சமூகநீதிக்காக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை ஏற்கமுடியாதென பொய்யன் பேசுகிறான் .. இவனுக்கெல்லாம் பதில் தரவேண்டுமா என கேட்க கூடும் ..திரும்ப திரும்ப ஒன்றைச்சொல்லி அது குறிப்பிட்டகாலம் வரை நம்பவைப்பதென்பது நாக்பூர் தந்திரம் அதைதான் கூலிக்கு மாரடிக்கும் சின்னபுத்திகாரன் பேசுகிறான் ..
..
பெரியார் கஞ்சன் எனவும் கையெழுத்து போடகூட காசுகேட்பார் என்பதும் உண்மைதான் அந்த பெரியார்தான் பெரியார் கல்லூரியை நிறுவி அடிதட்டுமக்களின் குழந்தைகளின் கல்விக்கு வழிவகுத்தார் .. சமூகநீதிக்காக யாருமே போராடவில்லையா என்ற கேள்வியில் நியாயமிருக்கும் ஆனால் யாரால் நிம்மதியடைய முடிந்தது வெற்றிபெற முடிந்ததென்ற உண்மையை அறிந்தும் ஏன் நாங்களெல்லாம் படிக்கவில்லையா ..அவ்வையார் படிக்கவில்லையா என குதர்க்கம் பேசி திசைதிருப்புவார்கள் ..
உண்மையில் தமிழன் அறிவோடும் நாகரீகத்தோடும் வாழ்ந்தவனை வந்தேறிகள் மதத்தை முன்வைத்து வர்ணத்தை சொல்லி பிரித்து எதைவேண்டுமானாலும் கொடு கல்வியை கொடுக்காதே என பலதலைமுறைகள் கல்வி மறுக்கபட்டு மீண்டு வர நினைக்கும் போதெல்லாம் கல்வியை கேட்டால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று என்ற பலநூறாண்டாய் நம்மை அடிமைபடுத்தியவர்களிடமிருந்து தன்மானத்தோடு திமிரி ஏழ வைத்த பெரியாரை யார் என கேட்கிறார்கள்..
..
1892 ல் இந்து மகாஜன சபை நடத்திய கூட்டத்தில் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைப்பதற்காக கூடிய கூட்டத்தில் அயோத்திதாச பண்டிதர் கோவில் நுழைவு உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டபோது சமாதானம் பேசி ஆகமவிதிகளை சொல்லி மறுத்தவர்கள் எங்கள் வீட்டு குழந்தைகளை நான்காவது வரையாவது படிக்க அனுமதியுங்கள் என்ற போது பண்டிதரை வெளியேற்றினார்களே அதெல்லாம் இந்த சின்னபயலுக்கு தெரியுமா ..இந்திய வரலாற்றில் அரசியல் சாசனத்தை திருத்தி சாதனை படத்தவர் பெரியார் என்ற உண்மை தெரியுமா .. ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் என்றவர் பெரியார்.. ஒடுக்கபட்டவனும் தாழ்த்தபட்டவனும் சமநீதியோடு முன்னேற வேண்டுமென்பதற்காக பாடுபட்டவர் பெரியார்.. விதவை திருமணத்தை ஆதரித்தோடு, தன் நண்பர் ராஜாஜி குடும்பத்திலேயே பால்ய விதவையாக இருந்த லட்சுமிக்கு மறுமணம் செய்துவைக்க மறுத்த ராஜாஜியோடு அவள் தலைவிதி அவ்வளவு தான் என்றவரை மாற்றி புரட்சி செய்தாரே அதெல்லாம் சமூகநீதியில் வராதா ..
வடமாநிலங்களை போல அல்லாமல் இங்கே ஒடுக்கபட்டோர் கல்வியறிவில், சுயமரியாதையில்,
உயரத்தில் நிற்கிறார்களே.. இதெல்லாம் கிழவன் செய்த "காரியம்" என்பது எப்போது புரியும்
..
நிறைய பேர் சமூகநீதி வேண்டி உழைத்தார்கள்.. பாடுபட்டார்கள் அவர்களிடம் கொஞ்சமேனும் தன்சமுதாய உணர்வும்,பதவி,புகழுக்காகவும்
"அழுக்கை தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன் " அதை போல சுயநலம் இருந்தது ஆனால் சுயநலமற்று மக்களுக்காக தொண்டாற்றிய "பழம்" பெரியார்
இதை சிறியோர் அறியார்.. பெரியார் கலங்கரை விளக்கானார் திக்குதெரியாமல் நின்றோருக்கு திசைகாட்டினார்.. சமூகநீதி என்பது
எவனும் எவனும் அடிமையில்லை தன்னிலும் தாழ்ந்தவனோ உயர்ந்தவனோ இல்லை பெண்களை அடிமைபடுத்தும் ஆணாதிக்கசமூகத்திற்கு எதிராக நின்று குரல்தந்து சக மனுஷியாக அவர்களையும் மதித்து இன்னும் கொஞ்சம் கூடுதலாக உயரத்தில் ஏறிட காலமெல்லாம் உழைத்த பெருமகனார் பேசுவும் அருகதைவேண்டும் ..
காசுக்காக விலைபோகும் இந்த கேடுகெட்டவன் கூச்சல்கள் கடைக்கால் மயிறுக்கு சமம் ..
..
பெரியார் என்றென்றும் பெரியார்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment