Friday, August 10, 2018
நல்லதொரு தொடக்கம்..
திமுக ..
தலைவர் கலைஞர் மறைவையொட்டி திமுக தலைமைப் பற்றி செய்திகள் சமூகவலைத்தளங்களில் நீண்ட பாரம்பரியம் கொண்ட பத்திரிக்கைகளில் நிறைய சேதிகளை தாங்கி வருகிறது.. ஸ்டாலின் தலைவராகவும் அழகிரிக்கு பதவியும் .. சிலர் கனிமொழி பெயரையும் .. இன்னும்,சிலர் துரைமுருகன் ராசா தொடங்கி பட்டியல் நீளுகிறது..
விபரம் தெரிந்த பத்திரிக்கையாளர்கள் கூட சில சமிக்ஞைகளை கொண்டு ஆருடம் சொல்ல தொடங்கிவிட்டார்கள் சில புலனாய்வு பத்திரிக்கைகள் திரில்கதைகளை சொல்கின்றன.
எல்லோருக்கும் ஒர் செய்தி..
திமுக மாபெரும் ஜனநாயக இயக்கம் சில வரைமுறைகள் இங்கே கடைப்பிடிக்கபடும் செயற்குழுவும் அதை தொடர்ந்து பொதுக்குழுவும் முடிவு செய்யும்..
..
அண்ணா மறைந்த போது ஏற்பட்ட அசாதாரண சூழல் இப்போதில்லை..அப்போது மிக கவனமாக திமுக கையாண்டது ஊடகங்கள் தூக்கிபிடித்த நாவலர் முதல்வர் பதவியில் பின் மாறியதும் .. பொதுக்குழு உறுப்பினர்கள் தலைவர் பதவியை ஏற்று புதிய சட்ட திருத்தம் கொண்டுவந்து தலைவராக கலைஞரும் செயலாளராக நாவலரும் தேர்வு செய்யபட்டதும் வரலாற்று நிகழ்வுகள்... திமுகவின் அனைத்து நடவடிக்கைளுக்கும் பொதுக்குழுவில் எதிர்ப்பும் ஆதரவும் வந்திருக்கிறது சில திருத்தங்களை தலைமை ஏற்றுக்கொண்ட வரலாற்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன
மிகச்சிறந்த ஜனநாயகத்தை தந்தது..
..
யார் வரவேண்டுமென சமூக வலைத்தளங்களில் அலச தேவையில்லை திரு.ஸ்டாலின் தவிர்க்க முடியாத சக்தியாக கட்சிக்குள்ளும் வெளியிலும் திகழ்கிறார்.. நீண்டநெடிய சமூகப்பணியையும் கட்சிப்பணியையும் கொண்டு மிளிர்கிறார் மக்கள் எதிர்பார்க்கிற திமுகவின் தலைமையாக வரகூடும் .. வருவார்..
மற்ற பதவிக்களுக்கு யாரை நிறுத்தவேண்டும் யாரை விலகி வைக்கவேண்டுமென்று அறியாதவரில்லை கட்சியின் பொதுக்குழுவில் யாரெல்லாம் என்னென்ன பதவிக்கு போட்டியிடுகிறார்கள் அல்லது விரும்பம் தெரிவிக்கிறார்கள் என்பதை இன்னும் சில நாட்களில் தெரியவரும்.. ஊகங்கள் பரிந்துரைக்கிற பெயர்களை ஒருவித எதிர்பார்ப்போடு காத்திருப்பீர்களேயானால் ஏமாற்றமே மிஞ்சும் காரணம் நீங்கள் எண்ணுகிறவர்கள் மட்டுமே,திமுக இல்லை இந்த இயக்கத்தில் நிறைய திறமையாளர்கள் தங்களின் செயல்பாட்டால் தங்களின் ஆளுமை நிரூபித்தவர்கள் மக்கள் செல்வாக்கு பெற்றோர் உண்டு எப்போது யாரை பயன்படுத்தவேண்டுமென்ற தெளிவு தலைமையேற்க இருப்போருக்கு உண்டென்பதை காலம் நமக்கு சொலலியிருக்கிறது..மிக தெளிவான பாதையில் சமரசமற்ற கொள்கையில் பகுத்தறிவு பகலவன் வகுத்துதந்த வழியில் திராவிட பெருவுடைப் பெருமகன் கலைஞர் நடந்த பாதையில் ..திமுக நிச்சயம் நடைப்போடும்.. சில கலகம் பிறக்காதா என ஏங்குவது தெரிகிறது.. உங்கள் ஆசை நிராசையாகும்... புதிய அத்தியாயத்தை திமுக எழுதும் அதுவும் வரலாற்று சாதனையாய் திகழும்.. ஜனநாயகத்தின் வேர் பலமாக இருப்பதால் திமுகவை யாராலும் அசைத்திட முடியாது.. அவர்களின் குள்ளநரித்தனங்கள் விலைபோகாது..
..
ஒன்றும் மட்டும் உறுதியாய் சொல்லமுடியும் ..
திமுகவின் பொறுப்பிற்கு வருகிறவர்கள் நல்ல திறமையுள்ளவர்களாக பொதுத்தொண்டின் நாடி அறிந்தவர்களாக சிறந்த பங்களிப்பை தரகூடியவர்களாக ..மக்கள் விரும்புகிறவர்களாக இருப்பார்கள் அவர்களை தான் திமுக பொதுக்குழு தேர்வு செய்யும் ..
ஜனநாயக வழியில்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment