துரை..
திமுக பொதுச் செயலாளராக உயர்ந்து நிற்கும் துரைமுருகன் ..
நாவன்மையும் பேச்சில் நளினமும் நையாண்டியோடு காய்நகர்த்தும் அழகும் கலைஞரோடு இரண்டறகலந்த தொண்டனாய் கழகத்தின் போர்வீரனாய் கலைஞரின் நடுவிரலாய் கழகம் காத்த தொண்டன் ..
..
50 ஆண்டுகள் சட்டமன்றத்தில் மெல்லிசையாய்,பேரிறைச்சலோடு கொடுங்காற்றாய், தீப்பொறியாய்
ஆளும் கட்சியை நடுநடுங்கவைத்த சிம்மகுரலாய் திகழ்ந்தவர் .. இவர்கள் இருந்தால் என மூவரை கண்டு பயந்த வரலாறு எம்ஜிஆருக்கு உண்டு அந்த மூவரில் ஒருவர் .. தெளிவோடு ஆதாரத்தை எடுத்து வைத்து இவர் ஆற்றிய உரைவீச்சுகள் எம்ஜிஆரை கிடுகிடுக்க வைத்தது .. அண்ணாவை ஏற்று அரசியலை தொடங்கிய துரைமுருகன் கலைஞரின் நம்பிக்கைக்குரியவராய் கடைசிவரை இருந்தார் ..தனக்கு கல்லூரியில் படிக்க உதவிய எம்ஜிஆர் அழைத்தும் போகாதவர் .. இவர் விருப்பட்டிருந்தால் எம்ஜிஆரின் வலதாக முடியும் ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியோடு என் தலைவர் கலைஞர்தான் உங்கள் மீது மரியாதையும் நன்றியும் உண்டு அதற்காக நான் ஏற்ற கொள்கையிலிருந்து மாறி தலைவருக்கு துரோகம் செய்ய முடியாதென உறுதியோடு சொன்னவர்
..
திரு.வைகோ ஒரு நள்ளிரவில் கன்னியாகுமரி கடற்கரையில் அமர்ந்து இவரோடும் மூத்த தலைவர் ஆற்காட்டாரோடும் பேசிக்கொண்டிருந்தபோது கலைஞருக்கு பிறகு நீர்தான் என பேச்சு வர .. அதற்கு வைகோ பெரியார் போல 95 வயதுவரை வாழ்ந்தால் என கேட்க நிசப்தமாய் அந்த இரவு விடிந்தது.. அதறிந்த கலைஞர் ஒரு முறை அந்த இருவரில் ஒருவர் இரும்புபெட்டி இன்னொருவர் கண்ணாடி பெட்டி என கூறியதை நினைவுகூற வேண்டியிருக்கிறது .. கொள்கையில் எஃகு போன்ற உறுதி துரைக்குண்டு ..
..
நகைச்சுவை ததும்ப பேசும் ஆற்றல் உண்டு .. பாஜகவோடு சிலநேரம் கனிவு காட்ட நினைத்ததும் அது தனக்கே எதிராக வருவதை அறிந்து மாற்றிக்கொண்டதும் உண்டு எப்போதும் கரைசேர்க்கும் காட்பாடி இம்முறை தள்ளாட வைத்ததின் "பொருள்" அறிந்தவர்
சஞ்சலமில்லாத கொள்கையே கரைசேர்க்கும் என காலம் உணர்த்தியது .. கலைஞரின் இறுதிகாலங்களில் கரத்தை பிடித்துக்கொண்டே பயணித்தவர் இன்று கழகத்தின் உயர்பதவியில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறது ..
1971ல் முதல்முதலில் தேர்தலில் நிற்க பணமில்லை என்றவுடன் தயாளு அம்மாளின் தயாளமனம் ₹10000 தந்துதவியதும், இன்று கழகத்தின் முக்கிய தலைவராக உயர்ந்து நிற்பதை காணும் போது மனம் மகிழ்கிறது ..
..
திராவிட இயக்க வரலாற்றில் இடம்பெறும் தலைவர்களில் ஒருவர் துரைமுருகன் அய்யா அவர்கள் .. கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தால் உயரத்திற்கு வரலாம் என்பதற்கும்
துரையின் அரசியல் பயணம் உதாரணம். வெற்றி தோல்வியல்ல இயக்கத்தின் வலிமை தொண்டர்களின் பலத்தில் என்பதை உணர்ந்து திராவிட சித்தாந்தத்தை உயர்த்திபிடித்து திராவிட இயக்கத்தின் நான்காம் தலைவனோடு இணைந்து செயலாற்றும் துரைமுருகன் அய்யாவிற்கு வாழ்த்துகள்..
தலைவர் தளபதியார்,
நான் கலைஞர் பேராசிரியர் வரிசையில் பார்க்கிறேன் என்கிறார் இதைவிட பேறு இல்லை..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment