Friday, November 19, 2021

சர்வாதிகாரம் பணிந்தது ..
வேளாண் சட்டத்தை திரும்ப பெற 600 பேர்கள் பலி கொடுக்க வேண்டியிருந்தது.. ஆளும் அரசு மக்களின் குரல் கேட்க நீண்ட போராட்டம் தேவையிருந்தது இது இன்னுமொரு சுதந்திர போர் .. உழவனை கார் ஏற்றி கொன்று இறுமாப்பாப்போடு இருந்தவர்கள் .. உ.பி.தேர்தல் வருவதை கவனித்தில் கொண்டு திரும்ப பெற்றிருக்கிறார்கள் ..
உயிர்நீத்த உழவர்களுக்கு வீரவணக்கம்..
..
மோடி அரசு இந்திய ஒன்றியத்தின் சாபம்.. அதீத பெரும்பான்மை வன்மத்தை கையிலெடுக்க தூண்டியது.. அமைச்சர்கள் முதல் அடிபொடிகள் வரை அகங்காரத்தில் பேசினார்கள் இப்போதும் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்ற குரலின் தொனி நமக்கு நிறைய உணர்த்தும் .. ஒரே நாடு ஒரே கொள்கை என்பதெல்லாம் ஒன்றியத்தை சிதறடிக்கும்  .. ஆணவக்காரர்கள் கற்று தேர்வதில்லை என்பார் கலைஞர் காலம் நமக்கு நல்ல பாடத்தை உணர்த்தி ஒன்றுபட்டு எதிரியை வீழ்த்துங்களென சொல்கிறது .. யார் பெரியவன் அதிகார ஆசை மதமும் சாதியும் தலையில் ஏற்றி வெறித்தனத்தை வேற்றுமையை விதைத்து நம்மால் எதையும் சாதிக்க முடியாதென்பதை நாம் உணரவேண்டும்.. பதவி நல்வாய்ப்பு மக்களுக்கு பணி செய்ய என்று எண்ணி செயல்படுபவனே சிறந்த தலைவனாய் காலம் கடந்தும் வரலாற்றில் பேசபடும் 
..
தேர்தல் 
ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதம் அதனால் தான் ஆட்சியாளர்கள் பிடிவாதமாக செயல்படுத்தும் மக்கள் விரோத செயல்களை  மறுபரிசிலினை செய்கிறார்கள்.. மக்கள் தங்கள் வலிமையை உணராமல் போனால் மோடியை போன்றவர்களும் பாசிசவாதிகளும் தான் ஆட்சியாளர்களாக வருவார்கள்.. தங்களின் பலத்தை வலிமையை உணர்ந்து மதம் ,சாதி, தற்பெருமை, புகழ் பதவி பணம் என அற்பங்களுக்கு துணைபோகாமல் வழங்கிநிற்காமல், வெறிகொள்ளாமல் நல்லவர்களை நாட்டை நல்வழியில் ஆள்பவர்களை  அதிகாரத்தை சேவை செய்ய மக்கள் நமக்கு தந்திருக்கும் வாய்ப்பாக கருதுபவர்களை கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்பவர்களை மக்களின் மீது பேரன்பு கொண்டவர்களை நாடும் மக்களும் தேர்வு செய்தால் இந்திய ஒன்றியத்தை கண்டு உலகே வியக்கும்..
மக்களிடம் செல் மக்களிடம் பழகு மக்களிடமே கற்றுக்கொள் என்ற பேரறிஞர் அண்ணாவின் அரசியல் இலக்கணத்தை உணரவேண்டும்.. மக்கள் காப்பாளன் காவலன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு 
இந்திய ஒன்றியத்திற்கு எடுத்துகாட்டாய் விளங்கும் தவைவர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் .. 
அவரின் சிந்தனை செயல் எல்லாம் மக்களின் மீதான அக்கறையின் வெளிபாடாய் இருக்கிறது ஒரு உதாரணம் சாலை விபத்துகளில் 48 மணி நேர சிகிச்சையை அரசே ஏற்கும் என்பது சிறந்த எடுத்துகாட்டு மக்கள் அதிகாரம் தந்தது இதற்காகதான் .. 
இந்திய ஒன்றியம் கணக்கில் கொள்ளபடவேண்டிய தலைவர் 
ஸ்டாலின் 
..
காலம் சிறந்த ஆசான்..
..
ஆலஞ்சியார் 

No comments:

Post a Comment