில்
எனக்கு உரிமையில்லையா .. ஆகமவிதிகள் என்பதே தங்கள் கைவிட்டு போக கூடாதென்பதற்காக உருவாக்கபட்டதே தவிர வேறொன்றுமில்லை .. ப்ராமண சாபம் பலிக்காது
..
சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம் இந்திய ஒன்றியத்திற்கு முன்னோடியாய் திகழ்ந்தது இங்கு அறிவுசார் கூட்டம் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதியாய் பங்களித்து ஆளும் அரசை கதிகலங்க வைக்கும் .. திறமையானவர்கள் அறிவாளிகள்
என தலைசிறந்த ஆளுமைகளை கண்ட தமிழ்நாடு சட்டமன்றம் அறிவுசூன்யங்களை இப்போது காண்கிறது .. ராமாயணம் எழுதியவரை தெரியாதவன் அண்ணாவிற்கு பிறகு அதிகம் புத்தகங்கள் படித்தவன் என்றபோதே கிழித்திருக்கவேண்டும் ஞானசூன்யங்களால் தமிழ்நாடு மதிப்பிழந்து போனது தான் மிச்சம்.
பொருளாதாரம் பற்றிதான் நிதியமைச்சர் பேசுவார் அவர் பேசுவதும் மக்களுக்காக தான் மக்கள் பிரச்சனையை மைய்யபடுத்திதான் .. தடுமாறிவிழுந்தவன் யானை மாலைபோட்டதால் மன்னன் ஆனவன், அடிப்படை தகுதியற்ற, மக்களை கேலிகூத்தாக நினைத்து
கொள்ளையடித்து .. வடநாட்டவருக்கு கைகட்டி நின்று தன்மானமிழந்த எடப்பாடி பழநிசாமி அவர்களுக்கு பேச யோக்கியதை இல்லை விமர்சனம் செய்ய, எதிர்க்கட்சி தலைவராக இருக்க கொஞ்சமும் தகுதியற்றவர் எடப்பாடி பழநிசாமி
..
கொடாநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை கண்டு ஏன் அஞ்சுகிறது இந்த அடிமைகூட்டம் ..
காவலாளி கொலைசெய்யபடுகிறார் சிசிடிவி கேமரா செயலிழக்கிறது .. ஓட்டுனரை கேரளாவில் விபத்துள்ளாகிறார் மர்ம தொடரை போல கதை கேட்டுக்கொண்டிருந்தோம் .. ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து விசாரணை கமிஷன் முன் நேர்நிற்காத பன்னீர் இப்போது பதறுகிறார் எங்கே ஜெயலலிதா வழக்கு துரிதம் பிடிக்கும் என அஞ்சுவது அவரின் பேச்சில் தெரிகிறது .. மடியில் கனமில்லையெனில் வழியில் ஏன் பயம் .. இவர்கள் தான் விசாரணை விரைந்து நடத்த வேண்டுமென அரசிற்கு கோரிக்கை வைத்திருக்க வேண்டும் .. தவறு செய்தவர்கள் தண்டிக்கபடுவார்களென அரசின் தலைவர் சொன்னதும் இரண்டுநாள் சபைக்கே வரமாட்டார்களாம் .. ஓடியொளிவதால் பலனில்லை
சட்டம் கடமையை செய்யும்..
..
சட்டபடி குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்கிறார் தமிழ்நாட்டரசின் முதல்வர் ..
நீங்கள் ஏன் பயபடுகிறீர் பழநி அவர்களே..
எப்பன் குதிருக்குள் இல்லை ..
இன்னும் பலது இருக்கு..
எங்கும் ஓட முடியாது சுடலைசாமி கணக்கு தீர்க்கும்..
எல்லாம் நியாயபடி நடக்கும் .. இப்போது யாரும் துணைக்கு வர மாட்டார்கள் கூட்டணி தலைவர்கள் மெல்ல நகர்வார்கள் ஒன்றியம் கைகழுவும் இப்படிதான் இனி..
ஜெயலலிதா சாவின் மர்மமும் வெளிவரும் போது ஒட்டுமொத்த அடிமைகள் சிறையில் இருப்பார்கள்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment