Monday, August 20, 2018

திமுக

திமுக.. திமுக தலைமைக்கு வருவதென்பது மிகப்பெரிய எதிரிபார்ப்பை ஏற்படுத்துகிற பதவி.. சில கட்சிகள் அல்லது அமைப்புகளின் தலைவராக வருவதும் வந்ததாக சொல்வதும் ஒரு செய்தி அவ்வளவுதான் ஆனால் திமுக போன்ற மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்திற்கு தலைவராக வருவதென்பது சரித்திரம்.. .. பொதுக்குழு கூடுகிறது.. மாவட்ட செயலர்கள் பரிந்துரைக்கிறவர்கள் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் .. பொதுக்குழு தேர்வு செய்யும் .. இதில் சிறப்பே யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் .. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் மாவட்ட செயலர் பரிந்துரை அவசியம் அவ்வளவுதான் .. இதுவரை 50 ஆண்டுகள் தலைவராய் இந்த பேரியக்கத்தை கட்டுகாத்தவர் கலைஞர்.. 1949 ல் திமுக தொடங்கப்பட்ட போது அண்ணா .. தந்தை பெரியார் தான் தலைவர் என்று அந்த பதவி நிரப்பபடாமல் பொதுசெயலராக தொடர்ந்தார் அண்ணா மறைவிற்கு பிறகு யார் முதல்வராவது என்ன பிரச்சனையில் கலைஞரிடம் போட்டியிட விரும்பாமல்... கலைஞரை மதியழகன் முன்மொழிய சத்தியவாணி முத்து வழிமொழிய... போட்டி உருவான போது போட்டியென்றால் நான் விலகிக்கொள்கிறேனென நாவலர் விலக.. தலைவர் கலைஞர் முதல்வரானார்.. கட்சி பதவிக்கு பொதுசெயலாளர் பதவிக்கு நாவலர் போட்டியிட போவதாக சொன்னபோது மீண்டும் ஒரு போட்டி தேவையில்லை என கருதி கட்சியும் தலைமையும் தலைவர் பதவியை உருவாக்கி தலைவராக கலைஞரும் பொது செயலராக நாவலரும் தொடர்ந்தனர் .. அதன் பிறகுதான் நாவலர் மந்திரிசபையில் சேர்ந்தார்.. .. கிளைச் செயலாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் என பல ஜனநாயக அடுக்குகள் கொண்ட பேரியக்கம் .. இங்கு எல்லோருமே தேர்வின் அடிப்படையில் பதவிக்கு வருவார்கள் .. இந்திய கட்சிகளின் வரலாற்றில் இத்தனை வெளிப்படையாக ஜனநாயக போக்கு எந்த கட்சிக்குமில்லை.. நியமன செயலாளர்களை கொண்டே அல்லது பொதுக்குழுவை கொண்டோ நடத்திட முடியாது .. நிறைய பகைகள் கைகலப்புகள் நடக்கிறதே மா.செ தேர்தலை நிறுத்திவிட்டு நியமன முறையை கொண்டு வரலாமே என்றபோது கடைசிவரை அவர்களுக்குள் தேர்வாகி வரட்டும் அதுதானே முறை என்றவர் கலைஞர்.. ஜனநாயகத்தின் அடித்தளத்தை மிக உறுதியாக கட்டமைத்திருந்தார் இன்று எல்லாவித எதிர்ப்பையும் மீறி .. காலம்கடந்து சில இயக்கங்களைப்போல/ கட்சிகளைப்போல கரைந்துவிடாமல் நிற்கிறதே .. அதற்கு கலைஞரின் ஜனநாயநெறிமுறைகள்/ வழிமுறைகள் தான் காரணம்.. திமுகவை அசைக்கமுடியாமல் போவதற்கும் இந்த ஜனநாயக நெறிபடுத்தல் காரணம்.. இந்தியாவிலேயே ஒரே ஜனநாயக இயக்கம் திமுக தான் பொதுவுடமை கட்சியில் சில நியமன பதவிகள்தான் ..பொலிட்பீரோ போன்ற உயர்மட்ட குழுவில் கூட இன்னமும் ஜனநாயகம் முழுமை பெறவில்லை.. .. தளபதி எதிரில்லாத தலைவராக தெரிகிறார் .. நிறைய எதிர்பார்ப்புகளோடு தமிழகம் காத்து நிற்கிற வேளையில் பொறுப்பிற்கு வருகிறார் நல்ல தலைமையை.. தருவாரென நமிபிக்கையை தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறார்.. நாடும் இயக்கமும் அடுத்த தலைமுறையிடம் வந்திருக்கிறது.. தான் யாயாரோடு சேர்ந்து இயங்க போகிறாரென்பதை பொருளாராக யார் வரபோகிறாரென்பதை 28.08 2018 விடையளிக்கும்.. .. வாழ்த்துகள் தளபதி.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment