Sunday, August 19, 2018
தலைவனாய் ..வா..
#தளபதியார்..
..
எளிதில்
எதுவும்
கிடைத்துவிடாது
அப்படியெனில்
இன்பம் இராது..
..
நீ..
செதுக்கப்பட்டவன்
ஒவ்வொரு முறையும்
எதிரிகள் தோற்கின்றனர்..
உன்னிடம்
..
அண்ணனை கொம்பு சீவி
அழகுபார்த்து
அய்யகோ..
அது நடக்காது
போனதால்..
வேறுவழியை
கையிலெடுக்கிறார்கள்..
..
பாசிசத்தோடு சேர்ந்தால் தான்
வெற்றிகிட்டுமாம்.
விவரகேடுகள்
ஊகவியலாளராய்
முகம்காட்டி
முனகுகிறார்கள்..
அறைக்குள் அமர்ந்துகொண்டு
ஆருடம் சொல்கிறார்கள்..
விளிம்புநிலை மக்கள் தொடங்கி
விற்பன்னர்கள் வரை
உன் வரவை எதிர்பார்பதறியாமல்..
..
உன்
ஒவ்வொர் அசைவும்
எதிரிகளை பதறவைக்கிறது..
உன் இருப்பு
தமிழனின் கையிருப்பு
தொலைத்துவிட்டால்
தேடுவது கடினமென அறிவார்கள்
பகைவரின் பகட்டுமொழியை
காதோர்க்க தயாரில்லை
இங்கே யாரும்..
..
உன்..
செயல்பாடுகள்
அமைதியாய் எதிரியை வீழ்த்தும் அழகு
மக்களை ஈர்க்கிறது..
இயக்கத்தின்
சுழற்சி.. நீ
..
மனிதனின் வெற்றி
அவன் செயல்களால்
நீ..
செயல் வீரன்..
வீரனாய் ..
தளபதியாய் உயர்ந்து
செயல் தலைவரானாய்..
இனி..
தலைவன்..
இயக்கத்தின்
நான்காம் தலைமுறையை
வழிநடத்தும் தலைவன்..
..
காலம் கனிந்து..
கையில் தானாய் வந்தது
உன் நிழலில்
இயக்கம் ...
எப்போதும் போல்
இயங்கும்..
..
உன் வாழ்வில் ..
நீ பெற்றதெல்லாம்..
போராடி பெற்றது..
..
தமிழகம்
உன்னை
உற்று நோக்குகிறது
ஆன்றோர்..அறிவில்
சான்றோர்...
உன்னை அரவணைக்க
காத்திருக்கிறார்கள்..
..
அடிமைகளின்
அறிவிலிகளின்
விவரகேடை
மடைமையை கண்டு
மக்கள் நொந்துபோனர்
கரைசேர ..
உன் வரவிற்காக
தமிழகமே
காத்திருக்கிறார்கள்
..
மாபெரும்
மக்கள் சபையில்
மதிப்புமிக்கோர்
#மகிழ்ச்சி கொள்கிறார்கள்
கொள்கைப் பிழைகள்
உன் முன்..
குலைந்து போகிறார்கள்
..
உன்னை
வீழ்த்தநினைத்தோர்..
வீழ்ந்து போகிறார்கள்..
நீ..
எளிமையானவன்..
யதார்தமானவன்..
இயல்பானவன்..
எல்லோர்..
இதயம் கவர்ந்தவன்..
ஆனாலும்
கொள்கையில்..
சுயமரியாதையில்
இயக்கத்தை..
கட்டிகாப்பதில்
#எஃகு_மனிதன்..நீ..
..
இன்னும் இருக்கிறது
உயரம்..உனக்காக
உச்சத்தை தொடும்வரை
போராடு..
பெறு..
அதுவரை..
போராடு.. போராடு..
அடையும் வரை.. போராடு
..
தலைவனாய் காண
தவமிருக்கிறது தமிழகம்..
..
வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment