Wednesday, August 1, 2018
எழுந்து..வா..தலைவா
எழுந்துவா தலைவா..
காவேரி மருத்துவமனையில் திரண்டிருந்த கூட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் ஒ்வொரு மூலையிலும் இந்த வார்த்தை ஓங்கி ஒலித்தே கொண்டே இருக்கிறது..
எழுந்து வா தலைவா..
..
இந்த மனிதரை விமர்சித்தவர்கள்.. அரைகுறை தெளிவோடு கோபம் கொண்டவர்கள் புரிதலின் பிழையாய் நின்றவர்கள் .. கடந்த ஐந்து தினங்களாய் வியந்து நிற்கிறார்கள் .. இந்த மனிதரையா நாம் தவறாக பிரிந்துகொண்டு ஏசினோம் என்று ஒரு வித தவிப்போடு நிற்கிறார்கள்... ஆம் சாதனைகளை மட்டுமல்ல இவர் பயணித்த பாதையில் யார் பயணித்திருந்தாலும் இடறியிருப்பார்கள்.. இருக்குமிடமே தெரியாமல் புதையுண்டிருப்பார்கள் .. எத்தனை சூழ்ச்சிகள் கூட இருந்தவனே ..நண்பனாய் நம்பியவனே .. ஆரிய சூழ்ச்சியில் விழுந்து வளர்த்தகடா மார்பில் பாய்ந்த கதையாய் போனதும் ..கூட இருந்தவர்கள் முதுகில் குத்தியபோதும்.. பொய்வழக்குகள் .. அதுவும் மக்களை நம்பவைத்து தோல்வியை தந்ததும் .. எழவே முடியாதவாறு ஊழல் குற்றசாட்டை சுமத்தி வழக்குகளால் அலைகழித்த போதும் சறுக்கிவிடாமல் நிச்சயம் ஒருநாள் மக்கள் உணர்வர் என்ற நம்பிக்கையோடு தம்மோடு பயணித்தவர்களை அரவணைத்து ..அண்ணா கண்ட கட்சியை கட்டிகாத்து ஆலமர விருட்சமாய் நிற்கிறார்..
..
அப்பப்பா எத்தனை மனஉளைச்சல் சொந்த மகனை மிசாவில் கைதுசெய்து சிறையில் அடைத்தபோதும் மகளை 2ஜி வழக்கில் கைது செய்து திகாரில் அடைத்தபோதும் அறம் வெல்லும் என்று உண்மை எப்போதும் தோற்காதென்ற நம்பிக்கையோடு கழகத்தை காத்துநின்றவர்.. தமிழர்கள் வாழ்வில் இன்றைக்கு கொஞ்சமேனும் மெச்சபட்டதுண்டெனில் அது கலைஞரின் சிந்தனையில் உதித்தது.. இவரின் தொலைநோக்கு பார்வை இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாய் இருப்பதை இப்போதுதான் உணர தொடங்குகிறார்கள்.. எப்படி சாத்தியமாயிற்றென்று ஆச்சர்யமாய்(வியப்ப்போடு) பார்க்கிறார்கள் ஒரு அரசியல் தலைவன் எப்படி செயலாற்றவேண்டுமென்று கலைஞரை கண்டுபடிக்கவேண்டும் .. குடும்பமா கட்சியா என்றால் கட்சியே பிரதானமென்ற சூத்திரம் அறிந்திருந்தல் ..எழுந்ததிலிருந்து உறங்க செல்லும் வரை இயக்கத்தைப்பற்றிய சிந்தனை.. மக்களுக்கு என்ன செய்யலாம் எதை விரைந்து முடிக்கவேண்டும் எதுவெல்லாம் பாதகமாகும் எதை செய்யகூடாதென்ற விவரத்தோடு மிக தெளிவான அரசியல்பாதையை வகுத்து பின்தொடர்ந்து வருகிறவர்களுக்கு தெளிவை தந்தவர் ..
..
இதோ இந்த கிழவன் வயது மூப்பினால் தளர்ந்து படுக்கை கிடுக்கும் போது கூட எதிரிகள் பதறுகிறானென்றால் இவரின் இருப்பு அவனுக்கு எவ்வளவு பயத்தை தந்திருக்கும் .. ஆரியம் கண்டு மிரளும் சிம்மம் கலைஞர்.. உறவாடி பார்த்தார்கள்.. உற்றவனை பகைவனாக்கி பார்த்தார்கள் கூட இருந்தவனை கொண்டு கொலைவாளை தூக்க வைத்தார்கள்
அதிகாகத்தை பயன்படுத்தி அழிக்கபார்த்தார்கள்.. பொய்களை வழக்காக்கி பார்த்தார்கள் .. ஊடகத்தில் மூலம் சிறுமைபடுத்த நினைத்தார்கள்.. முடியவில்லை..
கலைஞர் நேர்வழிநின்று வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசியல் பயணத்தை ..நெஞ்சுரத்தோடு செய்தார்.. ஊளையிடுபவர்களின் இரைச்சலை புறந்தள்ளி பெரியாரின் பார்வையில் மக்களுக்கு என்ன செய்யலாம் என்று நாளும் சிந்தித்து செயல்படுத்தி.. மக்களின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய்..கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயனபடுத்தி மக்களுக்கு நல்லதை செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி.. நல்ல சேவகனாய் உழைத்தார்.... மக்கள் வாழ்வு மேம்பட ஓயாத உழைத்தவரை..
மக்கள் ஒருமித்த குரலில் அழைக்கிறார்கள்
..
#எழுந்துவா_தலைவா..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment