எப்படி மனம் வந்தது.. போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மீது கார் ஏற்றி கொல்ல.. எத்தனை வன்மிருந்தால் இதை செய்வார்கள்.. பாஜக முதல்வர்கள் கொடூரமான மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் .. மனித உயிர் இவர்களுக்கு அத்தனை கேவலமா .. காந்தியையே சுட்டுக்கொன்ற பாவிகள் கூட்டம் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்திய ஒன்றியம் முகம் கருத்துநிற்கிறது ..
..
ஒன்றிய பிரதமர் அவர்களே
ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் ஏற்றும் கொல்லும் காணொளி அதிர்ச்சியை தரவில்லையா .. இன்னமும் அவர் அமைச்சராக தொடர்வது என்ன நியாயம் .. குறைந்தபட்சம் இரக்கம் கூட இல்லையே.. மதவெறியும் முட்டாள்தனமும் பாஜகவின் பலமென்று நிற்கிறீர்.. அறுதிப்பெரும்பான்மை எதையும் செய்யலாம் .. யாரும் கேட்ககூடாது என்பது சர்வாதிகாரத்தின் உச்சம் .. ஜனநாயகம் வீறுகொள்ளும் போது இருந்த சுவடே தெரியாமல் அழிக்கபடும் அபாயம் இருப்பதை உணரவில்லை.. பொய் பித்தலாட்டம் ஒலிபெருக்கி முன் வீராவேசம், கூச்சபடாமல் திரும்ப திரும்ப
பொய்யை சொல்லி மக்களை திசை திருப்பும் கைங்கரியம் நீண்டநாள் கைக்கொடுக்காது பிரதமரே..
உ.பி.விவசாயிகள் போராட்டத்தில் காரை ஏற்றிக்கொண்ட செயல்கண்டும் அமைதி காத்தால் செத்த பிணத்திற்கு சமம் என ராகுல் சொல்கிறார்.. பிணமாக இருக்க போகிறீரா..
..
நீண்ட போராட்டம்..
நாட்டின் முதுகெலும்பு என காந்தியார் சொன்ன விவசாயிகள் தெருவில் நிற்கிறார்கள் ..நாட்டின் பிரதமர் யார் யாரையோ பார்க்க நேரம் ஒதுக்குகிறார் .. நள்ளிரவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்கிறார் விமானத்தில் பறந்து கொண்டு பைல் பார்க்கிறார் என போட்டோகிராபரை தூங்கவிடாமல் வேலை வாங்கும் பிரதமர் .. 20 மணி நேரம் உழைப்பதாக சங்கிகள் கதையளக்கிறார்கள் ஆனால் நடுத்தெருவில் நின்று போராடும் விவசாயிகளை சந்தித்து பேச நேரமில்லை
..
நாடு கேடுகெட்டவர்களின் கையில் மதத்தை மூளையில் ஏற்றி தாண்டவமாடுகிறார்கள் பொய்களால் கட்டிய கூடு என்பதை உணருவதில்லை அதிகாரம் ஆணவம் கொள்ள செய்கிறது .. அகிம்சையை போதித்த தேசம் இன்று ஹிம்சை செய்கிறது .. அறிவுஜீவிகள் கொல்லபட்ட போதே இவர்களை விரட்டியிருக்கவேண்டும் .. கயவர்கள் கொலைகாரர்கள் மதவெறியர்கள் சாதிவெறியர்கள் கூடாராமாய் ஆட்சியாளர்கள்.. இந்திய ஒன்றியம் எதை நோக்கி செல்கிறது சகிப்புதன்மை சமநீதி எல்லாம் காணாமல் போனது .. மாட்டை காக்க காப்பகங்கள் செய்ய தயார் ஆனால் மனிதனை கொல்வோம் மதம் பெயரில் மாட்டின் பெயரில் என்றால் நீங்கள் மூளை மழுங்கியவர்கள்..
..
சர்வாதிகாரத்தை வீழ்த்த எதிரணிகள் ஒன்றிணைய வேண்டியது கட்டாயம் ..
பாசிசத்தை வேரறுக்க வேண்டியது நமது கடமை ..
நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது .. நாட்டிற்கு பாசிச வளர்க்கும் நாடகமாடும் மோடிகள் தேவைஇல்லை ..
நாசகார சக்திகளை வீழ்த்த ஸ்டாலின்களே தேவை ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment