Wednesday, August 15, 2018
தளபதியார்
திமுகவில் என்ன நடக்கிறதென்று நம்மைவிட எதிரிகளுக்கு அதிக அக்கறை..
நான் கலைஞரால் வளர்த்தெடுக்கபட்டவன்
சலசலப்பிற்கு அஞ்சமாட்டேன் கட்சியின் உள்ளும் புறமும் உருவாக்கபடும் சவால்களை வென்று காட்டுவேன்
தந்தை பெரியார் வழியில் பேரறிஞர் அண்ணா காட்டிய நெறியில் கலைஞர் காட்டிய வழியில் தொடர்ந்து நடைபோடுவோம் தொய்வின்றி..
தளபதி..
..
திமுகவிற்கு மு.க.அழகிரி ஆற்றிய பங்கு அதிகம் ..திரு.பொன்.ராதா
திமுகவை யாரும் உடைக்க வேண்டியதில்லை அதுதானாக உடைத்துவிடும் ..தமிழிசை..
மானமிகு சுப்புலெட்சுமி ஜெகதீசன் சொல்வதைப்போல பாஜக திமுகவை உடைப்பதற்கு முயற்சிக்கிறதென்பது இங்கு எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர்களின்..?
எண்ணம் ஈடேறாது.. காரணம் வரும்முன் காப்போமென்ற கிழவன் ..இதையெல்லாம் எதிர்பார்த்துதான் தளபதியை செதுக்கி தந்துவிட்டு போயிருக்கிறான்.. ஆரிய சூழ்ச்சியை அறிந்து பகைவரின் சூதறிந்து அதை எப்படி வெல்லதென்று பயிற்சி தந்துவிட்டுதான் பிரிந்திருக்கிறான்.. திராவிடக் கிழவன்... பாவம் தமிழிசையையும் ராதாவையும் விட்டு கதைப்பதை நிறுத்துங்கள்..
..
ஈரோட்டு பெருங்கிழவனின் அடியொற்றி.. அண்ணாவும் கலைஞரும் அமைத்த பாதை
தமிழர் நலனுக்கானது சில நேரம் சில குப்பைகள் வழியில் விழுந்தாலும் அதையெல்லாம் கடந்து .. திராவிட பாதையை சரி செய்துகொண்டே பயணிப்போம்.. தமிழகத்தில் பார்பனியத்தை காலூன்ற விடுவதில்லை என போர்முரசு கொட்டி எம் தளபதி படை நடத்த தயார்.. காவிகள் கூட்டத்தை கயவர்கள் தம்மை ..,காட்டி கொடுக்கும் துரோக கும்பலை வீழித்தி ..சிரித்துபேசி சங்கறுக்க நினைத்தவர்களை அடையாளம் கண்டு நேருக்கு நேர் முகத்திலேயே நாங்களும் வருவோம் என அச்சமூட்டி கலைஞரின் வார்ப்பு என தைரியமாய் நின்றாடும் எம் தளபதி.. எதிரிகளே நேருக்கு நேர் மோத திராணியற்று .. சொந்தத்தை பகையாக்கி சூழ்ச்சியெனும் வலைவிரித்து திராவிடத்தை வீழ்த்த நினைத்தால் பாவம் இருக்குமிடம் தெரியாமல் புதைந்து போவீர்..
கலைஞரல்ல தளபதி.. கலைஞரைப்போல்
கருணையின் உருவாய் பகையையும் மன்னிக்கும் பெரும் தயாளம் எமக்கில்லை ..
மன்னித்து மன்னித்து வளரவிட .. அத்தனை புனிதரில்லை நாங்கள் .. எதிரிகளே எச்சரிக்கை
மோடியின் முகத்திற்கெதிரேயே செய்ததற்கு நன்றி ..பார்த்துக்கொள்கிறோமென பேச எமக்கு ஈரோட்டு தைரியம் உண்டு .. பக்குவபட்டு நிற்பது மக்கள் சேவைக்கே தவிர .. எம்மை புறமிருந்து தாக்க நினைக்கும் கோழையை மன்னிப்பதற்கல்ல.. இனி பார்க்கதான் போகிறீர்
..
தமிழக நலனுக்கெதிராக தமிழ் மக்களின் உரிமைக்கெதிராக அடிமைகளை வைத்து பார்ப்பனியம் குளிர்காய்வதை தடுத்திட..
எமது உரிமைக்காக சமூக நீதிக்காக எம் மண்ணில் காவிகளின் நிழல்கூட படியாதவாறு பார்த்து கொள்ள..
பெருங்கிழவன் பேராசான் பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வகுத்த தந்த பாதையில் பயணிப்போம் தளபதியின் பின்னால்..
எதிரிகளே ஓடியொளிந்துக் கொள்ளுங்கள்..
..
தளபதிபடை_தரணியாளும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment