Sunday, November 21, 2021

இனி பாமக தலைமையில் தான் கூட்டணி .. 
எந்தகட்சியுடனும் கூட்டணி சேராது..

கடைசி நேரத்துல அய்யா யார்கிட்டயாவது போயிடுவார்னு நீ நெனச்சா,  நீ இருக்க வேண்டிய இடம் கீழ்பாக்கம் மருத்துவர். ராமதாஸ்..
பாவம் பாமக தொண்டர்கள் 
பார் உள்ளளவும்  என்றெல்லாம் பழந்தமிழ் பேசி கதை பழையதானது .. இப்போது கூட அதிமுக தயவில் தானே அன்புமணி எம்பியாக இருக்கிறார்.. ஒரு தீர்க்கமான முடிவெடுத்தபிறகு அதிமுக தயவில் வந்த பதவியை ராஜினாமா செய்து ராமதாஸ் சொல்லும் மானமுள்ளவராக நமக்கு காட்சி தருவார் ..
..
பேச்சில் நேர்மையில்லை அடிக்கடி மாறிமாறி சவாரி செய்ததை தளபதி நாசுக்காக கழட்டிவிட தனியாக என கோஷம் எழுப்பி மாற்றம் முன்னேற்றமென சொல்லி கடைசியில் அங்கும் இங்கும் கடைவிரிக்க மீண்டும் தளபதி கண்டுக்கொள்ளாமல் கடைசியில் மீண்டும் தனித்து என்கிறார்கள்.. வன்னிய பெருசமூகம் இவர்களை நம்புவதை விடுத்து வெகுகாலமாகிவிட்டது .. கட்சியில் ஊரக நிர்வாகத்திற்கு கூட ஆள் கிடைக்கவில்லையென ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் ..
..
சமூகநீதி பேசுபவராக தன்னை அடையாளபடுத்தி நின்றவர் சாதிய குறியீட்டை சுமந்து சறுக்கிய வரலாறு அறிவோம் .. தன் மகனை முன்னிறுத்தி அரசியலை கையிலெடுத்ததும் ஏற்கனவே செய்த சத்தியத்தை ஊடகங்களும் வெகுஜனங்களும் ஞாபகம்படுத்த சரிவு தொடங்கியது .. சின்ன சின்ன விடயங்களுக்கு இளைஞர்களை தூண்டி வழிகேட்டில் நிறுத்தும் அரசியலை தவிர வேறெதும் ஆக்கபூர்வ செயல்பாடுகள் இல்லை .. வன்னிய இளைஞர்கள் கல்வி வேலைவாய்ப்பை உருவாக்கவோ அதற்கான கட்டமைப்பை செய்யவோ முயற்சிக்கவில்லை ..அரிவாளை தூக்கி வா நம் சாதியை குறை சொல்லிவிட்டான் என உணர்ச்சி விளிம்பில் நிறுத்தி புகழ்தேடும் கயமையை விட்டொழிக்கவேண்டும் .. 
..
ஒரு திரைப்படம் பேச வந்த கருத்தை உள்வாங்காமல் தன் சாதியை கேவலபடுத்திவிட்டான் என கம்பு சுத்துவது ..வன்னிய இளைஞர்களை தியேட்டரை கொளுத்துவோம் 5 பேர்தான் பாதுகாப்பிற்கு நாங்கள் ஆயிரம் பேர் திரண்டால் என பேசவைப்பது நீண்டகாலம் அரசியல் களத்தில் நிற்கும் ராமதாஸ் அய்யாவிற்கு அழகல்ல.. படத்தின் உள்நோக்கம் ஏதுவுமில்லை என தெளிவுபடுத்திய பிறகு அன்புமணி தேவர்படத்தை வைத்தால் சும்மா இருப்பார்களா என சாதி மோதலை உருவாக்க நினைப்பது அரசியல் அறிவிலித்தனம் .. தமிழக மக்கள் தெளிவானவர்கள் சாதி அடையாளத்தை மத அடையாளத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற நற்றறிவு உடையவர்கள் .. இயக்குநர் உள்நோக்கமில்லை வருடத்தை குறிக்கமட்டுமே பயன்படுத்தியதாகவும்
யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக சொல்கிறார்
அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்கிறார்...இதை இத்தோடு முடித்து  நல்ல அரசியலை. முன்னெடுப்போம் ..
"ஜெய்பீம் " நிறைய விவாதங்களை கருத்துருவாக்கங்களை அரசின் அலட்சியத்தை அதிகாரவர்க்கத்தின் திமிரை பேச வைத்திருக்கிறது.. இதுபோல் நிறைய படங்கள் உலகதரத்தில்  உருவாக்கபடவேண்டும்
..
தமிழ் சினிமா இப்போதுதான் சாமானியர்கள் கையில் வந்து நல்ல திரைகாவியங்கள் வருகிறது மக்கள் பிரச்சனைகள் 
மண்சார்ந்த வலிகள் பேசபடுகின்றன ..
உலக தரத்திற்கென இது என புளுகியவர்கள் கூட இப்போது உலக தரத்திற்கு தமிழர்கள் திரைபடத்தை தருகிறார்கள் என்றவுடன் எரிச்சலடைய செய்திருப்பதே தமிழனின் கலைபடைப்பின் வெற்றி .. 
ஜெய்பீம் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment