Saturday, September 4, 2021

அயோத்திதாசருக்கு மணிமண்டபம்.. யாரிந்த அயோத்திதாசர் சனாதனத்தால் ஒடுக்கபட்டு தீட்டானவர்களென ஒதுக்கபட்டவர்களுக்காக குரல் கொடுத்தவர்.. ஆதிதிராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்று உறுதியோடு சொன்னவர்  பறையர்சமூக முன்னேற்றத்திற்கு முதன்முதலில் பாடுபட்டவர்..
..
ஆங்கிலேயர்களிடம் பணிசெய்ய ப்ராமணர்களே முன்னுரிமை பெறுவார்கள் சமையல் செய்வதற்கு மாட்டுக்கறியை சமைப்பதற்கு அப்போது தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தபடுவார்கள் அவ்வாறு
இவரது தாத்தா பட்லர் கந்தப்பன்
ஜார்ஜ் ஹாரிங்டனிடம் வேலைபார்த்து வந்தார் .. 
நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் 
இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.. இல்லையெனில் தமிழ்நூல்கள் ஆரிய சூழ்ச்சியில் "போகி" யில் எரிக்கபட்டிருக்கும்..
..
இந்து' அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் 'இந்து' சமூகத்தின் சாதீய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதியக்கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஆதிதிராவிட மக்கள் இந்து அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்தார்.. பறையர்கள் இந்துக்கள் அல்ல அவர்கள் பௌத்தர்கள் என சொன்னவர் ..
..
பண்டிதரால் துவக்கப்பட்ட 'சாதியற்ற திரவிட மஹா ஜன சபையின்' சார்பாக 1891 திசம்பர் 1 தேதி நிறைவேற்றப்பட்ட இலவசக் கல்வி, கோவில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அனுப்பினார். அந்த கோரிக்கைகள் இறுதிவரை நிறைவேற்றப்படவே இல்லை. 
..
சென்னை மகா ஜன சபை 1892 இல் ஏற்பாடு செய்த கூட்டத்தில்,
(அதாவது அரசுக்கு எது எது தேவை என்பதை பரிந்துரை செய்வதற்காக)
நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாய்ப் பண்டிதர் கலந்துகொண்டு, சில கோரிக்கையை சமர்ப்பித்து, விஷ்ணு, சிவன் கோவில்களில் நுழைய அனுமதி கேட்டார். அது உடனே மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார்..அதில் முக்கியமாக கோரிக்கைகள் எங்கள் குழந்தைகளை 4வது வரையாவது படிக்க அனுமதியுங்கள் ..எங்களையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்..
கோவிலுக்கு அனுமதியுங்கள் என்றவுடையே தஞ்சை சாஸ்திரிகள் எழுந்து அதுதான் உங்களுக்கென்று தனிகோவில்கள் உள்ளதே ஏன் ஆகமவிதிகளுக்கு உட்பட்ட கோவிலில் அனுமதிகிடையாதென சொல்லி இதேபோல் மற்ற கோரிக்கைகளுக்கும் நாங்கள் தரும் விளக்கத்தையும் ஏற்பீர்கள் என நம்புகிறேன் என்றார் .. எங்கள் குழந்தைகள் படிக்க என்றவுடன் அங்கே கலகம் ஏற்பட்டு விக்டோரியா ஹாலில் இருந்து வெளியேற்றபட்டார்..
..
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் திராவிடம் என்ன கிழித்தது என்போருக்கு ஏறக்குறைய இதே கோரிக்கைகளோடு 
1952ல் சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் கடைசிவரை மக்கள் ஆதரவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் அதிகாரத்திற்கு வரும் வழியறிந்த அன்றைக்கு முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி "துறைசார்நத கோரிக்கைகளை " வையுங்கள் என்றார் அதாவது சவுக்காரம் படித்துறை,துணிதுவைக்க தண்ணீர்" இப்படி கேளுங்கள் என்றார் அதாவது குழந்தைகள் 4வது வரை படிக்க கூட அனுமதி மறுக்கபட்டது  இடையில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபோது  இனி கல்விசாலைகள் நிறுவ அனுமதி வேண்டுமெனில் எல்லோரையும் சமமாக அமர்த்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பட்டது ஆனால் யாரும் புதிதாக பள்ளிகூடம் திறக்க அனுமதி கோரவில்லை என்பதும் உண்மை.. 
..
அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை, சடங்குகள் பிராமணீய ஆதிக்கம், ஆன்மீகக்கொள்கை, மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு #பகுத்தறிவுவிடுதலையே அவரது தேடலாக இருந்தது.. சாதிசமயமற்ற தமிழர்கள் என அழைக்கவேண்டும் என்றவர் .. பலமொழிகளை கற்றுணர்ந்தவர் வடமொழியில் புலமையும் சித்தவைத்திய அறிவும் கொண்டவர் .. காத்தவராயன் என்ற பெயரை தன் குருவின் மீதுள்ள அன்பால் அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டார்

திராவிட மகாஜனசபை 1891ல் தொடங்கிய, திராவிட பாண்டியன், ஒருபைசா தமிழன் ,என அச்சு ஊடகம் மூலம் திராவிட கருத்தியலை சொன்னவர் 
திராவிட இயக்கத்தின் முன்னோடியான
இவருக்கு தமிழ்நாடு அரசு நினைவு மண்டபம் அமைப்பது போற்றுதலுக்குரிய செயல் 
முதல்வர் தளபதியாருக்கு பாராட்டுகள்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment