காலம் வலிமையானது ..
வையாபுரிக்கு பட்டாபிஷேகம்..
வரும் 20ந்தேதி நடைபெறுகிறது ..
பட்டாபிஷேகம் என்ற பதம் கூட வைகோ நமக்கு அருளியது ..
யார்வேண்டுமானாலும் வரலாம் அது அவர்களின் உரிமை .. கட்சி ஏற்றுக்கொண்டால் நமக்கு கேள்வி எழாது ..மக்கள் மன்றம் ஏற்குமா என்பதை காலம் முடிவுசெய்யுெம்..
..
மாணவரணியில் தொடங்கி கிளை மாவட்டம் என உயர்ந்து படிபடியாக வந்தவரை தன் மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்துகிறாரென கேள்வி எழுப்பியவர் .. அதில் கூட மக்கள் மன்றத்தில் தோல்வி வெற்றி இரண்டையும் சந்தித்து தொடர்ந்து உழைப்பை மட்டுமே நம்பிய .. மக்களிடத்திலே சென்று மக்களுக்காகவே உழைத்து .. கொண்ட கொள்கையில் சமரசம் செய்துக்கொள்ளாமல் நேர்மையோடும் நன்னெறியோடும் அரசியலை பயின்று காலம் வாய்ப்பை தரும் என காத்திருந்தவர் தளபதி ..
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரென சொல்லவில்லை .. பகைவர்கள் கூட ஸ்டாலின் அரசியலுக்கு வருவதை இத்தனை அதிகம் எதிர்க்கவில்லை .. இனபகையை கொண்டிருந்த "சோ" கூட உழைப்பில் உயர்ந்தவரென சான்றிதழ் தந்தார் .. கொள்கை ரீதியான விமர்சனம் வேறு ஆனால் பொதுவாழ்வில் தனக்கானதை தானே உழைத்து தயார் செய்கிறார் என புகழாரம் சூட்டினார்..
..
யாரையும் குறைகூறுவதற்கில்லை ஆனால் ஸ்டாலின் மீது ஏய்த்த அம்புகள் விரக்தியிலும், எரிச்சலோடும் எரியபட்டவைகள் .. அவரின் உழைப்பு நீண்ட அத்தியாயங்களை கொண்டது .. நீண்ட பயிற்சியும் தொடர்ந்து மக்கள் பணியில் ஒய்வில்லா உழைப்பும் கொண்டது .. கலைஞர் மகன் என்ற அடையாளம் தாமதபடுத்தியதே தவிர எப்போதோ அடைந்திருக்கவேண்டிய பதவிகளும் உரிமைகளும் காலதாமதமாகவே கிடைத்தது
"ஆலமர நிழலில் வளராது " என்ற சொல் ஸ்டாலினுக்கு மிகவும் பொருந்தியது .. எல்லாவற்றையும் மக்கள் தந்தே பெற்றிருக்கிறார் .. வாய்ப்பிருந்தும் கொஞ்சம் சூழ்ச்சி செய்தால் எப்போதோ ஆட்சி பொறுப்பிற்கு வந்திருக்கமுடியும் .. கொள்கையை விட்டுகொடுத்தால் போதும் வாசல் தேடி வாய்ப்பு வரும் ஆனால் நேர்மை .. மக்கள் தந்ததாக இருக்கவேண்டும் அறியணை என்று காத்திருந்து மக்களின் பேரன்பில் பதவியை பெற்றார் ..
..
மக்களிடம் செல்
மக்களோடு கலந்துரையாடு
மக்களிடமே அரசியல் பழகு ..
என்றார் பேரறிஞர் அண்ணா
மக்களுக்கானவர்கள்
வரலாற்றில் என்றும் போற்றபடுவார்கள்
வரலாறு போற்றும் நம்தளபதி
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment