Sunday, November 14, 2021

நான் ஆய்வுக்கு வருவது தெரிந்தே மழை நீர் அகற்றம் ..
எடப்பாடி.. 
தண்ணீரை இறைக்காதீர்கள் கமல் வந்து பார்த்துவிட்டு போகும் வரை தண்ணீரில் நிற்கட்டும் ..
போட்டோ ஷூட் நடத்தி மழைநீர் இன்ப சுற்றுலா .. 
மேம்பாலங்களே மழைநீர் தேங்க காரணம் ..
பாவம் எதிர்கட்சிகள் ..
..
துரித செயல்பாடு இந்திய ஒன்றியத்தில் இப்படியொரு முதல்வர் இதுவரை பார்த்ததில்லையென பெருமிதம் கொள்கிறார்கள்.. மக்கள் நம் முதல்வர் நிச்சயம் இடறுகளை களைவார் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ஆம் ஒளிப்பதிவாளர்
பி.சி ஸ்ரீராம் முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறது அரசியல் செய்யாதீர்கள் என்கிறார் ஆம் வெகுமக்களின் குரலும் அதுதான் ..
..
ஒரு ஆட்சியாளர் மக்களோடு தொடர்புடையவனாக மக்களோடு இரண்டற கலந்தவனாக கைநீட்டி அழைத்தால் கூப்பிட்ட குரலுக்கு  செவிசாய்ப்பவனாக இருக்கவேண்டும்.. முன்பெல்லாம் ஆட்சியாளர்களை சுற்றி துதிபாடிகள் இருப்பார்கள் மக்களின் குரல் மகேசன் காதுகளில் விழாதவாறு புகழோசை காதை கிழிக்கும் .. வெற்று மனிதனின் ஆதங்கம் அழுகுரல் மன்னவன் காதுகளில் விழாமலே போகும் .. ஆனால் இப்போது சன்னகுரலில் அழைத்தாலும் தனியொருவராய் கைநீட்டி  அழைத்தாலும் தலைவர் காரை நிறுத்தி காதுகொடுக்கிறார் .. 
சாமானியர்கள் குரல் கேட்டு அவர்கள் குறை தீர்க்கிறார் ..
..
எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முடியாதவாறு தலைவரின் செயல்பாடுகள் இரண்டே நாளில் இயல்புநிலை திரும்பியது மாநகராட்சி  நன்றி என பகைவர்கள் கூட வேறு வழியின்றி புகழ்கிறார்..கொரோனா தடுப்பில் முன்னிலை மாநிலமாய் நிறுத்தி நிம்மதி பெருமூச்சுவிட வைத்தார் .. அடிமைகள் உயிர்வளி (ஆக்சிஸன்) கூட கையிருப்பு இல்லாமல் வைத்த நிலையில் போர்காலமென அதிகாரிகளை தன்னார்வலர்களை துரிதபடுத்தி மெச்சும்நிலையில் நம்மை கொண்டுவந்து சேர்த்தார்..
நடிகர் பார்த்திபன் எதிர்க்கட்சிகளுக்கு வேலை தருவதே இல்லை என்கிறார் .. இரண்டுநாள் கழித்து வந்து பார்த்தால் ரோட்டில் தண்ணீரில்லை நான் வருவது தெரிந்து நீரை இறைத்துவிட்டார்களென புழுவை போல முண்டுகிறார்
..
எதிர்க்கட்சிகள் எதேதோ சொல்கிறார்கள் எதையும் காதில் வாங்குவதில்லை காழ்ப்புணர்ச்சியும் பொய்யும் எதையாவது பேசி உள்ளேன் அய்யா என பிலிம்காட்டுவதையும் கண்டுக்கொள்ளாமல் .. எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான்  ஓடிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் முதல்வர் ..
இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்தோம்
..
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்..
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்..
..
ஆம் மக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்
எங்கள் முதல்வர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment