Saturday, August 28, 2021

உடன்கட்டை ஏறுதல்
சட்டப்படி
தடைசெய்யப்பட்டிருந்தாலும் சட்டமன்றத்தில் தொடர்கிறது..
 "பாஜக  முன்னே அதிமுக" பின்னே! 
#தோழர்பாலபாரதி 
ஒன்றிய அரசின் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து சட்டசபையிலிருந்து பாஜக வெளிநடப்பை தொடர்ந்து அதிமுகவும் வெளியேறியது ..
"எமக்கு வாய்த்த அடிமைகள் " என்ற வசனம் ஞாபகம் வருகிறது ..
பாஜக சட்டமன்றத் தலைவர் நயினார் நகேந்திரன் எதிர்த்து வெளியேறிய போது அவைதலைவர் கட்சி தர்மம் போயிட்டுவாங்க என்றார் ஆனால் அதிமுகவும் வெளிநடப்பு செய்ததிலிருந்தே அவர்கள் எந்தளவிற்கு பயப்படுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிறது ..

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, நடுவில் இறைவனின் சிரிப்பு. இதுதான்  என் நிலைமை” 
என தன் இயலாமையை பன்னீர் சொல்லிவிட்டு இது அவை முன்னவருக்கு என் நிலைமை தெரியும் என்கிறார் இவர்கள் எந்தளவிற்கு ஊழல் செய்துவிட்டு மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள் என்பதற்கு இவர்களே மொழியே சாட்சியம் கூறுகிறது ..
ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர் இவ்வளவு கண்ணியமாக சபை இதற்குமுன் நடந்ததில்லை என செங்கோட்டையன் சொல்வதிலிருந்தே சபையை எந்தளவு நேர்மையோடு ஜனநாயகத்தன்மையோடும் நடத்துகிறார்கள் என புரியும் .. முன்பும் சபை கண்ணியமான விவாதங்களாலும் எதிர்ப்பு அரவணைப்பு பாராட்டு என கண்ணியம் குறையாமல் நடந்ததுண்டு .. எம்ஜிஆர் காலம் வரை கூட கண்ணிய குறைபாடு அவ்வளவாக இல்லை..
ஆனால் செல்வி ஜெயலலிதா வரவிற்கு பிறகு சட்டைகிழித்துக்கொண்டு நாடகமாடிய தொடங்கியது முதல் காழ்ப்புணர்ச்சியோடு முதியவர்கள் கண்ணியகுறைவாக எள்ளிநகையாடுவது அம்மையாரிடம் நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக கேலிகிண்டல் செய்வதென சபை நாகரீகமற்று பொலிவிழந்து கிடந்தது ஜனநாயகதன்மையற்ற செயல்கள் தனிநபர் துதிபாடல்கள் உச்சத்தில் ஒலிக்க நாடக கம்பெனியைபோல இருந்த சபையை மீட்டு மீண்டும் ஜனநாயகம் மலர்ந்திட வைத்த முதல்வருக்கு நன்றி ..
..
பாஜக வெளியேறியபோது கூட "கட்சி தர்மம் " போயிட்டு வாங்க என சபைதலைவர் சொல்கிறார் என்ன அழகு.. ஆனால் அதிமுக தொடர்ந்து சமூகநலன், சமூகநீதி தொழிலாளர் விவசாயிகளின் நலன் கல்வி உரிமை தமிழர் பண்பாடு என எல்லாவற்றிலும் துரோகத்தையே செய்கிறது கொஞ்சமும் கவலைபடாமல் .. உணர்வற்ற ஜந்துக்களாகிபோனார்கள் ..
..
மிக சிறந்த வெளிப்படையான நிர்வாகத்தை தருகிறார் மேதகு முதல்வர் அவர்கள் .. சபையில் நேரத்தின் மதிப்பை உணர்ந்து புகழபாடலை வேண்டாமென்கிறார்  முன்னாள் முதல்வரின் புகைபடத்தை அகற்ற 15 கோடி செலவாகும் அதை மாணவர்களின் நலனுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்கிறார் இலவசம்  வேண்டாமென சில அறிவிலிகள் கூச்சல் சத்தம் கேட்கிறது ஆனால் ஏழ்மையில் தினம் தினம் வாழ்வில் போராடும் மக்களுக்கு தான் அதன் அருமை தெரியும் .. அதிலும் தங்கும் விடுதியில் தங்கி வேலைக்கு செல்லும் பெண்கள் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் பணிக்கு சென்றுவர செலவழிப்பது மிச்சமாகும் அதை தங்கள் குடும்பத்திற்கு அனுப்புவார்கள்    இதையெல்லாம் உணராமல் அயல்நாடுகளிலிருந்து தமிழைச்சொல்லி வசூல்நடத்தி பிழைக்கும் கூட்டம் அறியாது.. ஈழ தமிழர் மறுவாழ்வு மையம் என 
மாற்றியது அவர்கள் அகதிகள் அல்ல உறவுகள் என உரக்க சொல்லியிருக்கிறார் ..
(Srilankan Tamil Refugee camps will hence forth be called as Srilankan Tamils Rehabilitation camps)
..
தமிழகம் விடிய தொடங்கி கதிரவனின் ஒளிகீற்று படர தொடங்கி வெளிச்சம் காண்கிறது ..
தீமைகள் நாற்றங்கள் ஒழிந்து நல்லதொரு மாற்றத்தோடு பயணம் தொடங்கியிருக்கிறது 
நல்ல தலைமை 
நல்ல படைதலைவனை கொண்டிருக்கிறோம் 
இளகிய மனம் படைத்தவர் மட்டுமல்ல இரும்புகரம் கொண்டும் அடக்கும் ஆற்றல் பெற்றவர் புகழுக்கு மயங்காத பேராண்மை கொண்ட பண்பாளர் .. 
தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி.ஸ்டாலின் அவர்கள் 
..
தமிழ்நாடு மகிழ்கிறது
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment