Wednesday, December 22, 2021

 
பேச்சுரிமை பற்றி எங்களுக்கு பாடமெடுக்க வேண்டாம்..,
விமர்சனங்களும் வன்சொற்களையும் நிறைய கேட்டு பழகியவர்கள் .. விமர்சனம் என்ற பெயரில் கேடுகெட்ட தீய எண்ணங்களை கடும்சொற்களை நூற்றாண்டுகள் கடந்தும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இடது கையால் தள்ளியவர்கள் தான்..
ஆனால் .. எங்கள் கொள்கையை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு .. ஆனால் தனிநபர் தாக்குதலை கேவலமாக சித்தரிப்பதை தொடர்ந்தால் எங்களுக்கும் கம்பை கையிலெடுக்க தெரியும் என சொல்வந்ததை தான் நேற்றைய தினம் நாதக தம்பிகள் மீதான தள்ளுமுல்லு.. 
தம்பிகள் பேசியதில் சில..

தி.மு.க வுல ஒவ்வொரு மாவட்டச்செயலாளரும் கலைஞருக்குப் பிறந்தவனுகதான்..

நாப்கின் அட்டையை ராசாத்திக்கு குடுப்பியா..
ஒரு அப்பனாத்தாளுக்கு பொறந்திருந்தா.. அவர்களின் உடல்மொழி மிக கேவலமாக இருக்கும்.. இப்படி பேசியும் மௌனம் காத்தோம் .. இவர்கள் தகுதியற்றவர்கள் வீணான விந்தின் விளைச்சல்கள் என அறிவோம் .. ஆனால் செருப்பை தூக்கி காட்டியபிறகு அமைதியாக செல்ல இயலாது அவர்கள் நோக்கம் கலவரம் அதை பாஜக செய்யாது அதற்கு அடியாள்கள் தேவை அதை சரியாக செய்ய நாதக தம்பிகளால் முடியுமென நம்பி பொறுப்புதரபட்டிருக்கிறது .. ஆனால்  திமுக சரியாக அறியாததால் ஆடுகிறார்கள்..
..
ஒருவர் மீது அல்லது இயக்கத்தின் மீது விமர்சனம் என்ற பெயரில் எதைவேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்றால் அது சிறந்த நடைமுறையாகாது .. தொடர்ந்து 'நாதக' சிலவண்டுகள் அறிவிலித்தனமாக பேச தொடங்கியவர்கள் ஆபாசமாக மாறி செருப்பை கழட்டி காட்ட தொடங்கியதும் களம் மாற தொடங்கியது ..
திமுக மீது தொடர்ந்து பொய்யான பரப்புரையை செய்து புலிகள் மீது பொதுவெளியில் வெறுப்பு வர காரணமானவர்கள் இவர்கள் .. திமுகவிற்கு  ஈழ துரோக பட்டத்தை சுமத்தி பிழைப்பு நடத்தும் இந்த கும்பலுக்கு ஈழ வரலாறும் தெரியாது
பிரபாகரனைப் பற்றியும் முழுமையாக அறிந்துமில்லை..
..
திராவிட இயக்கங்கள் ஈழத்திற்கு இழந்ததெல்லாம் கணக்கிட்டால் இன்னும் பலதலைமுறைக்கு ஈழத்தமிழர்கள் நன்றிகடன் பட்டிருக்கவேண்டும்.. எதையும் எதிர்பார்க்காமல் செய்தவர்கள் திமுகவினர்.. ஈழ இறுதிபோரில் திமுகவும் கலைஞரும் துரோகம் இழைத்ததாக சொல்லி திரியும் இவர்கள் அறியமாட்டார்கள் "இவர்களே தேடிக்கொண்ட அழிவு என்று ".. ஈழ மக்கள் இந்த நாதக கும்பலை அறிவார்கள் பணத்திற்காக பொய்பேசி திரியும் கயவர்கள் என்று .. வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்கள் பிரபாகரன் வைத்திருத்த நிலை என்ன.. ஒரே ஒரு போட்டோ வைத்துக்கொண்டு கற்பனைகதைகளை (ஆமைக்கறி தோளில் சாய்வார்) 
என தொடர்ந்து புளுகும் கயவன் சீமான்..
..
பழைய திமுகவைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் 
ஒரேயொரு உதாரணம்
வை.கோபால்சாமி கட்சியிலிருந்து நீக்கபடுகிறார்.. அவரோடு ஒன்பது மாவட்ட செயலர்கள் தினகரன் கந்தசாமி போன்றவர்கள் செல்கிறார்கள் திமுகவிற்கு உரிமை கோருகிறார் வைகோ.. திமுக பொதுக்குழு தஞ்சையில் கூடுகிறது குருதயாள்சர்மா மண்டபத்தில் காலையில் பொதுக்குழு முடிந்து கலைஞர் ஓய்வெடுக்க வருகிறார் மாலையில் திலகர் திடலில் பொதுக்கூட்டம் .. நடத்தவிடமாட்டொமென  என வைகோ விசுவாசிகள் பேச கலைஞர் காதுக்கு செய்தி வருகிறது .. உடனே என்ன மணி(கோ.சி.மணி) உன்னை நம்பிதானப்பா வந்தேன் என்கிறார் .. இங்கே இரு வருகிறேன் என திடலுக்கு விரைகிறார்.. யார்றா .. அவன் இங்கே தான் கூட்டம் நடக்கும் எவனாவது கலாட்டா செஞ்சீங்க  இங்கேயே புதைச்சுருவேன் என கர்ஜித்தார் .. சத்தம் போட்டவனெல்லாம் பதுங்கிவிட்டார்கள் ..  திரும்ப வந்த மணி அண்ணன் "போய் பேசு போ" என சொன்னார் கலைஞரின் கண்களில் கண்ணீர் வந்தது .. அப்படிபட்ட
தளபதிகளும் தொண்டர்களும் உடன்பிறப்புகளை கொண்ட இயக்கம் .. அமைதியாகவே இருப்போமென கருதுவது சிறுப்பிள்ளைத்தனம் .. 
..
நாதக தம்பிகள் சீமானை நம்பி மாட்டிக்கொள்ளாதீர்கள்.. இளையாங்குடியில் எதுவும் நடக்கலாம் கலவரம் செய்ய திட்டமிடுகிறார்கள் கைது செய்து அசம்பாவிதம் நடக்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் .. 
நாதக தம்பிகள் கவனம் .. 
..
ஆலஞ்சியார்


No comments:

Post a Comment