Monday, August 27, 2018

திமுக..

என்னை கட்சியில் இணைக்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.. அழகிரி. உண்மையில் பரிதாபமாக இருக்கிறது அழகிரி.. அஞ்சான்நெஞ்சன் அழகிரி பெயரை உனக்கு சூட்டியபோது கலைஞர் என்ன நினைத்திருப்பார் என தோன்றியது.. விதைத்தெல்லாம் முளைப்பதில்லை முளைத்ததெல்லாம் சுவைப்பதில்லை.. .. அழகிரியின் இன்றைய பேச்சு விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு கதைப்பதாக தெரிகிறது .. கையாலாகாததனத்தை மறைக்க தற்கொலை செய்துக்கொள்வேனென மிரட்டிவதைப்போல அழகிரியின் செயல்பாடு இருக்கிறது பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத ஒருவர் எந்த தகுதியின் அடிப்படையில் உரிமை கோருகிறார்.. நாளை நீதிமன்றம் சென்று கட்சி கொடியையோ சின்னத்தையோ ஊர்வலத்தில் பயன்படுத்த கூடாதென்று தடை வாங்கினால் பரிதாபமாய் நிற்க வேண்டி வரும்.. கேலிக்குள்ளாக நேரிடும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் கூட ..உடன் வர தயாராக இல்லை உம்மை உசுப்பிவிட்டோர் கூட கைகழுவ தொடங்கிவிட்டார்கள்.. எந்த பதவியும் வேண்டாம் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளுங்களென கெஞ்சி பார்த்தும் பலனில்லை என்றவுடன் .. தலைகேறிய சூடு ..பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் பேசி சிரிப்பை வரவழைக்கிறது.. மகா கேவலம் .. தளபதி மிக சரியாக செயல்படுவதாகவே நினைக்கிறேன் ..அழகிரி போன்றோரை திரும்ப அழைத்தால் கட்சிக்கு கெட்ட பெயர்தான் வருமே தவிர நல்ல ஜனநாயக முன்னெடுப்பு தோற்றுபோகும் .. நிதானமாக மக்கள் செல்வாக்கோடு அதிகாரத்திற்கு வரவேண்டுமென்று தெளிந்த நீரோடை போல அரசியலை வடிவமைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் அழகிரியை போன்றவர்கள் அரவணைப்பதென்பது படுகுழியில் விழுவதற்கு சமம்.. முரட்டு பிடிவாதமும் திமிரும் தானென்ற அகந்தையும் கண்டதால் தான் இதுவரை கட்டிகாத்த பேரியக்கம் புதைக்குழிக்குள் செல்வதை விரும்பாமல் அழகிரியை நீக்கி .. கழகத்தை காப்பாற்றி தளபதியின் கைகளில் தந்திருக்கிறார் கலைஞர் பெருமகன்.. அழகிரி அவர்களே...ஓரமாய் ஒதுங்கி நில்லுங்கள்.. மெல்ல விலகி செல்வது தான் மரியாதையாக இருக்கும் இல்லையெனில் தமிழ் சமூகம் முன் அசிங்கபட நேரிடும் மாபெரும் தலைவரின் தலைவரின் மகன் இப்படி கேவலப்பட்டு நிற்பது பார்க்க சசிக்காது.. .. இதுவரை தளபதியின் மௌனம் நமக்கு நிறைய சொல்கிறது.. பேசி பெரியாளாக்க வேண்டாம்..அழகிரி நமக்கு தகுதியானவரில்லை செல்லாதகாசை வைத்துக்கொண்டு எதையும் அடையமுடியாது .. கத்தி கத்தி கடைசியில் ஓய்ந்து போய்விடுவார் .. மக்கள் விரும்பாத எவரும் அரசியலில் நிற்க முடியாதென்ற உண்மை அறிந்ததால் பேராசிரியர் பெருந்தகையின் வழிகாட்டுதலோடு நிறைவாக பணி செய்ய நிமர்ந்த நெஞ்சோடு நேர்வழியில் தமிழகம் காக்க தமிழினப் பெருந்தலைவரின் கனவுகளை நினைவாக்க.. மாபெரும் சுயமரியாதை இயக்கத்தை வழிநடத்த நான்காம் தலைமுறை தலைவனாய் வருகிறார் .. .. தமிழகமே நெஞ்சுநிமிர்த்தி கைதட்டி வரவேற்கிறது .. #DMKThalaivarstalin .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment