Sunday, December 12, 2021

கருத்து சுதந்திரம் 
ஒருவர் வாய்க்குவந்தபடி பேசுவதும் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளிவீசுவதும் தனிநபர்களை கேவலபடுத்துவதும் தொடர்ந்து செயல்படும்போது அவர் கண்காணிக்கபடுகிறார் .. சரியான நேரத்தில் கைதுநடவடிக்கை என்றவுடன் பதறுகிறார்கள் ..
..
எது கருத்துசுதந்திரம் 
திமுக தேசதுரோக கட்சியென தொடர்ந்து குற்றம்சாட்டுவது தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பா..? என கேள்வி எழுப்புவது ஸ்டாலினை கடுமையாக விமர்சிப்பதென தொடர்ந்து பேசிவந்த மாரிதாஸ் 
முப்படைத்தளபதி மரணம் குறித்து சந்தேகம் என்ற பெயரில் ட்விட் செய்ய எலி பொறியில் மாட்டிக்கொண்டது ..
..
விமர்சனம் செய்வதற்குமுன் அதற்கான தகுதியை பெற்றிருக்கவேண்டும்.. "முற்போக்கு" பார்ப்பனர்கள் கூட மாரிதாஸின் வீடியோக்களை தொடர்ந்து இரண்டு நிமிடம் பார்க்க முடியாது என எழுதுகிறார்கள் .. அவரது பேச்சு செயலும் கழிசடைத்தனம் .. ஆனாலும் திமுக இதுவரை பொறுமைகாத்ததே தவறென்று நினைக்கிறேன் ..
..
கிஷோர் கல்யாணராமனுக்கு பதறாத பாஜக இப்போது பதறுவதன் நோக்கம் புரிகிறது மாரிதாஸை இயக்கியவர்கள் "குரு" உச்சத்திலிருந்தாலும் வளையத்திற்குள் வரநேரிடும் என அஞ்சுவதும் தொடர் கைதுகள் சரியான பாதையில் சென்றால் பாசிசக் கூட்டம் சிதறும், எண்ணிய எண்ணங்கள் ஈடேறாமல் போகுமென அறிவார்கள் ..அதனால் தான் பதற்றம் அதிகரிக்கிறது 
..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அரசு காத்திருந்து கொத்தும், ஆடவிட்டு அடிபலமாக  விழவேண்டுமென அமைதிகாக்கிறது .. இன்று கருத்து சுதந்திரம் என பொங்குகிறவர்கள் விமர்சனம் என்ற பெயரில் பொய்களை அள்ளிவீசும் போது எங்கே போனார்கள் .. சாக்கடைநீரை வீசும் போது நாறும் என அறியவில்லையா ..
இன்னமும் இருக்கிறது .. மதவெறி சாதிவெறியை தூண்டி, குற்றவாளிகளை ரௌடிகளை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய கலவரம் செய்யவேண்டுமென திட்டமிடுவதும் அதை திமுக இடதுகை கொண்டு கையாள்வதும் நாம் காண்கிறோம் ..
..
எங்க பொறுமையை சோதிக்கவேணாம் என்கிறார் பாஜகவின் அண்ணாமலை .. 
"எங்க சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா " எனும் வடிவேலு காமெடி நினைவிற்கு வருகிறது ..
ஆளுநரை பார்த்தாலும் வேலைக்கு ஆகாது .. அதுசரி பாஜக உறுப்பினரே அல்லாத  மாரிதாஸுக்காக பதறுகிறவர் பாஜக உறுப்பினரான கல்யாணராமனுக்கு இவ்வளவு வேகம் காட்டவில்லையே.. புரிகிறதா..
..
கடைசியாக..
பாசிசத்தை பாஜகவை எதிர்த்து பேசியதற்காக ஆனந்த டெல்டும்பே, கவுதம்,
நெல்லை கண்ணன் போன்றவர்களை சிறையில் அடைத்தும், பாஜக சித்தாந்தத்தை எதிர்த்தார்கள் என்பதற்காக கௌரிலங்கே கல்புர்கி, பன்சாரே போன்ற அறிஞர்கள் கொன்ற கூட்டம் "கருத்து சுதந்திரம்" பேசுவது தான் கொடுமை.. 
உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி அவர்கள்.. 
ஒரு முதலமைச்சரால் எவ்வளவு  அதைவிட அதிகமாக தமிழ்நாடு முதலமைச்சர் உழைக்கிறார்  அவரை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காதீர்கள்"  என்றார் ..
ஆனால் 
நாங்கள் விமர்சனம் செய்வதை கூட வரவேற்கிறோம், குறைகூறவில்லை ஆனால் அவதூறை பரப்பாதீர்கள் ..  
மீறும் போது  கைது என
கதறவேண்டிவரும் .. சரியான நடவடிக்கையை வரவேற்போம்.. 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment