Sunday, August 12, 2018

திமுக..

கட்சி தலைமை மீதும் தலைவர்கள் மீதும் உண்மையான பாசமுள்ள சுயமரியாதை தொண்டர்கள் ..திமுகவினர் #மலையாள_மனோரமா நாளேடு புகழாரம்!.. .. ஆம் கவர்ச்சியிலோ.. அல்லது ஒரு வித மூளைச்சலவையிலே வந்த கூட்டமில்லை கொள்கையில் வார்த்தெடுத்த முத்துகள்.. இந்த மண்ணை நேசிக்கிறவர்கள் இனப்பற்றால் மொழிப்பற்றால் ஒருங்கிணைந்தவர்கள்.. கடமை கண்ணியம் கட்டுபாடோடு இயங்குகிறவர்கள் எத்தனை துயர் வந்தாலும் அடக்குதலுக்கு அஞ்சாதவர்கள்.. துணிவோடு பயணிப்பவர்கள்.. கலங்கிநிற்கிறபோதும் கோபத்தின் உச்சியிலும் கண்ணியம் காக்கிறவர்கள்.. எதிர்கருத்தையும் உள்வாங்கிறவர்கள் மதிக்கிறவர்கள் .. ஒரு இயக்கம் எப்படி இருக்கவேண்டுமென்பதையும் அதில் எந்தளவு ஜனநாயம் கட்டிகாப்பாற்ற படுகிறதென்பதையும் திமுகவை தொடர்ந்து கவனித்து வந்தால் தெரியும்.. .. இதோ முடிந்தது திமுக என்று சொன்னவர்கள் எழுதியவர்களை காணவில்லை.. ஆனால் திமுக இன்றும் உறுதியோடு நிற்கிறது.. பகைச் சொல்லி பழிச் சொல்லி போனவர்கள் .. தனிசுகம் தேடி பதவியை நாடி தனிக்கட்சி கண்டவர்களின் கட்சிகள் கரைய தொடங்கியிருக்கிறது.. அடிதட்டுவரை ஜனநாயகத்தின் வேரை விரிவடைய செய்யாததே காரணம் .. திமுகவில் கிளைக்கழக தேர்தல் தொடங்கி கட்சியின் தலைமை பதவி வரை ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடைமுறை.. சிலர் கேட்பதுண்டு கீழ்மட்ட தேர்தலில் போட்டி பகை குரோதம் எல்லாம் எழுந்து அடிதடிவரை வந்து நிற்கிறதே தேவைதானா ..நியமன நடைமுறைதானே சிறந்ததென்ற போது.. யார் வரவேண்டுமென்று அவர்களுக்குள் தேர்வு செய்வது தான் சிறந்தது .. தேர்தல் முடிந்தவுடன் கட்சியின் கட்டுபாடு அவர்களை ஒருங்கிணைக்கும் என்பார் கலைஞர்.. யாரையாவது நியமித்தால் அவர்கள் கட்சி தலைமைக்கு வேண்டியவர்கள் ..மற்றவர்களை தூரவைப்பதை போன்ற தோற்றம் வரும்.. ஆம் நிறைய முறை கலைஞர் இதை செய்துகாட்டியிருக்கிறார்.. எதிர் எதிர் நின்று உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களை பொதுகூட்டத்திற்கு தன் காரில் அழைத்துவந்து நான் இருவருக்குமே பொதுவானவன் என்று பறைசாற்றுவார்.. உதாரணமாக தஞ்சையில் மன்னையும் மணியும் எதிரெதிராக நின்றவர்கள் தஞ்சை வரும் போதெல்லாம் இருவரையும் தன்காரில் ஏற்றிக்கொண்டு சேர்ந்துதான் பொதுகூட்டத்திற்கு வருவார்.. மணி/எல்ஜி.. இப்படி தான் நடக்கும் இதைபோல எல்லா மாவட்டங்களிலும் தலைமை பொதுவாக நடந்துகொள்ளும் என்பதை யாருக்கும் ஒருதலையாக நடக்காதென்பதையும் நான் எல்லோருக்கும் பொதுவானவன் என உணர்த்துவார் .. .. திமுக திராவிட இயக்கத்தின் தேர்தல் அரசியல் களம் ..மக்களுக்கு சேவை செய்வதற்கும் நமதுரிமையை மீட்டெடுக்க .. அதை சட்டமாக்க அதிகாரம் வேண்டுமென்பதை உணர்ந்ததால் தான் சமூக அரசியலில் தேர்தல் அவசியமென்பதை உணர்ந்து அதில் உச்சபட்ச ஜனநாயகத்தை கொண்டு வந்தது.. சுயமரியாதை திருமணத்தை உச்சநீதிமன்றம் ஏற்காமல் தகாத உறவென்றதால் .. சட்டமாக்க வேண்டுமெனில் சட்டத்தை இயற்றுமிடத்தில் நாமிருக்க வேண்டும் என தீர்மானித்து பேரறிஞர்அண்ணா ..திமுகவை தொடங்கினார் .. கட்சியை கட்டுகோப்போடு சிறிதும் கடமை தவறாமல் நெறியோடும் கண்ணியத்தோடும் வழிநடத்தி.. இன்றும் மக்களால் நேசிக்கபடுகிற ஒரு கட்சியாக .. எல்லோராலும் வியக்கதக்கவகையில் கட்சியை நடத்தியிருக்கிறார் கலைஞர்... இன்றைக்கும் இந்தியளவில் அனைவராலும் பாராட்டை பெற கலைஞரின் தலைமையே காரணம். இயக்கத்தின் வேரை உறுதியாக்கியிருக்கிறது .. ஆம் அதன் வேர்கள் இனம் மொழி,சுயமரியாதை சமூகநீதியென பரந்துவிரிந்து கிடக்கிறது.. அசைக்கமுடியாது இந்தியாவில் ஆக சிறந்த ஜனநாயக இயக்கம் திமுக.. .. கலைஞர் மிகச்சிறந்த ஜனநாயகவாதி.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment