Monday, August 6, 2018
கலைஞரின் விழுதுகள் நாங்கள்
கலைஞர் எனும் ஆளுமையை இருவேறு கூறுகளாக பிரித்துபார்த்தால் அவர் ஆற்றிய தொண்டு சமூகநலன் கொண்டதாகவே இருக்கும் மற்றொன்று அவரின் அரசியல் சாணக்கியம்.. சமகாலத்தில் இந்திய துணைகண்டம் கண்டிராத அதிசயமாக அமையும், வெவ்வொரு விடயத்திலும் பகுத்தறிவு துணைக்கொண்டு மிக சாதூர்ய காய்நகர்த்தல் ஒரிரு வார்த்தைகள் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்து புதியதொரு பாதையை வகுத்து தந்துவிடும்.. காலம்கடந்தும் செயல்படுகிற தேவைபடுகிற திட்டங்களாக அமைந்திடும்..52 ல் திரைபடத்தில் மனிதனை மனிதன் இழுக்கலாமா என்று கேள்வி கேட்டு ..நீங்க சென்னை மேயரா வந்தவுடன் மாத்திடுங்க என்பார் .. ஆம் எழுபதுகளிலேயே மாற்றி சாதனை புரிந்தவர் இந்தியா நடப்பிலாக்க 30 ஆண்டுகள் ஆனது.. இதொரு எடுத்துகாட்டுதான்..
..
தமிழக அரசியலை துல்லியமாக கணித்தவர்.. எந்தவொரு அமைப்போ கட்சியோ ஆரம்பிக்கும் போது சுருக்கமாக சிலர் வார்த்தைகளில் கருத்திடுவார்.. மதிமுகவிற்கு மறுபடியும் திமுக என்றார்.. அதிமுகவை பற்றி பேசும் போது.
நடிக்கருக்கான கட்சி சினிமா கவர்ச்சி கட்சி மேக்கப்பில் ஜொலுக்கிறது கொள்கை எனும் ஆணிவேர் இல்லை காலம் கடந்து நிற்காது கலைந்து மறைந்து போகும் என்றார்
..
எத்தனை நிதர்சனம் எவ்வளவு துல்லியமான கணிப்பு ஆம் எம்ஜிஆர் தனது அபிமானத்திற்காக தொடங்கபட்ட கட்சி அது கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்தது எழுபதுகளில் சினிமாவின் தாக்கம் தமிழக மக்களை மையம் கொண்டிருந்த காலம்.. சினிமாவை பொழுபோக்காக காணாமல் வாழ்வியலாக நம்பிய ஜனங்கள் நடிப்பை நிஜமென்ற நம்பிய மக்கள் அரிதாரம் பூசியவன் ஆண்டவனாக நடித்தாலும் அவன் ஆண்டவனில்லை என்கிற யாதார்த்தத்தை புரிந்துக்கொள்ளாத காலம் நேரமாக ஆக வேசம் கலையுமென்பதை உணர்கிற போது மெல்ல கரைய தொடங்கியிருக்கிறது .. இப்போது கூட கவர்ச்சியை தேடுகிற தனிமனித மோகத்தை தலைமையேற்க கெஞ்சிகிற சூழல் ..
..
திமுகவின் கொள்கை ஆணிவேர் மக்களின் இதயங்களில் பதிந்ததால் தான்.. நிறைய வேறுபாடுகளிலும் திமுக தொடர்ந்து நிற்க முடிகிறது..எத்தனை விதமான எதிரிகள் அருகிலிருந்து அன்பாய் நடித்தவன் குரல்வளையில் கத்திவைக்கிற போதும் ஆணிவேர் வீழாது காத்துநின்றது..
அரசியலில் சமரசங்கள் தவிர்க்கமுடியாதென்றாலும் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இயக்கம் ஒடுக்கபட்ட சமூகத்தை கை தூக்கிவிடவும் பிற்படுத்தபட்டவனின் உரிமைகளை காத்து ஆதிக்கம் செலுத்துவோரின் கோரபற்களை பிடிங்கி எறிந்தும்.. பாசிசத்தின் கோரதாண்டவத்தின் நிழல்கூட பாடாதவாறு காத்துநிற்க முடிந்தது.. தனிமனிதனை நம்பி அல்ல இயக்கம் இங்கே கொள்கை மறவர்கள் சமூகநீதியை பற்றிபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் சரியான நபரை காலம் தேர்வு செய்கிறதே தவிர யாரையும் யாரும் இங்கே எடுத்தியம்ப முடியாது..
கருத்துசுதந்திரம் இங்கே பேணபடுகிறது அடிமைகளை வளர்த்துவிடவில்லை.. முரண்பட்ட கருத்தாயினும் இயக்கத்தில் பொதுவெளிகளில் விவாதங்களில் வைக்கமுடியும்.. தனிமனித விமர்சனங்கள் தவிர்த்து சுதந்திரமாக யாரும் கருத்திட முடியும்.. எதிராளிகளின் கருத்தை கூட காதோர்க்கும் கண்ணியம் இங்கே உண்டு அடக்குமுறை,திமிர்,அடிமைத்தனம், இவையெல்லாம் இங்கே காணமுடியாது..
காலங்கள் கடந்தும் திமுக வலிமையோடு இருப்பதற்கு அதிலும் தேர்தல் தோல்விகளின் போதும்.. அதே கம்பீரம் குறையாமல் நடைபோட .. சலவை செய்த கரைவேட்டியோடு வலம் வரமுடிகிறதென்றால் .. கலைஞர் சொன்னதைப்போல கொள்கையெனும் ஆணிவேர் அழியாமல் காத்துநிற்கிறது ..
..
அதிமுகவின் கவர்ச்சி கலைந்து மறைந்து போகிறது.. ஆனால் திமுக கொள்கையால் கட்டமைக்கபட்டது காலம் கடந்தும் நிலைத்துநிற்கிறது.. கலைஞரின் சுணக்கம் எங்களை கலங்க செய்யவில்லை.. இயற்கையின் நீதியை அறிவோம்.. எம்மோடு அவரின் சுவடுகள் எப்போதுமிருக்கும்.. எம் இனத்தை காக்கும்.. வயது மூப்பு உடல் ஒத்துழையாமை எம்மை பதற செய்வது இயல்பு .. எதிரிகளே கனவுகாணாதீர்.. எம்மை வீழ்த்த முடியாது ஏனெனில் எமது சித்தாந்தம் இயற்கை/ பகுத்தறிவு சமூகநலன் இனத்தின் மானம் சார்ந்து நிற்பது .. பெரியாரும் பேரறிஞரும் முத்தமிழறிஞரும் எம்மை வடிவமைத்திருக்கிறார்கள்.. எத்தனை நூற்றாண்டு பின்னிட்டாலும் எம் கொள்கைகளின் வேர் ..ஆழ ஊடுறுவியிருக்கிறது..
..
வீழ்ந்துவிடமாட்டோம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment