போய்விட்டீரா..
இறுதி மூச்சுவரை கொள்கைமாறாமல் தன் வாழ்வில் சுயமரியாதைகாரனாய் உறுதியோடு இருந்தீர் .. மண்ணறை கிடத்தி மண்மூடும் போது ஓங்கி ஒலித்த சுயமரியாதை "ஒலி" நீர் வாழ்ந்த வாழ்வில் மகிமையை உணர்த்தியது வீரவணக்கம்..
பல்வேறு தமிழ் அமைப்புகள் உன் இறுதிபயணத்தில் கண்களில் நீர்வழிய கலங்கி நின்றது நீர் வாழ்ந்த வாழ்வை சொல்லியது
கொஞ்சமும் கலங்காமல் சமசரமற்ற பாதையில் பயணித்தீர்
நல்ல கொள்கையாளர் தேடி அரங்கேற்றம் செய்தீர்.. நல்ல விதைகளை விதைத்திருக்கிறீர்..
ஒவ்வொன்றும் "தரு" ஆகும்..
..
குவைத் பெரியாரென பெருமக்களால் போற்றபட்ட
பெருமைக்குரிய ஆசான்
ச.செல்லபெருமாள்
விடைபெற்றார்..
ஞானதந்தையே போய்வாரும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment