Monday, August 13, 2018
தளபதி..
நான் திமுகவில் இல்லை..என்கிறார் கலைஞரால் புறத்தாக்கபட்டவர்..
..
கட்சி தலைமைக்கு நீங்கள் யாரையாவது பரிந்துரை செய்யுங்கள் என்றால் நான் நிச்சயமாக தளபதி.ஸ்டாலினை தான் பரிந்துரைப்பேன் .. இளம் வயதில் மாணவர்மன்றம்,தொடங்கி .. மிசாவில் கொடுமைகளை தாங்கி படிப்படியாக தன்னை உயர்த்திக் கொண்டவர் ..என்றார் கலைஞர் அவர்கள்..
சில ஊடகங்களும் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி ஒரு பின்னடைவைப்போல காட்ட நினைக்கிற பகைவர்களும் கட்சியால் நீக்கபட்டு சில ஆண்டுகளாய் மக்களால் மறக்கபட்ட ஒருவரை முன்னிறுத்தி கலகம் விளைக்க பார்க்கிறார்கள்.. இப்போதைய தி.மு.கழக நிர்வாகிகள் .. கட்சி தொண்டர்கள் யாரும் விரும்பாத ஒருவரை முன்னிலைபடுத்த என்ன காரணம்.. கலைஞர் கட்டிகாத்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடைபட்ட காலத்தில் மறைமுகமாக அனுபவித்துவரும் சலுகைகள் பார்பனியர்கள் உயர்பதவிகள் காலியாகுமென அஞ்சி மிகப்பெரிய எதிரியாக பெரியார் அண்ணா கலைஞர் வரிசையில் தளபதியார் வருவதை தடுக்க .. கலைஞர் குடும்பத்திலிருந்தே கலகத்தை கொண்டுவருகிறார்கள்..
..
கலைஞரால் கட்டம் கட்டபட்டு .. என் முகத்திலேயே முழிக்காதே என்று கூறுமளவிற்கு கிழவனின் மனதை ரணமாக்கியவரை.. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதவரை ஊடகங்கள் முட்டுகொடுப்பதேன்..? ஒட்டுமொத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் திரு.ஸ்டாலினை தலைவராக்க எந்தவித ஆட்சேபனை தெரிவிப்பதாக தெரியவில்லை..
யாரும் தலைமைக்கு எதிர்த்து போட்டியிட போவதாகவும் தெரியவில்லை.. ஒட்டுமொத்த இயக்கமும் .. திமுக அபிமானிகளும் நாட்டின் நலம் விரும்புவோரும் திரு.ஸ்டாலின் தலைமை தான் சரியானதென்கிறார்கள்.. எதிரிகள் கூட தளபதியின் தேர்வை குறை கூறவில்லை திடீரென்று கலைஞரின் மறைவிற்கு பிறகு கட்சியின் உரிமை கொண்டாட இது கலைஞரின் சொத்தல்ல.. கலைஞரின் மொழியில் சொல்லவேண்டுமெனில் சங்கமடமல்ல..
நீண்ட பங்களிப்பும் தொடர்ந்து கட்சிபணிகளை செய்து ..தலைவரின் கட்டளைகளை ஏற்று சிறைச் சென்று.. மக்களோடு மக்களாக பயணித்து ஒவ்வொரு நொடியும் நேர்மையான அரசியலை செய்து நேரடியாக மக்களின் செல்வாக்கோடு பதவிக்கு வரவேண்டுமென நினைப்பரோடு.. கொள்ளைப்புற வழியாக வீட்டிலிருப்போரிடம் கெஞ்சி மிரட்டி.. அழுது கட்சியின் பதவியை கேட்பது கலைஞருக்கு செய்கிற அவமானம்.. கடைசி நிமிடம் வரை போராளியாய் வாழ்ந்து ஒரு ஒப்பற்ற தலைவருக்கு இதைவிட கேவலத்தை தர முடியாது..
..
கட்சியின் தலைமைக்கு மிக சரியான தேர்வு திரு.ஸ்டாலின் மட்டும் தான்.. இந்த வேளையிலும் கலைஞருக்கு நன்றி கூற தமிழ்சமூகம் கடமைபட்டிருக்கிறது.. தன் விதையில் விளைந்ததென்றாலும் சொத்தையை அடையாளம் கண்டு குப்பையிலே எறிந்தைமைக்கு..
#நன்றி தலைவா..
கடைசியாய்..
கட்சியா குடும்பமா என்றால் நான் குடும்பத்தை துாக்கியெறிந்து கட்சியை காப்பேனே அன்றி எந்த நிலையிலும் இயக்கத்தை விட்டு கொடுக்கமாட்டேன்..
என்று மிக தெளிவாக அடையாளம் காட்டி
நாட்டிற்கும் சமூகத்திற்கும்.. இயக்கத்திற்கு பேருதவி செய்த பெருமகனின் வழியொட்டி
தளபதியை பின்துணைப்போம்..
பெரியார் அண்ணா கலைஞர் வரிசையில் தளபதி..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment