Friday, August 3, 2018

விலைபோகும் ஊடகங்கள்

விலைபோகும் ஊடகங்கள்.. கொஞ்சம் ஆழ்ந்தோசித்தால் அவர்களின் நோக்கம் நமக்கு விளங்கும்.. மெல்ல மெல்ல ஊடகங்களை ஆக்கரமிக்கிறார்கள் .. ஊடகவியலாளர்களை சந்திக்கவே அஞ்சுகிற மோடி.. தமிழக ஊடகவியலாளர்கள் சந்தித்து இருப்பதின் பின்னில் மிகப்பெரிய திட்டம் இருக்கிறது.. யாருமே கண்டுக்கொள்ளாத பாஜகவை முன்னிலைபடுத்த ஊடகங்கள் கேட்டுக்கொள்ளபட்டிருக்கிறது.. ஊடகவிவாதங்களில் பாஜக முகம் இல்லாமல் இருக்க கூடாதென்று அறிவுறுத்தபட்டிருப்பதாக தெரிகிறது.. பிரியாணி அண்டாவை தூக்கிகொண்டு ஓடிய பாஜகவினரை பற்றி வாய்திறக்காத ஊடகம் .. பாஜக இறக்குமதியின் பிரியாணி சண்டைக்கு திமுகதானென வரிந்துகட்டி விவாதம் நடத்துவதும் திமுகவினர் இல்லாதபோது நடத்துவதும் ஊடகஅறமா என்று விளக்கவேண்டும்.. .. அதுமட்டுமல்ல கருத்துசுதந்திரம் என்ற பெயரில் வன்மங்களை கொட்டிதீர்க்கிறார்கள்.. அவர்கள் மிக தெளிவாக சிறுபான்மையினர் மற்றும் தலித்விரோத போக்கை கையிலெடுத்து ஆடுகிறார்கள்.. அவர்கள் நோக்கம் திராவிடம் என்ற சொல்லை தமிழ்மண்ணிலிருந்து அகற்றவேண்டும் கொஞ்சம் கடினமான பணி ஆனால் அதற்கான துவக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள் .. இரண்டுமூன்று ஆண்டுகளுக்கு முன் சமூகஆர்வலர்கள் என்ற பெயரில் வலம்வந்த கருத்துரையாளர்கள் முகமூடியை கழட்டிவிட்டு நேரடியாகவே தலித்விரோத போக்கை/குரோதத்தை வெளிபடையாகவே காட்டியிருக்கிறார்கள்.. ஊடகங்கள் வேண்டுமென்றே நடுநிலையாளர்களை, சமூகநீதியாளர்களை, புறக்கணிக்கிறது இதுநல்லபோக்கல்ல.. இவை எல்லாவற்றிக்கும் பின்னால் ஆர்எஸ்எஸ் எனும் இந்து தீவரவாத அமைப்பு பின்னில் இருப்பதும் அதை இயக்கும் பார்பனகும்பல் என்பது தெளிவாகதெரியும்.. திராவிட இயக்கங்கள் இன்னும் அதிகமாக பார்பனீய எதிர்ப்பை காட்டவேண்டிய நேரம்வந்துவிட்டது .. முழுமூச்சாக எதிர்ப்பை ..மிகசத்தமாக கையிலெடுக்கவேண்டும் வெறுமனே பெரியார்மண் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காலம்கடந்த ஞானோதயமாக முடியும்.. .. இந்துத்துவாசக்திகள் குறிப்பாக இடைசாதிகாரர்களை தூண்டிவிட்டு அவர்கள் பின்னால் நின்று வேடிக்கைப்பார்பார்கள்.. இதை நீங்கள் கண்கூடாகவே காணலாம் எந்த பிராமணனைவது காவிதுண்டோடு ஊடகத்தில்/ வெளியில் தெரிவார்களா என்றால் இல்லை ஆனால் இடைசாதிகாரன் காவிதுண்டோடுதான் வருவான் .. அவர்கள் மிக சதூர்யமாக நகர்ந்துக்கொள்வார்கள் .., .. திராவிட இயக்கங்கள் மிக சத்தமாக செயல்படவேண்டிய தருணம்.. தொடர்ந்து தாக்குதலை ..தமிழர்களின் தொலைகாட்சிகளில் ஆரியர்கள் புகுந்துக்கொண்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக ஆதித்தனைரின் தந்தி படும்பாடு நமக்கெல்லாம் கண்கூடாக தெரிகிறது.. இனியும் காலதாமதமின்றி எதிர்ப்பை அதிகதிகமாக வேகமாக,விவேகத்கோடு எடுத்தியம்பியவேண்டும்.. பாஜகவை தூக்கி நிறுத்த அல்லது அதைப்பற்றியே பேசவேண்டுமென்பதற்காக ஊடகங்களை ஒருவித மிரட்டலோடு அணுகுகிற முறை ஆபத்தானது .. இம் மண்ணில் சாதிய மோதலை மதவெறியை தூண்டுவதும் மெல்ல பாசிசத்தின் சித்தாந்தத்தை மண்டையில் ஏற்றுவது போன்ற பணிகள் நடைபெறுகிறது அதில் ஒன்றுதான் இந்தியை படிக்க ஆர்வம் காட்டுவதாக பொய்செய்தியை வெளியிடுகிறார்கள்.. திமுக ஆட்சிக்கு வரும் என்பதை உணர்ந்து அதற்கெதிரான கூட்டுசதியில் ஊடகங்களின் பங்கை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.. ஏன் சந்தித்தோமென்று இவர்கள் வெளிப்படையாக சொல்லாதவரை இவர்கள் மீதான நம்பிக்கை சந்தேகத்திற்குரியதுதான் நெருக்கடிகாலத்தில் கூட இவ்வாறு ஊடகங்கள் விலைபோனதாக தெரியவில்லை கருத்துசுதந்திரம் மறுக்கபட்டபோதுகூட ஆளும் கட்சிக்கெதிரான போக்கை ஊடகங்கள் கைவிடவில்லை.. இப்போதைய சூழல் ஜனநாயகத்தின் நான்காம்தூணை பாசிசம் எனும் கரையான் அரிக்க தொடங்கியிருக்கிறது .. நிச்சயமாக மோடியுடனான இவர்களின் சந்திப்பிற்கு நாட்டுநலனுக்கானதில்லை. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment