Tuesday, August 21, 2018
யார் ..தலைவர்
யார் பொருளாளர்..
திமுகவின் பொருளாளராக யார் வருவார்களென ஊடகங்கள் தொடங்கி.. சமூகவலைதளங்கள் என விவாதம் களைகட்டுகிறது.. யார் வரலாமென ஆளாளுக்கு கருத்தை பதிகிறார்கள்.. திமுக போன்ற ஜனநாயக கட்சியில் தான் பொறுப்பிற்கு தேர்வாகிறவர்களைப் பற்றி அதிக கவலையோடு விவாதிக்கிறார்கள்.. அவர் வந்தால் நல்லது சிறுபான்மை சமூகத்திற்கு வழங்கலாம் மொழிப்போர் தியாகிக்கு வழங்கலாம் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு வழங்கலாம் .. இந்த முறை பட்டியலினத்திற்கு வழங்கவேண்டும் என கருத்துகள் பேசபடுகிறது.. கருத்துரிமைக்கு திமுக அளித்த அங்கீகாரம்/சுதந்திரம் இதில் வெளிபடுகிறது..
பேரெடுத்து சொல்ல வேண்டியதில்லை இங்கே திறமையாளர்கள் அதிகம்.. அரைகுறைகளோ அடிமைகளோ.. எதற்கும் உதவாத கோழைகளோ
திமுகவில் இல்லை.. அறிவுடையோர் .. பகுத்தறிவின் நிழலில் சமூக தொண்டாற்றுவோர் கொள்கைமதியாளர்கள்..திறமையும் அறிவும் ஒருங்கே பெற்றவர்கள் .. சுயமரியாதைகாரர்கள் சுயசிந்தனையாளர்கள்.. நீண்ட நெடிய அரசியல் பின்னணி கொண்டவர்கள் ..கடும் உழைப்பால் உயர்ந்த உன்னதர்கள்.. மொழியறிவு இனப்பற்று கொண்ட கொள்கை தங்கங்கள்.. இங்கே ஏராளம் ஏராளம்..
..
அடிமைகளை தலையாட்டி குனிந்து கும்பிடுபோடும் சுயநலவாதிகள் இங்கே இடமில்லை .. மானமுள்ள கூட்டம் இது யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற தெளிவும் யாரை தேர்ந்தெடுக்காதிருக்கவேண்டுமென்ற காரண அறிவும் கொண்டவர்கள் திமுகவினர்.. இந்த இயக்கத்தை அடுத்தகட்ட நகர்விற்கு செல்லும் போது ஏற்படும் தடங்கல்களை சோதனைகளை கடந்து சிறப்போடு செயல்படும் செயல்மறவர்களை திமுக பொதுக்குழு தேர்வு செய்யும்.. எப்படி பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு .. யார் யாரையெல்லாம் ஊடகங்கள் ஆருடம் சொன்னது ஆனால் பொதுக்குழு கலைஞரைதான் தேர்வு செய்தது.. கலைஞர் எப்படி திமுக என்ற பேரியக்கத்தை கட்டி காத்தாரே அதைப்போல தளபதியும் திமுகவை மிக சிறப்பாக வழிநடத்துவார் அவருக்கு துணையாக யாரை தேர்வு செய்யலாமென திமுக பொதுக்குழு முடிவு செய்யும்..
..
26.08.18 அன்று யார்யாரெல்லாம் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.. யாரெல்லாம் முன்மொழிந்து வழிமொழிந்திருக்கிறார்களென தெரிந்துவிடும்..பேராசிரியர் பெருந்தகையும் தளபதியும் ஆலோசித்து நல்லவரை முன்மொழிய கூடும்.. இங்கே வெளிப்படையான ஜனநாயக மரபுகள் உண்டு .. பொதுக்குழு அங்கீகாரமென்பது உச்சபட்ச ஜனநாயகம் திமுகவின் பொதுக்குழு என்றாலே விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது.. கலைஞர் தலைமையில் இருக்கும்போதே ..பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்தை அது எதிர்கருத்தாகினும் எடுத்துவைத்த வரலாற்று நிகழ்வுகள் நிறைய உண்டு தலைவனையே கேள்வி கேட்கும் அதிகாரம் கொண்டது.. வீரபாண்டியார் கோ.சி.மணி மதுராந்தகத்தார், நெல்லிகுப்பத்தார் போன்றோரெல்லாம் பொதுக்குழுவில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவித்த வரலாறும் அதற்கு கலைஞர் விளக்கம் சொன்ன நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன .. இதெல்லாம் வேறு எந்த கட்சியிலும் காணமுடியாது..
..
நிச்சயமாக சரியான தேர்வாக வருங்கால நலன் கருதி தளபதியோடு இணைந்து செயலாற்றும் திறமையான தகுதியான .. கொள்கை உறுதிமிக்க நபர் தேர்வு செய்யபடுவார்.. ஆருடங்களை விடுத்து அமைதியாக இருங்கள்...
தளபதியின் கரத்தை வலுபடுத்துபவரே இனி.. பொருளாளராவார்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment