Sunday, August 26, 2018
தலைவா..
தலைவர்..
நீண்டதூர அரசியல் பயணித்தில் பல்வேறு படித்தளங்களை கடந்து .. மாபெரும் இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கிறார்.. எதிரில்லாத நிலையில் தலைவர் பொறுப்பை ஏற்கும் பாச தளபதிக்கு முதலில்நம் வாழ்த்துகள்
..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை முறைப்படி அதிகாரம் ஏற்கிறது நம் முன் நிற்கும் சவால்கள் .. இயல்பாக ஏற்படும் தடங்கல்கள்.. எதிரிகளால் ஏற்படும் சூழ்ச்சிகள் .. துரோகிகளால் வந்துசேரும் பழிகள் என நிறைய கடக்கவேண்டியிருக்கிறது .. மிகப்பெரிய ஆளுமையை இழந்து நிற்கிற வேளையில் மிக சிறப்பாக செயல்படுவாரென்ற நம்பிக்கையில்
தளபதியை நம்பி நிற்கிறோம்..
கொள்கையில் மாறாத போக்கும் வழிநடத்தும் போதும் .. வழி நடக்கும் போதும் திராவிட சித்தாந்தத்தின் சுவடுகளோடு .. பெரியார் தந்த ஒளியில் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் செப்பனிட்டு அமைத்த பாதையிலிருந்து பிரிந்து செல்லாமல் .. சமூகநீதியின் ஊற்று வற்றாமல் ..நடந்திட ..நம்மை நடத்திட வேண்டுமென்ற அவா சிறு கவலையோடு தொடர்கிறது..
..
கட்சியின் பொருளாளராக திரு.துரைமுருகன் தேர்வாகிறார் ..முதலில் நமது வாழ்த்தை சொல்வோம்..
நீண்டகாலம் கட்சியில் செயலாற்றி முதன்மைச் செயலராக தன்னை உயர்த்திக் கொண்டவர் அண்ணா கலைஞரின் நிழலையொட்டியே தமது அரசியலை கொண்டுசென்றவர் அந்த பதவிக்கு பொறுத்தமானவர்களில் ஒருவர் என்பதில் மாற்றுகருத்தில்லை ..
கலைஞரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர்
தளபதியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர் ஆனால் அவரின் சமீபத்திய நடவடிக்கைகள் அத்தனை ரசகரமில்லை.. மூத்த அரசியல்வாதியெனினும் இன்னும் முதிர்வடையைாத கிண்டல் கேலிப் பேச்சுகளை அதிகம்,.. பாஜகவைப் பற்றிய இவரது கணிப்பு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.. பாஜகவை எதிர்கட்சியே தவிர எதிரி கட்சியில்லையென்கிறார் .. இவரது இந்த பேச்சு திராவிட சித்தாத்தந்தின் அடித்தளத்தையே அசைக்கும் பாசிசத்திற்கு எதிராகதான் திராவிட இயக்கம் தோன்றியது ..
பார்ப்பனரை தவிர மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்காக தான் அவர்களின் உரிமையை மீட்டெடுக்கதான் திராவிட இயக்கமே தோன்றியது.. ஏன் பாஜகவோடு கலைஞர் கூட்டணி அமைக்கவில்லையா என கேள்வி எழும் .. அதற்கு கலைஞரின் பதிலையே தருகிறேன் "ஒட்டகத்தின் கழுத்தை நிமிர்த்திவிடலாமென நினைத்து ஏமாந்தேன்"..என்றார் .. பாஜகவின் கொள்கையென்பதே ஆர்எஸ்எஸின் கொள்கைகளை செயல்வடிவம் தர ஏற்படுத்திய அமைப்புதான்.. சமூகநீதிக்கெதிராக தான் பாஜகவின் செயல்திட்டங்கள் இருக்கின்றன/இருக்கும் .. பாஜக நமக்கெதிரான
எதிரான கொள்கையை கொண்டதென்பதை துரைமுருகனுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை.. எதிர்த்து நிற்பவர்கள் நம்மோடு இணைய கூடும் அது தேர்தல் அரசியலில் ஒரே கோட்பாட்டை இனத்தின் மீதான கொள்கைப்பிடிப்பை கொண்டவர்கள் இணையலாம்.. ஆனால் கொள்கை எதிரிகளோடு நம்மை நம் இனத்தை நமது சித்தாந்தத்தை அழிக்க அல்லது ஒடுக்க நினைப்பவர்களோடு.. நமது உரிமையை பிடிங்க நினைப்பவர்களோடு நம் மிதானபோக்கு நம்மையே நலிவடையச் செய்யும்.. நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சுரண்ட நினைப்பவர்களை எதிரிகளாகதான் கணக்கில் கொள்ள வேண்டும் இந்த தெளிவிருந்தால் போதும்..
தளபதி அவர்கள்
மிகப்பெரிய பொறுப்பை தந்திருக்கிறார்.. நல் வழிகாட்ட வேண்டுமே தவிர தவறான கொள்கை முடிவுகளை எடுக்க வழிசெய்யகூடாது .. தளபதியின் கரத்தை பலப்படுத்த துரைமுருகன் துணை நிற்பாரென இயக்கம் நம்புகிறது..
..
தளபதி மீதுள்ள நம்பிக்கை.. நாடும் மக்களும் அசைக்கமுடியாத பற்றோடு.. நல்லதை செய்வாரென நம்பியிருக்கிறார்கள் தி.மு.கழகத்தின் இரண்டாவது தலைவராக ஏகமனதாக தேர்வாகியிருக்கிறார்.. தளபதி முன்பு பேசியதை இப்போதும் நினைவிருக்கிறது..
"அறிஞர் அண்ணாவை போல் அறிவார்ந்தவனாக இல்லாமல் இருக்கலாம்.
கலைஞரைப் போல் பல்துறை வித்தகனும் அல்ல,ஆகவும் முடியாது.
ஆனால் தொண்டர்களின் உணர்வுகளால் ஊக்கங்கொண்டு முழுஅளவில் உழைப்பினை நாட்டிற்காக வழங்க என்னால் முடியும்.
..
நம்புகிறோம் தளபதியாரே..
நல்லதையே விதைக்கிறீர்
நல்லதே விளையும்..
வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment