Thursday, August 9, 2018
யாம் எந்தையும் இலமே
யாம் எந்தையும் இலமே
கலைஞர்..
தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர் அல்லது சிறந்த தலைவர் என்பதைவிட .. தமிழர்களின் தந்தை என்பதே மிகச்சரியாகும் மக்களின் நலன் மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாய் கொண்டு ஒரு தகப்பனைப்போல எல்லோருக்கும் வேண்டியதை அவரவர் விரும்பம் என்பதைவிட எது அவர்களுக்கு தேவையென உணர்ந்து அதை செய்துகாட்டியவர்..
..
இடஒதுக்கீடு கேட்டு வன்னியர்கள் போராடுகிறார்கள் அவர்களை அழைத்து தனியாக கேட்டால் கொடுப்பது இயலாமல் போகும் பிற்படுத்தபட்டோர் ஆணைய அனுமதி கிடைக்காதென தெளிவுபடுத்தி மற்ற சில சமுதாயத்தவரையும் இணைத்து ஒதுக்கீடு வழங்கியவர்.. இஸ்லாமியர் இடஒதுக்கீடு ஆந்திரா அரசு சட்டத்தை ஹைதராபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்கிறது.. ஆனால் தமிழகத்தில் அதை வெற்றிகரமாக நடப்பிலாக்கினார்.. ஆம் முதலில் பிற்படுத்தபட்டோர் ஆணையத்திடம் சிறுபான்மையினருக்கு (இஸ்லாம் கிருஸ்துவமே ஜெயின்) எவ்வளவு வழங்கலாமென கேட்கிறார் அந்த ஆணையம் ..சிறுபான்மையினருக்கு 7.5 வரை வழங்கலாமென கூறுகிறது.. கலைஞர் அதில் அரை விழுக்காடை குறைத்துக்கொண்டு 7 விழுக்காடு வழங்குகிறார் வழக்கம் போல் பார்பனர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றம் போகிறார்கள்.. ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிகாட்டி தடை கேட்கிறார்கள்.. ஆனால் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்ததோடு உறுதி செய்கிறது முறையாக பிற்படுத்தபட்டோர் ஆணைய பரிந்துரையைதான் திமுக அரசு செய்திருக்கிறதென்று குறிப்பை தருகிறது..
அப்பனுக்கு தானே தெரியும் ..
..
இந்தியாவிலேயே குடிசைமாற்று வாரியம் அமைக்கிறார்.. இருக்க குடில் இல்லாதவன் ..
ஒழுகும் குடிலில் இருப்பவனை உயர்த்தி பிடிக்கிறார்..
கிராமபுற மாணவர்களின் கல்வி விழுக்காடு மிக குறைவாக இருப்பதுகண்டு அதிலும் உயர்கல்வியில் மிக குறைவு என்றறிருந்து..
முதல்பட்டதாரிக்கு உயர்கல்வி இலவசமென்கிறார்.. விவசாயிகள் படும் துயரம் கண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக இலவச மின்சாரம் தருகிறார்.. மத்திய தொகுப்பில் பிற்படுத்தபட்டோருக்கு 27 விழுக்காடு தரலாமென மண்டல் பரிந்துரையை பார்பனர் அழுத்தம் காரணமாக கிடப்பில் போடுகிறது .. காலம்பார்த்து வி.பி.சிங் பிரதமரானதும் அமல்படுத்த கோரிக்கை வைத்து வெற்றியும் பெறுகிறார்.. பாஜக மாணவர்களை தூண்டி தீக்குளிக்க எல்லாம் செய்தது கடைசிவரை நிறைவேற்ற வேண்டுமென்ற சொல்லி சாதித்தார்.. அதற்காக அவரை அழைத்து சென்னையில் விழா எடுத்து நன்றி காட்டினார்.. சமச்சீர் கல்வி ..பெண்களுக்கு சொத்தில் உரிமை..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
..
மக்களுக்கு எதை செய்யவேண்டுமென்று அறிந்திருந்து செயல்படுத்தியவர்.. அதேபோல
தமிழ் மக்களின் உரிமை மீதான தாக்குதலை தனியொருவராக இருந்து முறியடித்தநர். தமிழர் உரிமையை பார்பனீயம் பறிக்க முயலும் போதெல்லாம் அரணாக இருந்து தடுத்தவர்.. ஆரிய பகை அஞ்சிய பேராளுமை ..கலைஞர்..
ஒரு தகப்பனைப்போல தமிழ் சமூகத்தை காத்து நின்ற சாமி..
நல்ல தகப்பனாய் இந்த தமிழ் சமூகத்தை காத்துநின்ற தகப்பன்சாமி கலைஞர்
தந்தையை இழந்து நிற்கிறது தமிழ் சமூகமே..
..
யாம் எந்தையும் இலமே..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment