Thursday, August 2, 2018
நல்ல தலைவர்
தளபதி.. உயர்கிறார்..
ஒரு தலைவனுக்கான தகுதி எப்படி வரையறுக்கபடுகிறதென்பதை கவனிக்கவேண்டும் ..
சமகாலத்தில் இப்படியொரு தெளிவான வளரும் தலைவரை காணமுடியவில்லை நேர்மை.. எதுவும் முறையாக மக்கள் அங்கீகரிப்பில் வரவேண்டுமென்ற பிடிவாதம் பதவி மக்கள் அளித்ததாக வேண்டுமென்ற உயர்நோக்கு.. தளர்ந்து நிற்கும் நேரத்திலும் கடமையறிந்து செயலாற்றல்
தனிநபர் பகைமறந்த அரசியல் .. நாகரீக செயல்பாடு நல்ல தலைவராக திரு.ஸ்டாலினை நம்மில் நிறுத்தியிருக்கிறது..
..
தலைவர் உடல்நலியுற்று இருக்கிறார் அந்த நிலையிலும் மக்கள் மீது இந்த அரசு திணித்த சொத்துவரிக்கெதிராக போராட்டத்தை முன்னெடுக்கிறார்.. இயக்கத்திற்குள் புகுந்த கயவர்களால் பிரியாணி கடை அடித்து நொறுக்கபடுகிறது.. சம்பந்தபட்டவர் நீக்கபடுவதோடு பாதிக்கபட்ட கடை ஊழியரை/ முதலாளியை சந்தித்து தனது வருத்தத்தை பதிவு செய்வதோடு வேண்டிய உதவிகள் செய்யபடுமென்கிறார்.. தலைவர் மருத்துவமனையில் இருக்கும் போது கூட தா.பா உடல் நலிவுற்று மருத்துவமனையில் என்றவுடன் சென்று பார்க்கிறார்.. பகைமை அரசியல் என்பது எம்ஜிஆரெனும் கயமை கொண்டுவந்து நம்மிடையே விட்டது .. கலைஞரை யாரேனும்,சந்த்திதால் அவரை கட்சியில் கட்டம்கட்டி அவரது பதவியை பிடிங்கி.. ஒருவித சாடிஸ்ட் மனபான்மையோடு எம்ஜிஆர் நடந்துகொள்வார்.. அது பின்வரும் நாளில் அதே குரோத மனபான்மையோடு நடந்துகொள்ள வைத்தது பின் வந்த ஜெயலலிதா கேலி கிண்டல் செய்வதை ரசித்ததோடு அவர்களுக்கு பதவி வழங்க அது தொடர்கதையானது.. நாகரீக அரசியல் என்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல அவரோடு இணைபவர்களுக்கும் தொற்றிக்கொண்டது..
..
இப்போது தான் மெல்ல மெல்ல
நல்லதொரு அரசியல்களத்தை காணமுடிகிறது அதன் தொடக்கத்திற்கு காரணம் நிச்சயமாக தளபதி.ஸ்டாலின் காரணம் ஆவார்.. முதிர்ச்சியான அரசியலை .. களத்தில் கருத்தில் கொள்கையில் மட்டுமே எதிரியே தவிர.. தனிப்பட்ட விடயத்தில் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்.. பெரியார் அண்ணா காமராஜர் கலைஞர் போன்றவர்களின் அரசியல் பண்பாட்டை மீட்டெடுத்திருக்கிறார்.. ஆம்.
எவ்வளவுதான் எம் இன எதிரியானாலும் ராஜாஜியோடு கொண்ட நட்பில் பேராசான் பெரியார் நேர்மையை கடைபிடித்தார்.. ராஜாஜியின் இளம் விதவை மகளை கண்டு குழந்தையை படிக்க வை என்று சொல்லி ..அவரின் மறுமணத்திற்கு காரணமாக இருந்தார்.. கலைஞரின் தாயார் அஞ்சகம் அம்மையார் மறைந்த போது முதல் ஆளாக கலைஞருக்கு முன்பே வீட்டுவாசலில் நின்றவர் காமராஜர் .. தன் மகன் திருமணத்தின் போது காமராஜர் வருவதற்காக மேடைவரை கார் வருவதற்கு ஏற்பாடு செய்து உடல் முடியாமல் இருந்த போதும் வந்து வாழ்த்தவேண்டுமென விரும்பியவர் கலைஞர்..
காமராஜர் மரணத்தின் போது மூத்த சகோதருக்கு அருகில் இருந்து கடமையை செய்வதுபோல செய்தவர் கலைஞர் ..
நல்ல ஆரோக்கியமான அரசியல்களத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக குரோதத்தை தொண்டர்களிடையே இரண்டாம்கட்ட தலைவர்களிடையே வளர்த்து மகோரா எனும் எம்ஜிஆர்.. நம்மிடையே பிடித்த பிணி தொலைந்ததைப்போல .. ஜெயலலிதாவோடு காழிப்புணர்வு அரசியல் ஒழிந்து நல்லதொரு தொடக்கம் முளைத்திருக்கிறது.. பன்னீரும் எடப்பாடியும் கலைஞரை நேரில் காண வருவதும்.. தலைவரென விளிப்பதும் நல்ல அறிகுறிகள்..
..
நல்ல தொடக்கம் வந்திருக்கிறது நல்லவர். நம்பிக்கையானவர் முற்போக்கு சிந்தனையாளர்
நல்ல அரசியலை நேர்மையோடு கையாள்கிறவர் பகைமை பாராட்டாதவர் கிடைத்திருக்கிறார் .. ஆம் தளபதி மிக நேர்த்தியான அரசியலை எடுத்திருக்கிறார்.. நல்ல தொடக்கம் மக்கள் இவரை பின்துணைத்தால் நல்ல சூழல் உருவாகும்,தமிழகம் நலன் பெறும்..
..
#விடிகிறது..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment