ஊழலற்ற இந்தியாவை நோக்கி எமது அரசு செயல்படுவதாக பிரதமர் பெருமிதம் கொள்கிறார் .. மேகாலயா ஆளுநர் தனக்கு இரண்டு கோப்புகள் வந்ததாகவும் இரண்டும் முறைகேடானதென்று தமது செயலாளர்கள் சொன்னதாகவும்
அதில் ஒன்று பாஜக ஆர்எஸ்எஸ் தொடர்புடையவரது மற்றொன்று அம்பானியுடையது .. அம்பானிக்கு கையெழுத்திட்டால் ₹150 கோடி லஞ்சம் தருவதாக சொன்னார்கள் இதை பிரதமரிடம் சொல்லிவிட்டேன்
வரும் போது 5 குர்தாவோடு வந்தவன் அதோடு வெளியேற எனக்கு தயக்கமில்லை என்கிறார் ஆளுநர் சத்ய பால் மாலிக்..
..
P.M.Care என்னானது .. எவ்வளவு தொகை வந்தது எங்கே சென்றது அதில் எவ்வளவு செலவு செய்தார்கள் கேட்டால் அதற்கு பதில் இல்லை .. இவர்கள் நேர்மையானவர்களாம்.. 2ஜி வழக்கின் கற்பனைக்கொப்பாத பெருந்தொகையை சொல்லி வீண்பழி சுமத்தி திமுகவை இல்லாதாக்க நினைத்து கடைசியில் கரிபூசியக்கொண்டார்கள் .. சிஏஜி அறிக்கையை காரணம் காட்டியவர்கள் தாங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்தபிறகு நாடாளுமன்றத்திலேயே சிஏஜி அறிக்கையை காரணம்காட்டி குற்றம் சுமத்த கூடாதென நிதியமைச்சர் அருண்ஜெட்லி சொன்னார்.. இவர்கள் தான் ஊழலை ஒழிக்கவந்தவர்களாம்..
உள்துறை அமைச்சரின் மகன் ஒரே ஆண்டில் 200% விழுக்காடு சொத்து மதிப்பு காட்டுகிறார் .. நம்ம A1 ஜெயலலிதா ஒரே மாதத்தில் வெங்காயம் ஏற்றுமதியில் ₹கோடிகள் லாபம் காட்டினாரே அதைப்போல.. வெளிப்படையாகவே அதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்து தெரிந்தும் தலைமை செயலகத்திலேயே ரெய்டு நடத்தியும் அவர்களை ஆட்சியில் வைத்திருந்ததும் கொலை கொள்ளை வழக்குகள் என குற்றசாட்டு பலமாக வந்தும் ஆதரவுக்காக காப்பாற்றியவர்கள் ஊழலைப்பற்றி பேசுவது தான் கொடுமை..
..
திமுக அமைச்சர் மீது குற்றசாட்டு
மாண்பிமை செந்தில் பாலாஜி ஆதாரத்தை தரவேண்டும் என கெடுவிதித்தும் Excel சீட்டை தந்து இதுதான் ஆதாரம் என்கிறார் அண்ணாமலை இவர் உண்மையிலேயே IPS படித்தாரா..
போலீஸ் அதிகாரியாக எப்படி செயல்பட்டிருப்பார் என சந்தேகம் வருகிறது இவர் காவல்துறையில் பணிபுரிந்த காலங்களில் நடந்த வழக்குகள் மறுவிசாரணைக்கு உட்படுத்தவேண்டும் .. அரைகுறைகளும் அரைவேக்காடுகளும் கட்சியின் பொறுப்பிற்கு கொண்டுவருகிறார்கள் .. குற்றம் சுமத்தியவர் தெளிவான ஆதாரங்களோடு பேசவேண்டும் ..
தமிழக முதல்வர் மிக தெளிவாக சொல்லிவிட்டார் இந்த அரசு நேர்மையாக செயல்படும் .. வீண்விரயம் தவிர்க்கபடும் (முன்னாள் முதல்வர்கள் படத்தை நீக்கவேண்டாம் வீண்செலவு தேவையில்லை என்றவர்) என சிறப்பாக செயல்படுகிறார்கள் .. பாலியல் தொல்லைகளும் பாலர்கள் வன்கொடுமைகளும் சர்வசாதாரணமாக நடக்கும் கட்சியில் இருந்துக்கொண்டு .. குற்றபின்னணி கொண்டவர்கள் ஞானஸ்தானம் செய்து கட்சிக்கு சேர்த்துக்கொள்ளும் இவர்கள் தூய்மை நேர்மை பற்றி பேசுவது கொடுமையிலும் கொடுமை..
..
வீரசிவாஜி 1967 ல் தமிழகம் வந்ததாக அதுவும் கல்வெட்டில் இருப்பதாக பேசும் ஞானசூன்யங்கள் நமக்கு பாடமெடுக்கிறது .. அதிமுக ஆதரவில்லாமல் நோட்டாவை கூட தாண்டமுடியாதவர்கள் இன்று அடிமை அதிமுகவால் சட்டமன்றத்திற்குள் நுழைந்தவுடன் துள்ளுகிறார்கள்..
கோவில் சொத்துகளை ஒரு கூட்டம் மட்டுமே கொள்ளையடிப்பதும் ஏகபோக உரிமை கொண்டாடுவதும், தடுத்து நிறுத்தபட்டிருக்கிறதே .. ஆபரணங்கள் உருக்கி தங்ககட்டிகளாக சேமிக்கபடும் என்றவுடன் பதறுகிறார்களே எங்கே மாற்றிவைக்கபட்ட போலிநகைகளை தெரிந்துவிடும் என்றா .. அல்லது போலிகளுக்கு பதில் ஒரிஜினலை வைக்கவேண்டும் என்பதாலா .. பாஜக கடவுள் பெயரில் கலவரம் செய்யும் கூட்டம் கொள்ளையடிக்கவும் ஒருசிலரே பதவி சுகம் அனுபவிக்கவேண்டுமென விரும்பும் கூட்டம் .. சிவசேனா சொல்வதைப்போல இந்துக்களால் இந்த நாடு நன்றாக தானிருக்கிறது இந்துத்துவா பேசும் கயவர்களால் தான் கேடுவருகிறது ..
ஊழல் அநீதி, சுரண்டல் ,பொய், பித்தலாட்டம் ,பாலியல் தொல்லை, பிரிவினை சமூக அநீதி சாதி மதவெறி,
கயமைத்தனம் இவைகளின் கூட்டுதான் பாஜக .. விரட்டபடவேண்டியது மட்டுமல்ல வேரறுக்கபடவேண்டியது..
#கத்திபேசினால்உண்மையாகிவிடாது .. #நடிப்புகாலத்திற்கும்கைகொடுக்காது
காலம் அதை செய்யும்
பன்முகதன்மை கொண்ட இந்திய ஒன்றியம் நிச்சயம் செய்யும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment