Friday, September 24, 2021

அதிமுக அமைச்சர்கள் திமுகவை விமர்சிப்பதாக எண்ணி உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்  ஜெயலலிதா 100 சதவிகிதம் வாக்குறுதியை நிறைவேற்றியவர் என எடப்பாடி கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார்.. பிடிஆர் எப்படி அண்ணாமலைக்கு மனசிதைவு  என சொல்லலாம் என ஊடகம் பொங்குகிறது பாஜகவிற்கு செம்படிக்கும் அதிமுகவை களமிறக்கி அவமானபடுகிறது .. யாரிந்த பிடிஆரென இந்தியா முழுவதும் பேசபடுவதும் இந்திய "ஒன்றிய நிதியமைச்சர் " நிர்மலா சீதாராமனின் தகுதி கேள்விக்குறியாக்கபடுவதும் சுக்கிநூறாக உடைத்தெறியபடுவதும் பாசிச கூட்டத்திற்கு பொறுக்கவில்லை ..
..
எப்படி மனசிதைவு என சொல்லலாம் என கதறுகிறார்கள் பாஜகவில் இருப்பவர்கள் பெரும்பாலோனர் அறிவுக்கொண்டு சிந்திப்பதில்லை அதோடு மூளைச்சலவை செய்யபட்டு பொய்யை கொஞ்சமும் கவலைபடாமல் திரும்ப திரும்ப சொல்பவர்கள் .. மாநிலங்கள் இல்லையேல் ஒன்றியம் இல்லையென நெற்றியில் அடித்து சொன்னதும் நிர்மலாவின் முகம் கருக தொடங்கியது அதிலிருந்தே பொருளாதாரம் குறித்த இவரின் குறியீடுகளும் தெளிவுகளும் வடநாட்டு ஊடகங்கள் செய்தியாக்க பாஜக தலைகள் திணறுவதும் தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் எங்கேவிட்டால் "எல்லாம் தெரிந்துவிடும்" என அஞ்சுகிறார்கள் ..
..
பிராமணரல்லாத ஒருவர் மூளைக்காரி வேசம் போட்ட நிர்மலாவை ஒன்றும் அறியாதவர் என அடுக்கடுக்காய் ஆதாரத்தோடு பிரித்தெறிகிறார் ..கோவம் வரதானே செய்யும் கடவுள் மறுப்பாளர் இல்லை மதுரை மீனாட்சி கோவிலின் "அறங்காவலர்" குடும்பம், எனவே அதையும் குறைகூற முடியவில்லை புள்ளிவிவரத்தோடு பேசுகிறார் பதில் சொல்லமுடியவில்லை  எல்லாபக்கமும் கேட்டை மூடுகிறார்கள் என்ற எரிச்சல் ஊடகங்களில் வலதுசாரிகளின் மொழிகளில் தெரிகிறது .. ஊடகங்களில் புள்ளிவிவரத்தோடு பேசுவதும் GST ல் உள்ள குறைபாடுகள் பெட்ரோலை ஏன் சேர்க்கவில்லை செஸ்வரி குறித்த விளக்கங்கள் ஒன்றிய அரசின் அமைச்சர்களை தூங்கவிடவில்லை வட மாநிலங்களில் பி..டிஆரின் திறமையும் அறிவும் தெளிவாக கருத்துகளும் வியக்கவைக்கிறது கண்டு எரிச்சலை தருகிறது..
..
திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை என காலுக்கடியில் பதவியை தேடிய எடப்பாடி .. இப்போதல்ல திமுக எக்காலத்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் இன்று தமிழகத்தின் கட்டமைப்பை பிறமாநிலங்கள் பெருமை பேசுகின்றன.. ஆட்சிக்கு வந்து நான்கே மாதங்களில் 500 வாக்குறுதிகளில் 202 மேற்பட்டவை நிறைவேற்றபட்டிருக்கிறது பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்,பேறுகாலவிடுமுறை, நகைகடன் தள்ளுபடி என,அடுக்கிகொண்டே போகலாம் எல்லாவற்றிலும் முறைகேடு செய்தவர்கள் போலி பெயர்களில் ஒரே ஆதார் எண்ணில் நகை கடன் என கொள்ளையடித்த கூட்டம் நிர்வாகத்தை பற்றி பேசுவது கொடுமை ஒன்றிய அரசின் அமைச்சர் கைநீட்டி மிரட்டுவதும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அடிமை பயத்தில் எழுந்துநின்றது இந்த நாடு கண்டதுதான் .. திமுகவை கருணாநிதி ஆரம்பிக்கவில்லை என முனுசாமி சொல்கிறார் அதுதெரியும் ஆனால் அதிமுகவை ஜெயலலிதா ஆரம்பிக்கவில்லை என்ற உண்மையும் எம்ஜிஆரை மறந்ததும் மக்கள் அறிவார்கள் .. புழுவைவிட கேவலமானவர்கள் திமுகவையோ தமிழ்நாட்டின் அமைச்சர்களையோ குறைகூற அருகதையற்றவர்கள் ..
கொலைவழக்கும் கொள்ளையடித்து சேர்த்ததும் கண்முன்னே வருவதும் பீதியில் உளறி வைக்கிறார்கள் ..

விரைவில் சிறையில் காலந்தள்ள நேரிடும் என அஞ்சிவது அதிமுக தலைவர்களின் பேச்சுகளில் தெரிகிறது ..  
விமர்சிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும் அது அடிமைகளுக்கில்லை திறமையை வளர்த்துக்கொள்ளவும் அவர்களால் இயலாது .. பி.டி.ஆரை அடக்கிவாசிக்க சொல்லும் ஊடகங்கள் திமிரோடு பதில் தரும் நிர்மலாவை கேள்வி எழுப்புவதில்லை .. நாக்பூரின் வளர்ப்பில் வளரும் ஊடக பொறுக்கித்தனம் .. சரி தவறென்பதை கூட சொல்ல மறுத்து 
மௌனம் காத்துநிற்பது கூட அறம்தவறிய செயல் ..  பொதுவாழ்விற்கு வந்தவர் எல்லோரையும் விமர்சனம் செய்ய உரிமை உண்டு அதில் உண்மையும் நேர்மையும் வேண்டும் .. இரண்டுமில்லாதவர்கள் மௌனம் காப்பதே மேல் 
..
திராவிடம் உண்மையை பேசும் அறிவைக் கொண்டே பேசும் .. நேர்மையோடு நெஞ்சுரத்தோடும் அஞ்சாது நிற்கும் .. அறிவே எமது ஆயுதம் ..
தெளிவோடு திறனோடு எதிர்க்கொள்ளும் ஆற்றல் உண்டு திராவிடப் பேராசான்கள் கற்றுதந்த வழியில் பயணிப்போம் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment