Friday, August 31, 2018
நாட்டின் கவுரவம்
ரூபாய் என்பது ஒரு தேசத்தின் நாணயம் மட்டும் அல்ல.
அது ஒரு நாட்டின் #கவுரவம். நாணயத்தின் மதிப்பு விழ ..விழ, நாட்டின் கவுரவமும் வீழ்கிறது
எங்கோ யாரோ பேசியது போல் தெரிகிறதா .. இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர்
சுஷ்மா சுவராஜ் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்..
இன்றைய நிலை மிக பரிதாபகரமாக இருக்கிறது..
..
முட்டாள்கள் கையில் நாடு சென்றதன் விளைவு தேசத்தின் மதிப்பும் வெகு தாழே போய்க்கொண்டிருக்கிறது..
ஒற்றை இரவில் ₹1000..₹500 ஐ செல்லாதாக்கிய போது சில அறிவாளிகள்..? சபாஷ் புதிய இந்தியா பிறந்ததென்றும் .. சில மோடி ரசிகர்கள் ஆஹா இவரல்லவா இரும்புமனிதர்
ஒரே இரவிவ் கருப்புபணத்தை ஒழித்த கர்வயோகி என்றெல்லாம் கதைத்தனர்.. மக்கள் நடுத்தெருவில் நின்று தான் உழைத்து சிறுக சிறுக சேமித்ததை கூட எடுக்கமுடியாமல் வழியும் கண்ணீரோடு நின்ற போதும் .. ஐம்பது நாட்கள் நாட்டிற்காக பொறுத்துக்கொள்ள கூடாதா.. நாட்டை காக்க ராணுவவீரன் எல்லையில் மாத கணக்கில் நிற்கிறானே என்று ராணுவத்தில் தன் இனத்தையே சேர்க்காதவனெல்லாம் புத்தி சொன்னான்..
தன் உடல்நலிவிற்றிருந்த போதும் .. திரு.மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திற்கு வந்து தவறான முடிவை பிரதமர் எடுத்துவிட்டார் நாட்டின் பொருளாதாரம் அகலபாதாளத்திற்கு சென்றுவிடும் சிறுதொழில்கள் முடங்கும் என துள்ளியமாய் கணித்து .. கடைசியில் நாட்டுமக்கள் மாண்டுபோவார்களென்றார் ..
ஆம் எத்தனை உயிர்கள் போனது ..எவ்வளவுபேர் உடைமைகளை (தொழில்களை)இழந்து நடுத்தெருவிற்கு வந்தார்கள்
..
செல்லாதென்று அறிவிக்கப்பட்ட ரூபாய்களில் 99.3 விழுக்காடு நோட்டுகள் வங்கிக்கே திரும்ப வந்துவிட்டது .. அதாவது ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களின் கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற துணைபோனதுதான் நாம் கண்டது ..
முதன்முறையாக ஒரு முட்டாளை பிரதமராக தேர்வு செய்தமைக்காக உலகமே நம்மை பார்த்து சிரிக்கிறது.. 13,000 கோடி திரும்பவராத கருப்புபணத்திற்காக பணத்திற்காக 2,00,000 கோடி செலவு செய்த ஞான கிறுக்கனை நாம் பெற்றிருக்கிறோம்.. பொய் பேச்சை நம்பி அறிவாளிகளை வீட்டுகனுப்பியதற்கு நாடு
அவதிபடுகிறது ..
..
நாடு ..மதம் வர்ணம் மூடம் பேசுவோரிடம் சிக்கி
தன் முகத்தை இழந்து நிற்கிறது .. பாசிசத்தின் கோர பிடியில் தன் பன்முகத்தன்மையை மெல்ல இழக்கிறது இனியும் இவர்களை அனுமதித்தால்
இந்தியா சிதறுண்டு போகும் .. நாசக்காரர்கள் கையிலிருந்து இந்திய தேசத்தை காப்போம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment