வன்னியருக்கான 10.5% விழுக்காடு உள்இடஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தரவுகள் பெறபடாமலேயே தந்த இடஒதுக்கீடென தெளிவுபடுத்தியிருக்கிறது ..
ராமதாஸ் இந்த இடஒதுக்கீடு ரத்தாகும் என அறிவார்.. அவருக்கு வன்னியருக்கு இடஒதுக்கீடு முக்கியமல்ல பாமக கட்சியும் தன் மகனும் காணாமல் போவார்களோ என்ற அச்சம் தேர்தல் நெருங்க சில மணிநேரம் இருக்கும் போது சட்டமன்றத்தில் விவாதிக்கபடாமலேயே அவசரகதியில் அள்ளிதெளித்த கோலமாய் வந்தது தேர்தல் வெற்றிக்காக இருந்ததை கோட்டைவிட்ட கதையாக போனது ..
..
இஸ்லாமியர் உள்ஒதுக்கீடு இல்லையா என வினவுகிறார்.. ஆந்திரத்தில் அவசரமாக கொண்டுவரபட்ட இஸ்லாமியர் உள்இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோது .. பிற்படுத்தபட்டோர் ஆணயத்தின் பரிந்துரையில்லை என கூறியதை கவனமாக ஆய்ந்து கலைஞர் பெருமகன் .. முதலில் பிற்படுத்தபட்டோர் ஆணையத்தின் கருத்தை கேட்டு ஏழு விழுக்காடு முஸ்லிம்களுக்கு அவர்களுக்கு 3.5% விழுக்காடு தரலாம் ..சிறுபான்மையினருக்கு 7.5% விழுக்காடுக்குள் இருக்கவேண்டும் என்ற பரிந்துரையை ஏற்று ஜெயின் சமூகத்திற்கு 0.5% விழுக்காட்டை கிருஸ்துவர்களுக்கு 3.5% என பகிர்ந்தளித்தார் .. அவசரகோலத்தில் செய்யவில்லை .. அதை போலதான் அருந்ததியர் உள்ஒதுக்கீடும் அமைந்தது .. இவையெல்லாம் ராமதாஸ் அறிவார்.. ஆனால் அவருக்கு அரசியல் செய்ய நிலைநிறுப்பை உறுதிசெய்ய அவசரமாக இடஒதுக்கீடு அறிவிப்பு தேவைபட்டது ..
..
நீண்டகால கோரிக்கை இன்னும் பிற சமூகத்தை இணைத்து கலைஞர் 20% விழுக்காடு தந்தார் அதில் அதிகம் பலன்பெற்றதென்னவோ வன்னியர்கள் தான்.. வன்னிய இடஒதுக்கீட்டை அறிவித்த போது ராமதாஸ் பேசியதை நினைத்து பார்க்கவேண்டும் .. அதெல்லாம் மறந்திருப்பார் அரசியலுக்காக எதையும் செய்வார்.. அவர் பெற்றதாயை கூட கீழ்தரமாக பேசி அரசியல் செய்பவர் ..
..
கலைஞருக்கு தெரியும் தனியாக கேட்டால் சிக்கல் வரும் தடைகள் வரும் பிற சமூகம் பாதிக்கபடும் அவர்கள் வழக்கு தொடுப்பார்கள் .. என்பதை அறிந்து கலைஞர் தந்தார் ..
வன்னிய இடஒதுக்கீடு தந்த கலைஞரையே தூற்றியவர் இந்த ராமதாஸ் .. தன்னால் தான் கிடைத்தது என்று கட்டமைக்கமுயன்று அப்பனும் பிள்ளையும் அழுது ஆர்பார்ட்டம் செய்ததெல்லாம் வீண்போனது ..
..
திட்டமிடாமல் சரியான அணுகுமுறையில்லாமல் தரகுகள் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடப்பாடி செய்தது அறிவிலிகளின் கூத்தாய் போனது .. ஸ்டாலின் மீட்டுதரவேண்டும் என்கிறார் .. நிச்சயம் நடக்கும் அது #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் செய்ததாய் இருக்கும் ..
..
நல்லோர் கையில் நாடு
நலமே பயக்கும்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment