Friday, August 24, 2018

கலைஞர் நினைவேந்தல்

கலைஞர் நினைவேந்தல்.. திமுகழகம் சார்பில் நத்தப்படும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இந்திய அரசியல்கட்சி தலைவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்... பாஜக தலைலர் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து சிலர் கோவபடுகிறார்கள் அவர்களின் கோபத்தை மதிக்கிறோம் .. இந்தியளவில் அரசியல்கட்சியை சேர்ந்தவர்களை அழைக்கும் போது அகில இந்திய காங்கிரஸ்.. மா.கம்யூனிஸ்ட் இந்திய கம்யூ. திரிணாமல் காங்கிரஸ் RJD .. .. என பல்வேறு இந்திய தலைவர்களை அழைக்கபடுகிறார்கள்.. கொள்கை எதிரிகளை எதிர்மறை கருத்தாளர்களை .. இன பகைவர்கள் என அனைத்துதரப்பினரும் பங்கேற்க வேண்டுமென்பதால் .. கட்சிமாச்சரியம் தாண்டி அழைக்கபடுகிறார்கள்.. .. பேரறிஞர் அண்ணாவிற்கு நினைவாஞ்சலி செலுத்தும்போது .. அண்ணாவின் தலைவர் பெரியார் மட்டுமல்ல ராஜகோபாலச்சாரியையும் இந்திராவையும் அழைத்து நடத்தியதை நினைவுகூறவேண்டியிருக்கிறது.. மாற்றுகட்சி தலைவர்களை அழைத்து .. மறைந்த தலைவரின் புகழ்பாட வைப்பது நல்ல நாகரீகம்.. அது அரசியலில் வினையாற்றாமல் இருக்கவேண்டும் .. பாஜகவை எக்காரணம் கொண்டும் பாஜகவோடு கூட்டணி இல்லையென்ற தளபதியின் உறுதிமொழியை நம்புவோம்.. .. கலைஞர் என்ற அரசியல் மேதையை குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவைக்கமுடியாது அவரது அரசியல் ஆளுமை தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் படிக்கபடவேண்டும் பாடமாக்கப்பட வேண்டும் .. தமிழக தலைவர் என்ற வட்டத்தை உடைத்து இந்திய பேரளுமை என விரித்து புகழ்பரப்ப .. உலகின் இவரைப்போல பல்துறைசார்ந்த வல்லுமைபடைத்த திறமையான தலைவர் இல்லையென்ற நிலையை எடுத்தியம்புவது நமது கடமையாகும் .. உலகின் தலைசிறந்த அரசியல் ஆளுமைகளில் ஒருவரென்ற பறைசாற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு பயன்படவேண்டும்.. வாழும் காலம்வரை கருத்துசுதந்திரத்தை காத்துநின்றவர் கலைஞர் பெருமகன்.. எதிரிகளும் பகைவர்களும் ஏன் துரோகிகளும் பேசி புகழ இந்த அமர்வு வழி செய்யும் ... .. வரட்டும் வந்து கலைஞர் புகழ்பாடட்டும்.. தேர்தல் அரசியலில் பாசிசசத்தை.. இந்தியாவின் ஈரத்தை உறிஞ்சும் காவிய சிந்தனையை.. சமூகநீதிக்கெதிராக சதிசெய்யும் பார்பனீயத்தை.. தமிழர்நலன்களை அடகுவைக்கும் காவுகேட்கும் துரோக கும்பலை வீழ்த்துவோம் அதில் சமரசமே இல்லை.. தளபதி அவர்கள் சொன்னதைப்போல இனி.. பாஜகவோடு எப்போதும் உறவில்லை.. இனி எந்தகாலத்திலும் பாஜகவோடு கூட்டணி இல்லை.. நினைவேந்தலுக்கு பிஜேபியிலிருந்து ஒருவர் வருகிறார் அவ்வளவுதான்.. .. தளபதியை நம்புவோம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment