Saturday, August 4, 2018
யாரிந்த சீமான்
முதலில் சீமானை நல்ல மருத்துவரிடம் காட்டுங்கள் .. கருணாநிதியை ஏன் பார்க்க போனேன் .. ஏனென்றால் நான் நல்லவன்.. சீமானின் தில்லுமுல்லுகள் நாடறிந்தது அவரை வளர்த்துவிட்டதில் பெரியார் தி.கவிற்கு பெரும் பங்கிருப்பதை மறுக்கமுடியாது ..யாரிவன் எங்கிருந்து வருகிறாரென்பது அறிவோம்..
ஈழப்போரில் பிரபாகரனின் இறுதி உறுதிசெய்யபட்டதும் சீமான் தன்னை ஈழ விடுதலையின் மொத்த குத்தகைகாரனைப்போல காட்டிக்கொள்கிறார்
கலைஞர் மற்றும் ஜெயலலிதா அரசு இருந்தபோது அடக்கிவாசித்து இப்போது ஆரியர்களின் கைக்கூலியாய் திராவிடத்தை ஒழிப்பதற்காக புறப்பட்டிருக்கிறார்.. முதலில் இவனுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லையென்று தான் நினைத்தோம்.. கலைஞரை வந்து பார்த்துவிட்டு போய் மகா யோக்கியனைப்போல கலைஞரை துரோகி என்று சொல்லும் போது பேசாமல் இருக்கமுடியாது..
..
யார் தடுத்தாலும்/ நினைத்திருந்தாலும் விடுதலைப்புலிகளை கருவறுக்கவேண்டுமென்ற இலங்கை அரசின் முடிவை தடுத்து நிறுத்த முடியாது காரணம் சார்க் மாநாட்டில் எடுத்த / ஒப்புக்கொண்ட தீர்மானத்தின்படி இலங்கையில் நடக்கும் தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய உள்ளிட்ட ஏனைய நாடுகள் ஆதரவளிப்பளிதென்ற முடிவு..
காங்கிரஸ் என்றில்லை பாஜக ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும் .. பிரபாகரின் தான்தோன்றித்தனமும், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஆண்டன் மறைவிற்கு பிறகு தடுமாறியதும்.. கூட இருந்தவர்களை ஒவ்வொருவராக கொன்று அதிகாரமமதையில் கடைசியில் கருணாவை கொல்ல நினைத்தது தப்பி சிங்களவனிடம் அடைக்கலம் புகுந்தபோதே தனக்கான நேரம் குறிக்கபட்டதை பிரபாகரன் அறிந்திருந்தார் அதனால்தான் முல்லிவாய்க்கால் நோக்கி மக்களை நகர்த்தி மனிதகேடயமாக மாற்றியதே இனத்தின் பேரழிவிற்கு காரணமானதே தவிர.. இதில் கலைஞரின் பங்கு/செயல் எங்கிருந்து வந்தது.. கலைஞரின் ஆலோசனையை எப்போதுமே ஏற்காததே பிரபாகரின் பின்னடைவிற்கு காரணம்.. எல்லாநேரத்திலும் தோக்கு(துப்பாக்கி) காக்குமென நம்புவது போராளிக்கு தகுந்ததல்ல ..எப்போது தோக்கை கீழே வைக்கவேண்டுமென்று அறிந்திருக்கவேண்டும்
..
ஈழ விடுதலை வரலாற்றில் நிறையபேர் பங்களிப்பதை செய்திருக்கிறார்கள்.. பல்வேறு பிரிவுகளாக இருந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கபட்டதோடு.. அவர்களை கொன்று ஒரு சர்வாதிகாரியைப்போல நடந்துக்கொண்டவர் பிரபா.. உமா மகேஸ்வரன் என்ன காரணத்திற்காக கொல்லபட்டாரென இன்றைய நவீன தமிழ்தேசிய பிள்ளைகளுக்கு தெரியுமா.. கல்யாணம் செய்துகொள்ள கூடாதென்ற விதியை மீறியதால் ..ஆனால் காலபோக்கில் விதிகள் மாற்றபட்டது.. பிரபாகரனின் மறுபக்கம் மிக மோசமானதாக இருந்ததை மறுக்கமுடியுமா.. எதிர் கருத்துடையவர்களை அவர்கள் ஈழப்போராளியாக இருந்தாலும் கொல்வதை தன்னை மீறி யாரும் வளர்ந்துவிட கூடாதென்றுதானே நினைத்தார்..
மலையக தமிழர்கள், கொழும்பு இஸ்லாமிய தமிழர்களையெல்லாம் எப்போதாவது அரவணைத்திருக்கிறாரா.. ஈழமக்களின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்திருக்கிறாரா..
போராளியாக இருந்தவர்களின் இன்றைய வாழ்க்கை எப்படியிருக்கிறதென்பதை இங்குள்ள தம்பிகள் அறிவார்களா..
..
ஒருவித பதட்டத்தோடு மக்களை வைத்திருந்து கடைசியில் கொன்று போட்டதுதான் மிச்சம் ..
இப்போது கூட துரோகம் என்ற சொல்லை பயன்படுத்துபோதுதான் நிறைய கிளறவேண்டியிருக்கிறது.. சீறிசபாரத்தினத்தை கொன்ற நிகழ்வு .. பச்சிளம் குழந்தையையும் திரும்ப வந்து கொன்றதெல்லாம் பேச ஆரம்பித்தால் பிரபாவின் தோற்றம் மாறிபோகும்..
மாத்தையா ஏன் கொல்லபட்டார்.. ஈழம் மலர்ந்தால் அவர்தான் முதல் ஜனாதிபதி என்று பேசியது யார்..? பிரபாவை போராளியாக காட்டி நின்றதில் பெரும்பங்கு திராவிட இயக்கத்திற்கே உண்டு நாடே பயங்கரவாதியாக சித்தரித்தபோதும் (ராஜீவ்படுகொலையின்போது) காத்து நின்றதும் மௌனமாய் பலி சுமந்ததும் திமுகவும் கலைஞரும் தான்..
..
உண்மையில் ஈழ தமிழ் மக்களுக்காக அதிகம் செய்ததும் அதிகம் துயரபட்டதும் அதிக விலைகொடுத்ததும்.. அதிகமாக இழப்பை சந்தித்ததும் திமுகதான் கலைஞர்தான்.. பிரபாகரனை எம்ஜிஆர் கைது செய்த போதுகூட சட்ட துணையை வழங்கியது திமுகதான்.. ஆனால் இன்றைக்கு சில விவரகேடுகள் ஈழத்தை வைத்து பிழைக்கும் .. சொகுசாய் வாழும் கேடுகெட்டவர்கள் கலைஞரை குறைகூறுகிறார்கள்..
கலைஞரை குறைகூற எவனுக்கும் தகுதியில்லை..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment