Thursday, August 16, 2018
திமுகவை கண்டஞ்சும்.. பாஜக
பிஜேபிகாரர்களுக்கு திமுக என்றால் அழகிரி தான் ஞாபகம் வருகிறதாம்.. வராதா பின்னே என்னதான் ஆடினாலும் கட்சியில் சிறு பிளவைகூட ஏற்படுத்த முடியாது .. காரணம் கலைஞரே நீக்கியவர் என்ற பழியொன்றே போதும் தவறானவரை தயார் செய்திருக்கிறீர்கள் அவசரகுடுக்கை ஆழ்ந்த அரசியல் அறிவின்மை ..பேராசை அரசியலின் அடிப்படை கூட தெரியாத பேதமை இதுதான் அழகிரி..
..
பாசிசம் திராவிடத்தின் மீதான தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக்கொண்டுதானிருக்கும்.. தங்களின் அடித்தளத்தை அசைக்கிற எதிர்கேள்வி கேட்டு பொய் புளுகு புரட்டு பித்தாலாட்டத்தை தோலுரித்து காட்டி ஆரியத்தை முகத்தை கிழித்தெறிகிற திராவிடச் சித்தாந்தத்தை அது அரசியல் அதிகாரம் பெற்று நிமிர்ந்து நிற்பதை கண்டு எரிச்சலால் தொடர்ந்து சதிகளோடு போர்தொடுத்து தோற்றுக்கொண்டே இருக்கும் ஆரியபடை ..
திராவிடம் அதிகாரத்தில் ஏறிய உடனேயே மெல்ல சிரித்து உள்ளுக்குள் பகையை வளர்க்க தொடங்கியது .. அண்ணா மறைவிக்கு பிறகு நாவலரை காட்டி உடைக்கலாமென்ற நினைப்பு மண்ணை கவ்வ.. மெல்ல ஊடுறுவி மகோராவை கொம்பு சீவி கட்சியை உடைத்தது சில கவர்ச்சி மாயையில் சிக்குண்ட தமிழன் நிழலை நிஜமென நம்பி வீழ்ந்தான்..பிறகும் திராவிடம் திரும்ப எழ தொடங்கி.. வீறுகொண்ட மோதல் போக்கை கண்டஞ்சி.. மெல்ல பகை வளர்க்கிறாரென கொல்ல பார்க்கிறானென உளவு செய்தியை கசியவிட்டு.. பதவி தலைமை ஆசைகாட்டி போர்வாளை பிடிங்கியது அப்போதும் தனிமைபடுத்த முடியவில்லை..
காரணம் இங்கே கொள்கைபிடிப்புள்ளவனும் இனப்பற்றாளனுமே அதிகம்..அதனால் தான் மக்களின் அவசரமுடிவுகளாலும்.. 'நோவாலும் சாவாலும் சட்டென்று இளகி எம்மை புறக்கணித்து தூர நிறுத்தினாலும் நம்பிக்கைகொண்டிருந்தான் நம் வாழ்வில் திமுகதான் ஒளியேற்றும் என உறுதியாய் நம்பினான்... இன்றைக்கு இந்தியாவை செதுக்கியவர்களில் திராவிடத்தலைவர்களின் பங்கைப்பற்றியெல்லாம் பேச தொடங்கியிருக்கிறார்களே அது திராவிடச் சிந்தையின் வெற்றி..
..
திமுக கண்டு இந்தளவு பதறுகிறார்களே ஏன் தெரியுமா.. திமுக என்பது ஆரிய கருத்தியலுக்கு எதிரானது .. ஆரியர்களின் வளர்ச்சிக்கு எதிரானது காலகாலமாய் வர்ணத்தை சொல்லி பிரித்து ..அவனை அடித்தமர்த்தி சுரண்டி பிழைத்தது நடக்காமல் போனதின் ஆத்திரம் .. திமுகவை தி.கவை கண்டால் எரிகிறான்.. பதறுகிறான்.. திமுகவை வீழ்த்தினால் மட்டுமே அடிமைகளை கொண்டு ஆட்சி நடத்தி உயர்பதவிகளை பார்பனர்கள் கொண்டு நிரப்பமுடியும் .. திமுக
சமூகநீதிக்காக போராடுகிற இயக்கம் பெரியார் காட்டிய பாதையில் பேராசான் அண்ணாவும் கலைஞரும் வழிநடத்தியதை வீழ்த்த எண்ணுகிறார்கள்..
..
தளபதியிடம் கழகம் வருவதை ஆரியர்கள் விரும்பாததிலிருந்தே.. திராவிட காப்பாளன் தளபதியென்று உறுதியாகிறது..
தளபதியின் கரம் கோர்ப்போம் ஆரியபகையை வீழ்த்துவோம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment